என்ன தான் படித்து, பட்டம்பெற்று, நல்ல வேலையில் இருந்தாலும், திருமணம் என்ற ஒன்று நடந்து, புகுந்த வீடு செல்லும் பெண்கள், தங்களின் சுயம் தொலைத்து, தன்மானம் விட்டு, மரியாதை என்ற பெயரில் புகுந்த வீட்டில் தன் அடையாளத்தை தொலைக்கும் நிலைதான் பெரும்பாலான வீடுகளில்.
அதை மீறி, மனைவியின் உணர்வுகளை மதிக்கும், காரியம் யாவினும் கை கொடுக்கும் கணவன், அவளது சுய மரியாதையை காயப்படுத்தாத புகுந்த வீடு பெண்களுக்கு வரம்.
அது பூவிதயாவிற்கு கிடைக்காததால் வந்த பிரிவுதானா இது?