Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Epilogue புது மஞ்சள் புது தாலி

Advertisement

அருமை..அருமை..வேற என்ன சொல்ல…இந்த மாதிரி கிராமிய மணமெல்லாம் இப்போது கதைகளில்தான் காண முடிகிறது. வெள்ளந்தி மனிதர்களின் காட்டை சுற்றி அசராமல் உழைக்கும் வேலு பூர்ணா போன்றவர்களால்தான் நகரத்தில் இருக்கும் நாம் பசியாற முடிகிறது. பிள்ளைபெற்று மூன்று வாரத்தில் வீட்டுபொறுப்பை கையில் எடுக்கும் எங்கள் பூர்ணாவுக்கு இணை அவளேதான்…அதுவும் வீட்டுவேலை செய்ய ஆள் வைத்தால் சமையலறை பாத்திரங்கள் இடம் மாறுவதை பொறுக்காத பூர்ணா..😁😁😁
(என்னையே பார்த்தமாதிரிஇருந்தது)..மூன்று மாசத்தில் அல்வாவோடும் பூவோடும் வந்து வேலு செய்யும் அலப்பறையும் அதன் விளைவாக பூர்ணா நாத்தியோடு போய் குடும்பகட்டுப்பாடு செய்து கொள்வதும்..வேற லெவல் ஆரா உங்க எழுத்து..
சரஸ்வதிதேவியின் பூர்ண ஆசிகளோடு உங்கள் அடுத்த கதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
 
Top