அழகான காதல் கதை ஷான்வி???.அம்மாவை போல நினைச்சுக்கோ என விக்கி ,வருவிடம் கூற அவன் மேல் தோன்றும் பாசம் காதலாக மாறுகிறது??.
வரு,விக்ரமை விரும்புவதும் அதை அவனிடம் சொல்வதற்க்கு முன் ஏற்படும் விபத்து,அதனால் வருவிற்க்கு பேச முடியாத நிலை ஏற்படுவதும்,வரு,விக்கியின் பிரிவு என மனதை வருத்தும் நிகழ்ச்சிகள்????.
வரு,விக்ரம்காக படிப்பு,உடையிலிருந்து அவனுக்கு பிடித்த விஷயங்களை செய்வதும்,விக்ரமிடம் முதலில் பேச வேண்டும் என நாலு வருடங்கள் யாரிடமும் பேசாமல் காத்திருப்பது இது எப்படிப்பட்ட அன்பு என நினைக்க வைக்கிறது?????.
இவ்வளவு பிரச்சனையிலும் அரவிந்த்,வித்யா காதலை தெரிந்து கொள்வதும்,அவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்வதும் அருமை???.
அரவிந்த் தங்கை மேல் கொண்ட பாசத்தில் திருமணத்தை மறுப்பதும்,தங்கைகாக விக்கி திருமணத்துக்கு சம்மதம் சொல்வதும் அருமை????.
சிறுமியாக இருந்த பம்கின்,குண்டு பூசணி,பச்சைகலர் ஜிங்குஜா என தான் கேலி செய்த பெண் தான் , தன் மனைவி என தெரிந்து கொள்வதும்,அவள் கரைகடந்த காதலை கண்டு வியப்பதும் அருமை????.
வருவின் உணர்வுகளிலும்,உள்ளத்திலும் நிறைந்த விக்ரமின் காதலை என்னவென்று சொல்ல??வலியில் அம்மான்னு கத்துவாங்கன்னா வரு கீ கீன்னு கத்துறாளா???.
வரு, விக்ரம் ,தன் குழந்தைகளுடன் விரும்பிய மகிழ்ச்சியான வாழ்வுடன் அழகான பதிவு???.
அருமையான கதை. இனிமையான முடிவு????.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷான்வி?????.