அத்தியாயம் – 5
வனமாலிக்கு அப்படியொரு கோபம்.. மனது அடங்கவே இல்லை அவனுக்கு.. அடங்க மறுக்கும் கோபம் என்பதனை விட, வீட்டினரை அடக்க முடியாது போன கோபம். ஒரு வித இயலாமையில் வந்த கோபமும் கூட என்று சொல்லலாம்.. அத்தனை சொல்லியும் இப்படி செய்தார்களே என்ற கோபம்..
அதிலும் அம்மா.. மணிராதா... இப்படியா வார்த்தைகளில் விஷம் தேய்க்க வேண்டும்?? எத்தனை நடந்தும்.. எத்தனை இழப்புகள் சந்தித்தும் கூட மனிதர்களின் அருமை புரியவில்லையே என்ற ஆதங்கம் அவனுள் இத்தனை நாள் இருக்க, இன்றோ அது ஆத்திரமாய் வெளிப்பட்டது..
கமலி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அப்படியொரு நிலையில் தன் வீட்டினரே தன்னை நிறுத்திவிட்டனரே என்று அது ஒரு பக்கம்.. எல்லாம் சேர்ந்து அவனையே அவன் வீட்டினில் இருந்து தள்ளி நிறுத்தியது..
ஆம்.. வனமாலி அவனின் வீடு சென்று இரண்டு நாட்கள் ஆகிப்போனது. அவர்களின் தியேட்டரிலேயே தாங்கிக்கொண்டான்.. வீடு போகும் எண்ணமும் வரவில்லை. வீட்டில் இருப்பவர்களின் முகம் பார்க்கவும் பிடிக்கவில்லை.
வந்தனாவும், கோவர்த்தனும் எத்தனையோ சொல்லிப் பார்த்தும், கெஞ்சியும் கூட அவன் வர மறுத்துவிட்டான்.. முதலில் மணிராதாவும் பிடிவாதமாய் இருந்தார். எங்கே சென்றாலும் இங்கேதானே வரவேண்டும் என்று. ஆனால் இரண்டு நாட்கள் கடந்து செல்லவும் அவருக்கே ஒரு பதைப்பு உள் எழ, வந்தனாவிடம் வந்து வனமாலியிடம் பேச சொன்னார்.
“ம்மா நான் எவ்வளவோ சொல்லிட்டேன் ம்மா...”
“பரவால்ல... இப்போ எனக்காக பேசு.. உன் கல்யாணம் தலைக்கு மேல இருக்கு.. இப்போ போய் இப்படி பண்றான்..” என்று மணிராதா சொல்ல,
“ம்ம் அது உனக்கு, பமீலாக்கு.. இந்திரா அத்தைக்கு எல்லாம் நினைப்பு இருக்கணும்... நிச்சயம் நடந்துட்டு இருக்கு நீ எப்படிம்மா நடந்துக்கிட்ட...” என்று வந்தனாவும் திருப்பிக் கேட்க,
“ம்ம்ச் வந்தனா.. எனக்கு அறிவுரை சொல்றதை விட்டு அவனை கூப்பிடு.. யார் யாரை எங்க வைக்கனும்னு எனக்கு நல்லா தெரியும்....” என்றவர் வனமாலிக்கு அழைக்கச் சொல்லி அங்கேயே அமர்ந்துவிட்டார்..
“ஹ்ம்ம்.. என்னவோ பண்ணுங்க..” என்று புலம்பியபடியே வனமாலிக்கு வந்தனா அழைக்க, அவனோ எடுக்கவேயில்லை..
“எடுக்கலைம்மா..”
“தியேட்டர் மேனேஜர்க்கு கூப்பிடு..”
“ம்மா..!!!!”
“நான் சொல்றேன்ல.. கூப்பிடு..”
வேண்டா வெறுப்பாகவே வந்தனா தியேட்டர் மேனேஜருக்கு அழைக்க, அவரோ “சார் அப்போவே கிளம்பி வெளிய போயிட்டாரே மேடம்..” என்றார்..
போனை வைத்தவளோ “அண்ணன் அங்க இல்லையாம்...” என,
“ஹ்ம்ம் படுபாவி.. இப்படி என் பையனை என்கிட்டே இருந்து பிரிக்கிறாளே..” என்று மணிராதா அப்போதும் கடிய,
“ம்மா.. இப்படி பேசினதுக்கு தான் எண்ணன் கிளம்பி போனான்..” என்று வந்தனாவும் சத்தம் போட்டாள்,
நிஜம் அதுதான்.. நிச்சயம் முடிந்து எல்லாம் வீடு வரவுமே வனமாலி வந்து அப்படியொரு சத்தம் போட்டான்... மண்டபத்தில் அவனால் எதுவும் பேச முடியவில்லை. பேசியிருந்தால் அது பெரும் பிரச்சனை ஆகியிருக்கும். அதிலும் கமலி பார்த்துவிட்டு போன பார்வையோ அவனை கொல்லாமல் கொன்றது..
எல்லாம் முடித்து அவனும் கோவர்த்தனும் வீடு வரவே நள்ளிரவு ஆகிவிட, உள்ளேயே கனன்றுகொண்டு இருந்தது வீட்டிற்கு வரவுமே கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது. அதிலும் பிள்ளைகள் வரவுமே
மணிராதா வந்து “கொடுக்க வேண்டியவங்களுக்கு எல்லாம் கொடுத்தாச்சா??” என்று விசாரிக்க, வனமாலியோ அவரை முறைக்க,
“என்னை ஏன் வனா முறைக்கிற??” என்றார் ஒன்றும் தெரியாதது போல்..
“ஓ.. ஏன்னு வேற சொல்லணுமா??” என்றவன் “எப்போ ம்மா நீ மாற போற?? இல்லை உனக்குள்ள ஏன் இவ்வளோ வஞ்சம் அவங்க மேல.. கூப்பிட்டதுக்கு எவ்வளோ அழகா வந்து முறை செஞ்சாங்க.. அவங்களை காயப் படுத்தி அனுப்புறது சரியா??” என்றான் ஆத்திரமாய்.
“நானா சொன்னேன் கூப்பிடுன்னு...” எகத்தாளமாய் பதில் வந்தது அவரிடமிருந்து..
“அண்ணா.. அம்மா இப்போ வேணாம் எதுவும் பேச வேணாம்.. வீட்ல ஆளுங்க இருக்காங்க.. என்ன இருந்தாலும் இது நம்ம வந்தானா விசேசம்.. நல்லது தான் நடக்கணும்.. இப்போ போய் படுக்கலாம்..” என்று கோவர்த்தன் சமாதானம் செய்ய முயல,
“டேய்.. நல்லது நடக்கனும்னு தான் நானும் நினைக்கிறேன்.. ஆனா அதுக்கு சில பேர் விடமாட்டாங்க..” என்று வனமாலி சொல்ல,
“ம்ம்ச் எனக்கு அவங்க வந்துதான் நல்லது நடக்கனுன்னு எந்த அவசியமும் இல்லை வனா.. எனக்கு பிடிக்கலை அவ்வளோதான்.. அதை அப்படித்தான் நான் காட்டுவேன்..” என்றார் மணிராதாவும்..
என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்களா... என்று ஒருவித அலுப்பாய் இருந்தது வனமாலிக்கு.. அப்படியென்ன வஞ்சம்.. அப்படியென்ன குரோதம்.. அதுவும் ஒரு குடும்பத்தில்.. ச்சே... என்றுதான் வந்தது.. இனி நாளை போய் அத்தையிடமும் கமலியிடமும் மன்னிப்பு வேறு கேட்கவேண்டும்..
‘கடவுளே...’ என்றெண்ணியவன் அவனின் அறைக்குச் சென்றுவிட்டான்.
இதோடு முடிந்தது என்றுதான் அனைவரும் இருந்தனர்.. ஆனால் அது முடியவில்லை இனிமேல் தான் ஆரம்பம் என்று காட்டிவிட்டாள் கமலி.
மறுநாள் முதல் வேலையாக வனமாலி சிவகாமியின் வீடு செல்ல, அவரோ வழக்கம் போலவே வரவேற்க, வனமாலிக்கு மனது மிகவும் சங்கடமாய் போனது. நான் அழைத்து தானே வந்தார்கள். ஆக அவர்களுக்காக நான் அங்கே நின்றிருக்க வேண்டுமே, அதைவிட்டு தங்கையின் விசேசம் என்று நொடிப் பொழுதேனும் வாய் மூடி நின்றது தப்புதானே என்றெல்லாம் தோன்ற,
“அத்தை.. ரொம்ப சாரி.. அம்மா இப்படி பேசுவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை..” மனதார மன்னிப்பு கேட்க,
“விடு வனா.. அவங்க இன்னிக்கு நேத்தா பேசுறாங்க.. என்ன அத்தனை பேர் முன்னாடி அப்படி பேசினது தான் சங்கடமா இருக்கு..” என்றார் அவரும் பெருந்தன்மையாய்.
“நானும் எவ்வளவோ சொல்லிட்டேன் அத்தை.. ஆனா கேட்கிறதா இல்லை... அவங்க பேசின வார்த்தைக்கு யாரா இருந்தாலும் சும்மா இருக்க மாட்டாங்க...” என்று வனமாலி கூறும்போதே கமலி அவளின் அறையில் இருந்து வந்தாள்.
அச்சகம் கிளம்பியிருப்பாள் போல, முதல் நாள் எல்லாம் வீட்டிற்கு வந்து அப்படியொரு சண்டை சிவகாமியோடு. அதன் பின்னே மகளை முயன்றே சமாளித்து இருந்தார். இப்போது வனமாலியைப் பார்த்ததும் மீண்டும் முருங்கை மரம் ஏறியது அவளின் கோபம்.
அவனைப் பார்த்ததுமே “எதுக்கு வந்தீங்க??!!” என்றபடிதான் இவர்களை நோக்கி வந்தாள்.
வனமாலி கமலி எப்படி நடந்துகொள்வாள் என்றே யூகத்தில் தான் வந்தான். அவளிடம் எப்படி பேசவேண்டும் என்ற முன் யோசனையும் இருந்தது அவனுக்கு. ஆனால் கமலி கூறிய வார்த்தைகள் எல்லாம் அவனின் யோசனைக்கு அப்பார்ப்பட்டது.
“இல்ல கமலி.. அது...”
“எது....” என்று அவனின் முன்னே அமர்ந்தவள், “நீங்க இனிமே இங்க வரக்கூடாது..” என,
“கமலி..!!!” என்று அதட்டினார் சிவகாமி.
“அத்தை.. கமலி பேசட்டும்...”
“நீங்க சொலித்தான் நான் பேசணும்னு இல்லை..” என்றபடி அவளின் அம்மாவைப் பார்த்து, “ம்மா... நீயும் என்னை தடுக்க முடியாது..” என,
வனமாலியோ ‘தாக்குதல் பயங்கரமா இருக்கும் போலவே...’ என்றுதான் எண்ணிக்கொண்டான்.
“சரி சொல்லு கமலி..” என்றவன் அவளின் விழிகளைப் பார்க்க, முதல் நாள் அவளின் அந்த சிவந்த விழிகளே நியாபகம் வந்தது.. அப்பப்பா தீ ஜ்வாலை போல் அல்லவா ஜொலித்தது. இன்றும் அதே அனல் அவளின் விழிகளில் தெரிய அந்த சிவப்பு இல்லையோ என்று அவளின் கண்களோடு வனமாலி ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளத் தொடங்க, வனமாலியின் இந்த இமைக்காத பார்வையே கமலிக்கு முதலில் ஒரு எரிச்சலை உண்டு செய்தது..
“உங்களைதான் எதுக்கு வந்தீங்க??” என்றாள் குரலை உயர்த்தி அதிகாரமாய்..
“கமலிம்மா...” என்று இம்முறை சிவகாமி கொஞ்சம் தன்மையாய் மகளை தடுக்க முயல,
“ம்மா என்னை பேச விடுறியா இல்லை இப்படி நான் போகட்டுமா??” என்றாள் அடக்கப்பட்ட கோபத்தோடு இவளும்..
“அத்தை ப்ளீஸ் அவ பேசட்டுமே...”
“இல்ல வனா...” என்று சிவகாமி மறுக்கும்போதே, “சரிம்மா.. என்னோட மனசுல இருக்கிறதை கூட நான் சொல்லக்கூடாது அப்படின்னா பின்ன ஏன் நான் இங்க இருக்கணும்.. இத்தனை வருஷம் ஹாஸ்டல்ல தானே இருந்தேன்.. இனியும் அப்படியே..” என்றவள் சொல்லிக்கொண்டே எழுந்துவிட,
“கமலி..!!!” என்று அதிர்ந்து அழைத்தபடி மற்ற இருவருமே எழுந்துவிட்டனர்.
சிவகாமியின் கண்கள் கலங்கிவிட, வனமாலிக்கோ மிக மிக சங்கடமாய் போனது.. கமலிக்கோ அம்மாவின் அழுகையை கண்டு இன்னமும் வேகம் கூடியது.
“பார்த்தீங்கல்ல... இந்த கண்ணீருக்கு உங்கனால பதில் சொல்ல முடியுமா?? சொல்லுங்க முடியுமா?? இத்தனை வருசமா இப்படிதான் எங்கம்மா அவங்களுக்குள்ளவே கலங்கி.. தவிச்சு.. இப்படி எத்தனையோ.. அதுக்கெல்லாம் உங்கனால பதில் சொல்ல முடியுமா??
பெருசா பேச வந்துடுறீங்க அத்தை சொத்தைன்னு.. இல்லை கேட்கிறேன் என்ன பண்ணிட்டீங்க நீங்க?? அத்தை அத்தைன்னு வர்றீங்க தானே.. இவங்களுக்காக என்ன செஞ்சுட்டீங்க நீங்க.. என்னைத்தான் எல்லாத்துல இருந்தும் எங்கம்மா தடுத்து வச்சிருக்காங்க.. ஆனா உங்களுக்கு அப்படியான எதுவுமே இல்லையே.. அவ்வளோ ஏன் நேத்து கூட வாய் மூடிதானே நின்னீங்க..” என்று கமலி பேச பேச, வனமாலி மௌனமாகித்தான் நின்றிருந்தான்.
அவனிடம் வார்த்தைகள் இல்லையே பதில் சொல்ல.. அவளின் ஒவ்வொரு பேச்சும்.. அவளின் ஒவ்வொரு கேள்வியும் நியாயம் தானே.. என்ன செய்துவிட்டான் அவன்.??
‘என்ன செய்தாய் நீ??’ அவள் கேட்ட இந்த கேள்விக்கு அவனிடம் இதுவரைக்கும் எப்பதிலும் இல்லை.. ஆனால் இனி பதில் தேடும் முடிவு அவனுள் வந்துவிட்டது. ஆம்.. இனியும் சும்மா இருந்தால் அது அனைவருக்குமே தான் பிரச்சனை வரும்.. இதற்கு முன் நடந்தவைகளை விட இனி நிறைய நடந்துவிடும் என்ற எண்ணம் அவனுள் வலுப்பெற்றது.
வனமாலிக்கு அப்படியொரு கோபம்.. மனது அடங்கவே இல்லை அவனுக்கு.. அடங்க மறுக்கும் கோபம் என்பதனை விட, வீட்டினரை அடக்க முடியாது போன கோபம். ஒரு வித இயலாமையில் வந்த கோபமும் கூட என்று சொல்லலாம்.. அத்தனை சொல்லியும் இப்படி செய்தார்களே என்ற கோபம்..
அதிலும் அம்மா.. மணிராதா... இப்படியா வார்த்தைகளில் விஷம் தேய்க்க வேண்டும்?? எத்தனை நடந்தும்.. எத்தனை இழப்புகள் சந்தித்தும் கூட மனிதர்களின் அருமை புரியவில்லையே என்ற ஆதங்கம் அவனுள் இத்தனை நாள் இருக்க, இன்றோ அது ஆத்திரமாய் வெளிப்பட்டது..
கமலி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அப்படியொரு நிலையில் தன் வீட்டினரே தன்னை நிறுத்திவிட்டனரே என்று அது ஒரு பக்கம்.. எல்லாம் சேர்ந்து அவனையே அவன் வீட்டினில் இருந்து தள்ளி நிறுத்தியது..
ஆம்.. வனமாலி அவனின் வீடு சென்று இரண்டு நாட்கள் ஆகிப்போனது. அவர்களின் தியேட்டரிலேயே தாங்கிக்கொண்டான்.. வீடு போகும் எண்ணமும் வரவில்லை. வீட்டில் இருப்பவர்களின் முகம் பார்க்கவும் பிடிக்கவில்லை.
வந்தனாவும், கோவர்த்தனும் எத்தனையோ சொல்லிப் பார்த்தும், கெஞ்சியும் கூட அவன் வர மறுத்துவிட்டான்.. முதலில் மணிராதாவும் பிடிவாதமாய் இருந்தார். எங்கே சென்றாலும் இங்கேதானே வரவேண்டும் என்று. ஆனால் இரண்டு நாட்கள் கடந்து செல்லவும் அவருக்கே ஒரு பதைப்பு உள் எழ, வந்தனாவிடம் வந்து வனமாலியிடம் பேச சொன்னார்.
“ம்மா நான் எவ்வளவோ சொல்லிட்டேன் ம்மா...”
“பரவால்ல... இப்போ எனக்காக பேசு.. உன் கல்யாணம் தலைக்கு மேல இருக்கு.. இப்போ போய் இப்படி பண்றான்..” என்று மணிராதா சொல்ல,
“ம்ம் அது உனக்கு, பமீலாக்கு.. இந்திரா அத்தைக்கு எல்லாம் நினைப்பு இருக்கணும்... நிச்சயம் நடந்துட்டு இருக்கு நீ எப்படிம்மா நடந்துக்கிட்ட...” என்று வந்தனாவும் திருப்பிக் கேட்க,
“ம்ம்ச் வந்தனா.. எனக்கு அறிவுரை சொல்றதை விட்டு அவனை கூப்பிடு.. யார் யாரை எங்க வைக்கனும்னு எனக்கு நல்லா தெரியும்....” என்றவர் வனமாலிக்கு அழைக்கச் சொல்லி அங்கேயே அமர்ந்துவிட்டார்..
“ஹ்ம்ம்.. என்னவோ பண்ணுங்க..” என்று புலம்பியபடியே வனமாலிக்கு வந்தனா அழைக்க, அவனோ எடுக்கவேயில்லை..
“எடுக்கலைம்மா..”
“தியேட்டர் மேனேஜர்க்கு கூப்பிடு..”
“ம்மா..!!!!”
“நான் சொல்றேன்ல.. கூப்பிடு..”
வேண்டா வெறுப்பாகவே வந்தனா தியேட்டர் மேனேஜருக்கு அழைக்க, அவரோ “சார் அப்போவே கிளம்பி வெளிய போயிட்டாரே மேடம்..” என்றார்..
போனை வைத்தவளோ “அண்ணன் அங்க இல்லையாம்...” என,
“ஹ்ம்ம் படுபாவி.. இப்படி என் பையனை என்கிட்டே இருந்து பிரிக்கிறாளே..” என்று மணிராதா அப்போதும் கடிய,
“ம்மா.. இப்படி பேசினதுக்கு தான் எண்ணன் கிளம்பி போனான்..” என்று வந்தனாவும் சத்தம் போட்டாள்,
நிஜம் அதுதான்.. நிச்சயம் முடிந்து எல்லாம் வீடு வரவுமே வனமாலி வந்து அப்படியொரு சத்தம் போட்டான்... மண்டபத்தில் அவனால் எதுவும் பேச முடியவில்லை. பேசியிருந்தால் அது பெரும் பிரச்சனை ஆகியிருக்கும். அதிலும் கமலி பார்த்துவிட்டு போன பார்வையோ அவனை கொல்லாமல் கொன்றது..
எல்லாம் முடித்து அவனும் கோவர்த்தனும் வீடு வரவே நள்ளிரவு ஆகிவிட, உள்ளேயே கனன்றுகொண்டு இருந்தது வீட்டிற்கு வரவுமே கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது. அதிலும் பிள்ளைகள் வரவுமே
மணிராதா வந்து “கொடுக்க வேண்டியவங்களுக்கு எல்லாம் கொடுத்தாச்சா??” என்று விசாரிக்க, வனமாலியோ அவரை முறைக்க,
“என்னை ஏன் வனா முறைக்கிற??” என்றார் ஒன்றும் தெரியாதது போல்..
“ஓ.. ஏன்னு வேற சொல்லணுமா??” என்றவன் “எப்போ ம்மா நீ மாற போற?? இல்லை உனக்குள்ள ஏன் இவ்வளோ வஞ்சம் அவங்க மேல.. கூப்பிட்டதுக்கு எவ்வளோ அழகா வந்து முறை செஞ்சாங்க.. அவங்களை காயப் படுத்தி அனுப்புறது சரியா??” என்றான் ஆத்திரமாய்.
“நானா சொன்னேன் கூப்பிடுன்னு...” எகத்தாளமாய் பதில் வந்தது அவரிடமிருந்து..
“அண்ணா.. அம்மா இப்போ வேணாம் எதுவும் பேச வேணாம்.. வீட்ல ஆளுங்க இருக்காங்க.. என்ன இருந்தாலும் இது நம்ம வந்தானா விசேசம்.. நல்லது தான் நடக்கணும்.. இப்போ போய் படுக்கலாம்..” என்று கோவர்த்தன் சமாதானம் செய்ய முயல,
“டேய்.. நல்லது நடக்கனும்னு தான் நானும் நினைக்கிறேன்.. ஆனா அதுக்கு சில பேர் விடமாட்டாங்க..” என்று வனமாலி சொல்ல,
“ம்ம்ச் எனக்கு அவங்க வந்துதான் நல்லது நடக்கனுன்னு எந்த அவசியமும் இல்லை வனா.. எனக்கு பிடிக்கலை அவ்வளோதான்.. அதை அப்படித்தான் நான் காட்டுவேன்..” என்றார் மணிராதாவும்..
என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்களா... என்று ஒருவித அலுப்பாய் இருந்தது வனமாலிக்கு.. அப்படியென்ன வஞ்சம்.. அப்படியென்ன குரோதம்.. அதுவும் ஒரு குடும்பத்தில்.. ச்சே... என்றுதான் வந்தது.. இனி நாளை போய் அத்தையிடமும் கமலியிடமும் மன்னிப்பு வேறு கேட்கவேண்டும்..
‘கடவுளே...’ என்றெண்ணியவன் அவனின் அறைக்குச் சென்றுவிட்டான்.
இதோடு முடிந்தது என்றுதான் அனைவரும் இருந்தனர்.. ஆனால் அது முடியவில்லை இனிமேல் தான் ஆரம்பம் என்று காட்டிவிட்டாள் கமலி.
மறுநாள் முதல் வேலையாக வனமாலி சிவகாமியின் வீடு செல்ல, அவரோ வழக்கம் போலவே வரவேற்க, வனமாலிக்கு மனது மிகவும் சங்கடமாய் போனது. நான் அழைத்து தானே வந்தார்கள். ஆக அவர்களுக்காக நான் அங்கே நின்றிருக்க வேண்டுமே, அதைவிட்டு தங்கையின் விசேசம் என்று நொடிப் பொழுதேனும் வாய் மூடி நின்றது தப்புதானே என்றெல்லாம் தோன்ற,
“அத்தை.. ரொம்ப சாரி.. அம்மா இப்படி பேசுவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை..” மனதார மன்னிப்பு கேட்க,
“விடு வனா.. அவங்க இன்னிக்கு நேத்தா பேசுறாங்க.. என்ன அத்தனை பேர் முன்னாடி அப்படி பேசினது தான் சங்கடமா இருக்கு..” என்றார் அவரும் பெருந்தன்மையாய்.
“நானும் எவ்வளவோ சொல்லிட்டேன் அத்தை.. ஆனா கேட்கிறதா இல்லை... அவங்க பேசின வார்த்தைக்கு யாரா இருந்தாலும் சும்மா இருக்க மாட்டாங்க...” என்று வனமாலி கூறும்போதே கமலி அவளின் அறையில் இருந்து வந்தாள்.
அச்சகம் கிளம்பியிருப்பாள் போல, முதல் நாள் எல்லாம் வீட்டிற்கு வந்து அப்படியொரு சண்டை சிவகாமியோடு. அதன் பின்னே மகளை முயன்றே சமாளித்து இருந்தார். இப்போது வனமாலியைப் பார்த்ததும் மீண்டும் முருங்கை மரம் ஏறியது அவளின் கோபம்.
அவனைப் பார்த்ததுமே “எதுக்கு வந்தீங்க??!!” என்றபடிதான் இவர்களை நோக்கி வந்தாள்.
வனமாலி கமலி எப்படி நடந்துகொள்வாள் என்றே யூகத்தில் தான் வந்தான். அவளிடம் எப்படி பேசவேண்டும் என்ற முன் யோசனையும் இருந்தது அவனுக்கு. ஆனால் கமலி கூறிய வார்த்தைகள் எல்லாம் அவனின் யோசனைக்கு அப்பார்ப்பட்டது.
“இல்ல கமலி.. அது...”
“எது....” என்று அவனின் முன்னே அமர்ந்தவள், “நீங்க இனிமே இங்க வரக்கூடாது..” என,
“கமலி..!!!” என்று அதட்டினார் சிவகாமி.
“அத்தை.. கமலி பேசட்டும்...”
“நீங்க சொலித்தான் நான் பேசணும்னு இல்லை..” என்றபடி அவளின் அம்மாவைப் பார்த்து, “ம்மா... நீயும் என்னை தடுக்க முடியாது..” என,
வனமாலியோ ‘தாக்குதல் பயங்கரமா இருக்கும் போலவே...’ என்றுதான் எண்ணிக்கொண்டான்.
“சரி சொல்லு கமலி..” என்றவன் அவளின் விழிகளைப் பார்க்க, முதல் நாள் அவளின் அந்த சிவந்த விழிகளே நியாபகம் வந்தது.. அப்பப்பா தீ ஜ்வாலை போல் அல்லவா ஜொலித்தது. இன்றும் அதே அனல் அவளின் விழிகளில் தெரிய அந்த சிவப்பு இல்லையோ என்று அவளின் கண்களோடு வனமாலி ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளத் தொடங்க, வனமாலியின் இந்த இமைக்காத பார்வையே கமலிக்கு முதலில் ஒரு எரிச்சலை உண்டு செய்தது..
“உங்களைதான் எதுக்கு வந்தீங்க??” என்றாள் குரலை உயர்த்தி அதிகாரமாய்..
“கமலிம்மா...” என்று இம்முறை சிவகாமி கொஞ்சம் தன்மையாய் மகளை தடுக்க முயல,
“ம்மா என்னை பேச விடுறியா இல்லை இப்படி நான் போகட்டுமா??” என்றாள் அடக்கப்பட்ட கோபத்தோடு இவளும்..
“அத்தை ப்ளீஸ் அவ பேசட்டுமே...”
“இல்ல வனா...” என்று சிவகாமி மறுக்கும்போதே, “சரிம்மா.. என்னோட மனசுல இருக்கிறதை கூட நான் சொல்லக்கூடாது அப்படின்னா பின்ன ஏன் நான் இங்க இருக்கணும்.. இத்தனை வருஷம் ஹாஸ்டல்ல தானே இருந்தேன்.. இனியும் அப்படியே..” என்றவள் சொல்லிக்கொண்டே எழுந்துவிட,
“கமலி..!!!” என்று அதிர்ந்து அழைத்தபடி மற்ற இருவருமே எழுந்துவிட்டனர்.
சிவகாமியின் கண்கள் கலங்கிவிட, வனமாலிக்கோ மிக மிக சங்கடமாய் போனது.. கமலிக்கோ அம்மாவின் அழுகையை கண்டு இன்னமும் வேகம் கூடியது.
“பார்த்தீங்கல்ல... இந்த கண்ணீருக்கு உங்கனால பதில் சொல்ல முடியுமா?? சொல்லுங்க முடியுமா?? இத்தனை வருசமா இப்படிதான் எங்கம்மா அவங்களுக்குள்ளவே கலங்கி.. தவிச்சு.. இப்படி எத்தனையோ.. அதுக்கெல்லாம் உங்கனால பதில் சொல்ல முடியுமா??
பெருசா பேச வந்துடுறீங்க அத்தை சொத்தைன்னு.. இல்லை கேட்கிறேன் என்ன பண்ணிட்டீங்க நீங்க?? அத்தை அத்தைன்னு வர்றீங்க தானே.. இவங்களுக்காக என்ன செஞ்சுட்டீங்க நீங்க.. என்னைத்தான் எல்லாத்துல இருந்தும் எங்கம்மா தடுத்து வச்சிருக்காங்க.. ஆனா உங்களுக்கு அப்படியான எதுவுமே இல்லையே.. அவ்வளோ ஏன் நேத்து கூட வாய் மூடிதானே நின்னீங்க..” என்று கமலி பேச பேச, வனமாலி மௌனமாகித்தான் நின்றிருந்தான்.
அவனிடம் வார்த்தைகள் இல்லையே பதில் சொல்ல.. அவளின் ஒவ்வொரு பேச்சும்.. அவளின் ஒவ்வொரு கேள்வியும் நியாயம் தானே.. என்ன செய்துவிட்டான் அவன்.??
‘என்ன செய்தாய் நீ??’ அவள் கேட்ட இந்த கேள்விக்கு அவனிடம் இதுவரைக்கும் எப்பதிலும் இல்லை.. ஆனால் இனி பதில் தேடும் முடிவு அவனுள் வந்துவிட்டது. ஆம்.. இனியும் சும்மா இருந்தால் அது அனைவருக்குமே தான் பிரச்சனை வரும்.. இதற்கு முன் நடந்தவைகளை விட இனி நிறைய நடந்துவிடும் என்ற எண்ணம் அவனுள் வலுப்பெற்றது.