மைக்கேலிடம், “சரி அவன் தான் உனக்கு உதவி பண்ணலையே. அப்புறம் நாங்க விசாரிக்கும் போது ஏன் சொல்லல. “ “ஏற்கனவே ராபர்ட் விஷயத்துல நான் மாட்டி இருக்க. இது பொண்ணு சம்பந்தப்பட்ட விஷயம். என்ன இருந்தாலும் ஒரு தகப்பனா என் பையன் வாழ்க்கை முக்கியமா பட்டுச்சு. அதனாலதான் என்ன நடந்தாலும் சொல்லக் கூடாதுன்னு முடிவு பண்ணுனேன் சார்.” “பரவால்ல அப்பனும் மகனும் எவ்வளவு பெரிய அயோக்கியங்களா இருந்தாலும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல பாசம் தான். அந்தப் பாசம் […]
Readmore“சரி அவன் தான் உனக்கு உதவி பண்ணலையே. அப்புறம் நாங்க விசாரிக்கும் போது ஏன் சொல்லல. ” “ஏற்கனவே ராபர்ட் விஷயத்துல நான் மாட்டி இருக்க. இது பொண்ணு சம்பந்தப்பட்ட விஷயம். என்ன இருந்தாலும் ஒரு தகப்பனா என் பையன் வாழ்க்கை முக்கியமா பட்டுச்சு. அதனாலதான் என்ன நடந்தாலும் சொல்லக் கூடாதுன்னு முடிவு பண்ணுனேன் சார்.” “பரவால்ல அப்பனும் மகனும் எவ்வளவு பெரிய அயோக்கியங்களா இருந்தாலும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல பாசம் தான். அந்தப் பாசம் தான் […]
Readmoreநடந்ததை சொல்லி முடித்ததும்…பயத்தில் அங்கிருந்த நால்வரையும் பார்க்க , ஆரதியின் கைகள் அடிப்பதையும் மறந்து அந்தரத்தில் நின்றுக்கொண்டிருந்தது . ஆண்கள் மூவரின் கண்ணிலும் கண்ணீர் துளிகள். சில நொடிகள் அமைதியாக இருந்தது அந்த அறை. கை நடுக்கத்தில் மெது மெதுவாக ஆரதிக்கு உடல் தளர ஆரம்பித்தது. அதை கண்டுகொண்ட தினேஷ் கண்ணனிடம் சொல்ல, அவனும் வேகமாக ஆரதியிடம் சென்று பிடித்துக் கொள்ள முயல, அவனை அருகில் நெருங்க விடாமல் தடுத்தவள்.. யாரையும் பார்க்காமல் வேறு அறைக்குள் சென்று […]
Readmore“சொல்லு சொல்லு … நீ என்ன சொல்ல போறான்னு எங்க நாலு பேருக்கும் தெரியும்.” பயத்தில் எச்சில் விழுங்கியவாறே, “பிரக்னண்டா இருக்கிறதா சொன்னா மேடம். இதை உடனே என்னோட அப்பா கிட்ட சொன்னேன். முதல்ல திட்ட ஆரம்பிச்சாவரு… கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணு கிட்ட பேசி குழந்தையை அபார்ட் பண்ண சொன்னாரு. நானும் அனிதா கிட்ட எவ்வளவோ பேசிப் பார்த்தேன் முடிவா மறுத்துட்டாள். தொடர்ந்து எங்களுக்குள்ள சண்டை வர ஆரம்பிச்சது. நான் அவளை பார்க்குறதை நிறுத்திட்டேன். அனிதா […]
Readmoreபின்னால் வந்த ரதி தேவி தன் மீது மோத.. ஒரு அடி முன் சென்று நின்றவள் தானாகவே “சந்திரன்” என உதடுகளை அசைத்தாள். இதை அறியாத ரதிதேவி மீண்டும் வீட்டிற்குள் அழைக்க, அசையாது அங்கேயே நின்றாள் ஆரதி. இரு பெண்களின் பேச்சு சத்தத்தைக் கூட காதில் வாங்காமல் மைக்கேலின் மகன் அங்கிருக்கும் தோட்டத்தின் புறம் ஒருபாதி திரும்பி நின்று கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க, அதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள் ஆரதி. மூளையின் செயல்பாடுகள் மின்னல் வேகத்தில் […]
Readmoreகாலையில் சீக்கிரமாக எழுந்த மஹாலட்சுமிக்கு ஒன்றும் பிடிபடவில்லை. எந்த வேலை செய்வது என்று தெரியாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்க, அதை கவனித்த நாராயணன் கிண்டல் செய்ய ஆரம்பித்தார். கணவனின் வார்த்தைக்கு மதிப்பளிக்காத மஹாலட்சுமி, “அண்ணி நான் சொன்ன வேலையெல்லாம் முடிஞ்சுதா?” “அதெல்லாம் முடிஞ்சு அண்ணி. நல்ல நேரம் போறதுக்குள்ள எல்லாத்தையும் ரெடி பண்ணிடலாம்.” “அண்ணன் எங்க?” “ரெடி ஆகிட்டு இருக்காரு அண்ணி. ” சரஸ்வதியின் பேச்சுக்கு தன் கணவனை முறைத்த மஹாலட்சுமி, “அண்ணனை பாருங்க… பொண்ண பெத்தவரா […]
Readmoreசரஸ்வதி, போனில் சண்முகத்திடம் ஆரதி கண்ணன் இருவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை கூற அவரோ மகிழ்ச்சியில் அதற்கான ஏற்பாட்டை தொடங்கியிருந்தார். இதைப்பற்றி நாராயணனிடம் பேசி நிச்சயதார்த்தத்திற்கு தேதி குறிக்க சொல்ல, அவரோ அடுத்த வாரத்தில் ஒரு நாளைச் சொல்லி அதை வீட்டில் இருக்கும் தன் துணையிடம் தெரிவித்து உத்தரவும் பெற்றிருந்தனர் இருவரும். நிச்சய தேதி குறிக்கப்பட்ட உடன் சண்முகம் சென்னைக்கு கிளம்பி வர, இதைப் பற்றி சம்பந்தப்பட்ட ஆரதி கண்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. மகிழ்ச்சியான தருணம் மன உறுத்தலோடு […]
Readmore“நியூஸ் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். மைக்கேல் எந்தப் பிரச்சினையும் பண்ண மாட்டேன்னு பணம் வாங்கிட்டு போயிட்டான். ஆனா ராபர்ட் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லிடுவான்னு அவனை பத்தி விசாரிச்சிட்டு இருந்தேன். இறந்ததை கேள்விப்பட்டதும் இதுல வேற ஏதோ சிக்கல் இருக்கிறத புரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து நியூஸ் பார்த்து மத்த விஷயங்களை இப்ப வரைக்கும் தெரிஞ்சுகிட்டு வரேன்.” “இதுல ரதிதேவி சம்மந்தப்பட்டு இருக்காங்களா?” சிறிது நேரம் அமைதியாக இருந்தவரை தட்டிய தினேஷ், கண்ணன் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்க, “இல்ல இதுல […]
Readmoreமைக்கேல் சொன்ன தகவல் படி கொல்கத்தா போலீசிற்கு தகவல் தர அவர்கள் மணிகண்டனை விசாரணைக்கு அழைக்க வீட்டிற்கு சென்று இருந்தனர். அங்கு மணிகண்டன் இல்லாமல் போக, விசாரணையில் தன் மகளை பார்க்க சென்னைக்கு வந்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே தகவல் சொல்லப்பட்டது கண்ணன் குழுவிற்கு. தங்களை மேலும் அலைய வைக்காமல் தானாகவே வந்து சிக்கும் மணிகண்டனை எண்ணி சிரிப்புதான் கண்ணனுக்கு. அவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தான் தன் வீட்டில். இதை பற்றி ஆரதி இடம் கூட சொல்லாமல் இருந்தான் […]
Readmore“பணத்தை எடுத்துக்கிட்டு எங்க போறதுன்னு தெரியாம பாதிவழியில் நிற்கும் போதுதான் ஒரு லாரி வந்துச்சு. அதை வழிமறித்து கொல்கத்தாவுக்கு வந்துட்டேன். வரும்போது வெங்கடாச்சலம் கூட நல்ல பழக்கம் ஏற்பட்டுடுச்சி சார். அவனும் காசுக்காக அலையிறது தெரிஞ்சுகிட்டு… காசு கொடுத்து அவன் வீட்டிலேயே தங்கினேன். ராபர்ட் னு நினைச்சி என்ன தேடுறது தெரிஞ்சதும்.. அங்கு இருந்து தப்பிக்க பார்த்தேன். அதான் கடைசியா அவன் கிட்ட சொல்லிட்டு வெளியே வந்துட்டேன். கொல்கத்தா போலீசும் ராபர்ட்டை வெளிய அங்கங்க கண்காணிக்கிறத தெரிஞ்சுகிட்டு… […]
Readmore