Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எ லவ் 7.2

இப்போது பிரஷாந்தும் அவனை பாட சொல்லி கேட்க, கடைசியில் பவித்ரா கூட பாட சொல்ல, லேசாக சம்யுக்தாவை பொய்யாய் முறைத்தவன், மேசை மீது இரு கைகளாலும் மெலிதாய் தாளமிட்டுக்கொண்டே மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான். “குளிச்சா குத்தாலம்… கும்பிட்டா பரமசிவம்! குடிச்சா நீர்மோரு… புடிச்சா நீ…தாண்டி…! சொக்குப்பொடி மீனாட்சி… சொக்கநாதன் நான் தாண்டி!” அவன் போடும் தாளம் போலவே பிரஷாந்தும் செய்ய, நால்வருக்குமே இறுக்கங்கள் தளர்ந்து புத்துணர்ச்சியாய் இருந்தது. “அடுத்து யாரு?” “எனக்கு பாட வராதுப்பா!” சம்யு […]

Readmore

எ லவ் 7.1

7 அந்த வீட்டை பொறுத்தவரை மட்டும் தான் மணி இன்னும் விடியற்காலை மூன்று! ஆனால், உண்மையில் அவர்கள் அந்த கானகத்திற்குள் நுழைந்து, முழுதாய் பத்து மணி நேரங்கள் முடிந்திருந்தது. மதியம் ஒரு மணி! தனது அலுவலக அறையில் இயக்குனர் ஒருவரிடம் கதைக்கேட்டுக்கொண்டிருந்த ராஜசேகர், அந்த கதையோடு மனம் லயிக்க முடியாமல், அடிக்கடி தன் அலைபேசியை எடுத்து பார்த்தவண்ணமே இருந்தார். சொல்லிக்கொண்டிருந்த கதை இடைவேளையை நெருங்கப்போகும் நேரம் ஆகிக்கூட ராஜசேகருக்கு மனதில் ஒன்றுமே பதியவில்லை. அவருக்கே தான் செய்வது […]

Readmore

எ லவ் 6

நால்வரும் நாலாப்பக்கமாய் அமர்ந்து பல நிமிடங்கள் கடந்திருந்தது. அப்போது கேட்ட அந்த குரலுக்கு பிறகு எந்தவித சத்தமும், அரவமும், அச்சுறுத்தும் அமானுஷ்ய ஐட்டங்களும் நடக்காமல் இருக்க, வித்தகனை தவிர மீதி மூவரின் இறுக்கமும் தளர்ந்திருந்தது. மனதை கவ்வியிருந்த பயம் அகண்டிருக்க, சற்று ஆசுவாசமாய் அவர்கள் இளைப்பாறும்போது தான், சிந்தனை அந்த வீட்டை தாண்டி பயணித்தது. பிரஷாந்துக்கு நெஞ்சு அடித்துக்கொண்டது. பயத்தில் ஏதேதோ பேசிவிட்டிருந்தான் பவியை. நல்லாய், சக்கரைக்கட்டி போல பேசும்போதே, ‘நீ வேண்டாம் போடா’ என்பவள், இப்போது […]

Readmore

எ லவ் 5.2

            இந்நால்வர் இருக்கும் இடத்திற்கு சற்றும் தொடர்பில்லாத, வேறொரு பிரதேசத்தில்… அதாவது ‘பிற’தேசத்தில்… மனிதர்கள் கண்ணிற்க்கே புலப்படாத ஒரு விஷேட விஷயம் அரங்கேறிக்கொண்டிருந்தது. சோப்பு நுரை வட்ட வளையத்திற்குள் புகுந்து வெளிவரும்போது, ஒரு உரு கொள்ளுமே! அது போன்ற ஒரு காற்றில் மிதக்கும் கனமற்ற ஓர் வளையம்! உற்று பார்த்தாலும் அதன் இருப்பை கண்கள் அறிய முடியாத வண்ணம் காற்றில் மிதந்துக்கொண்டிருந்தது. அந்த வளையத்திற்குள் பெரிதாய் என்ன இருக்கக்கூடும்!? காற்றை […]

Readmore

எ லவ் 5.1

5 நால்வரின் கண்களும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சாண்டிலியர் மீது தான்! இமைகள் என்ற ஒன்று இருக்கிறதா? இல்ல வேலையை ராஜினாமா செய்துவிட்டதா என்று புரியாதபடி விரிந்த கண்கள் விரிந்த நிலையிலேயே இருக்க, அவர்களை நடப்புக்கு கொண்டு வந்தது, கதவின் மேல் சுவற்றில் காஞ்சிபுரம் இட்டலி தட்டு சைசில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின் ‘டங்’கென்ற சத்தம்! இமைகள் தங்கள் வேலையை தொடர, அனிச்சையாய் தலைகள் சத்தம் கேட்ட திக்கில் அண்ணார்ந்து பார்த்தன. மணி ‘மூன்று’ என்று காட்டியது அது! வித்தகன் […]

Readmore

எ லவ் 4.2

பவித்ரா முகத்தில் அடித்தது போல ‘நீ ஏன் இங்க வந்த?’ என்றதும் சில நொடிகள் பேச்சற்று நின்றான் பிரஷாந்த். பின், “என்ன விளையாடுறியா? நடுராத்திரில வண்டிய எடுத்துட்டு போயிட்டு இருக்க… கூப்பிட்டா நிக்கவும் இல்ல… இந்த காட்டுக்குள்ள வந்து, என்னையும் அலைய விட்டு…!” அவன் பேச, “இங்க வந்ததே உன்னால தான்… உன்னை யார் என்னை ஃபாலோ பண்ண சொன்னது? உன்கிட்ட சிக்க கூடாதுன்னு இந்த காட்டுக்குள்ள நுழைஞ்சு இப்போ எப்டி வெளில போறதுன்னு தெரியாம நிக்குறேன்!” […]

Readmore

எ லவ் 4.1

4 பவித்ரா அவ்வீட்டின் வெளியே இருந்த பெயர் பலகையில் கைவைத்து, ‘எ லவ் வீடு’ என வாசித்தபோது, வித்தகன் அந்த வீட்டை தன் கண்களால் அளவெடுக்க ஆரம்பித்திருந்தான். “உள்ள போலாமா? இல்ல யாரும் இருப்பாங்களா?” என்ற பவித்ராவின் குரலில் திரும்பியவன், “தெரியல” என்றான் மொட்டையாய். அவளும் அதற்குமேல் அவனை துருவவில்லை. இந்த காட்டுக்குள் வீடிருப்பதே அரிது! அதிலும் இப்படியொரு அழகியலில் அமைந்த வீடென்றால்…? அந்த ஆச்சர்யம் அவளுக்குள்ளும் இருந்தது. வரவேற்ப்பாய் இருபுறமும் இருந்த தோட்டத்தை கடந்து மூன்று […]

Readmore

எ லவ் 3

3 பிரஷாந்திடம் இருந்து பாதி பேச்சில் எழுந்து சென்றுவிட்ட பவித்ரா, மீண்டும் தன் தந்தையிடம் முறையிட்டாள், முன்பை விட வலுவாய். ஆனால், அவளை விட அவரது பிடிவாதம் படுபயங்கரமாய் இருக்க, விட்டால் இரவோடு இரவாய் தாலி கட்ட வைத்துவிடுவார் போன்று இருந்தது அவர் பேச்சு. இனி பேசி பிரயோஜனமில்லை என்று உணர்ந்தவள் மௌனமாய் அறைக்குள் சென்று முடங்கினாள். ஒரு நாள் முழுதும் வெளியே வராமல் அறைக்குள்ளேயே தவம் செய்தவளை அவள் தந்தையும் சீண்டவில்லை. மாறாக, பிரஷாந்தை அழைத்து, […]

Readmore

எ லவ் 2

2 வித்தகனின் கரத்தை கெட்டியாய் பற்றிக்கொண்டு அந்த திறந்தவெளி உணவகத்துக்குள் நுழைந்தாள் சம்யுக்தா. எப்போதும் அவளாய் தான் அவனை அழைப்பாள். இன்றோ அவனே அதிசயமாய் அழைத்து ‘வெளில போலாம் வா’ என்றதும் அப்படியொரு மகிழ்ச்சி ஊற்று அவளுக்கு.  பிடித்த கையை விடாமல் அவனோடு பாதையை அடைத்துக்கொண்டு அவள் நடந்து வர, திடீரென எதிரே வந்த ஒருவனை அவள் எதிர்ப்பார்க்கவில்லை.  உணர்ந்து நகர்வதற்குள் அதிவேகமாய் இடித்துவிட்டான். தோள்ப்பட்டை கழண்டுவிடும் அளவுக்கு அப்படி ஒரு வலி.  அனிச்சையாய் உதடுகள் ‘அம்மா’வை […]

Readmore

எ லவ் 1.2

கண்மூடி அமர்ந்திருந்தவளின் முன்னே சென்று நின்றவன், ஒரு நெடிய மூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பைக்கில் வந்ததால் லேசாக கலைந்திருந்த சிகையை கைகளாலேயே அட்ஜஸ்ட் செய்துவிட்டு, ‘உப்ப்’ ‘உப்ப்’ என சத்தம் இல்லாமல் பதட்டத்தை ஊதித்தள்ளினான். பின்னே, “ஹாய் பவி!” என்றவன் கையை நீட்ட, சத்தத்தில் கண்ணை திறந்தவள் லேசாக திடுக்கிட்டு தான் போனாள். அதிலும் அவன் கையை நீட்டிக்கொண்டு நிற்க, சுதாரித்தவள் அதை பற்றி குலுக்க, சிரித்தமுகமாய் அமர்ந்துக்கொண்டான் அவன். அழைத்தாள்… வந்துவிட்டான்… ஆனாலும் எப்படி பேச […]

Readmore