அத்தியாயம் 29 (1) தன் முன் மூச்சு வாங்க நின்றுக்கொண்டிருந்த கணவனைப் பார்த்ததும், மிருதுளாவிற்குப் புரிந்தது, ஆரா மூலம் விஷயம் தெரிந்து வந்திருக்கிறான் என்று. அவன் முகத்தை நோக்கிய மிருதுளாவின் மனதுக்குள் உதித்த எண்ணம், ‘நம்பிக்கை இல்லாமல் தான் என்னை இவர் திருமணம் செய்துக்கொண்டாரா?!‘ என்பது தான். கண்களில், அடிபட்ட வலியும், ஏமாற்றமும் போட்டிபோட, கண்ணீர் காட்சியை மறைக்க, அந்தப் பைலுடன் எழுந்து கெளதம் அருகில் வந்தவள், அவன் முன் அதை நீட்டி, “இது என்னதுங்க??” என்று […]
Readmoreஅத்தியாயம் 28 (2) நேற்று தன் கணவன் அவ்வளவு சொல்லியும் சந்துரு வீட்டுகே வந்திருக்கிறானே என்று நினைத்தவளுக்கு, இரவு கெளதம் சொன்னது நியாபகம் வர, அவனைத் தவிர்க்கும்பொருட்டு உடனே கதவை மூட போனாள். அதற்குள் சந்துரு, “மிருதுளா, ப்ளீஸ் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்று சொல்லவும், “உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை.” என்று பதிலுக்கு முகத்தில் அடித்தாற்போலக் கூறியவள், கதவை அடைக்கப் போக, குறுக்கே கையை நீட்டியவன், “உன்னோட குழந்தை சாகல மிருதுளா. உயிரோட தான் […]
Readmoreஅத்தியாயம் 28 (1) காலை எழுந்ததில் இருந்தே கௌதமிற்கு மன அழுத்தமாக இருந்தது. தேஜாவை பற்றிய உண்மையை மிருதுளாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நேற்று முடிவெடுக்கும்பொழுது ஒரு வேகத்தில் எடுத்துவிட்டான். ஆனால் இப்பொழுது, அவளிடம் சொல்ல வேண்டுமே என்று நினைக்கையில், நெஞ்சுக்குள் ஒருவித பயம் உண்டானது. அது, உண்மையைச் சொல்வதைப் பற்றிய பயம் அல்ல, மாறாகச் சொன்ன பிறகு மிருதுளா என்ன நினைப்பாள் என்பதை நினைக்கையில் எழும் பயம். ‘இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லல?!’ என்று […]
Readmoreஅத்தியாயம் 27(2) கிரில் கேட்டை சாத்திவிட்டு, தங்கள் அறைக்குள் மிருதுளா வர, கௌதமை காணாததும், பால்கனி சென்று பார்க்க, கோபமாக வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான் அவன். மெதுவாக அவன் அருகில் சென்றவள், “என்னங்க?!” என்று அழைக்க, அவனிடம் எந்தப் பதிலும் இல்லை. மீண்டும் கொஞ்சம் சத்தமாக இவள் அழைத்ததும், திரும்பி இவளை பார்த்தவன், மீண்டும் அந்தபக்கம் திரும்பிக் கொண்டு “சொல்லு ரிது.“ என்றவனின் குரலில், என்ன இருந்தது என்று இவளுக்குத் தெரியவில்லை. மெதுவாக அவன் அருகில் சென்றவள், […]
Readmoreஅத்தியாயம் 27(1) நாளை ஆராவிற்குப் பிறந்த நாள். இன்று விடுமுறை தினம் என்பதால், அவளுக்குப் பரிசு வாங்குவதற்காக, கெளதமை அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்றிருந்தாள் மிருதுளா. திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், ஆராவிற்குப் புடவையும், அவள் வெகு நாளாக ஆசைப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்புக் கற்கள் பதித்த ஜிமிக்கி கம்மலையும் அவளுக்குப் பரிசளிக்க முடிவு செய்திருந்தாள். ஆரா சற்று பூசினார் போன்ற உடல் அமைப்பு என்பதால் அவளுக்கு எப்பொழுதும் ஹெவி வெயிட் பட்டு புடவையை விட, […]
Readmoreஅத்தியாயம் 26(2) புடவையைக் கையில் வைத்துக்கொண்டு நுனியை தேடிக் கொண்டிருந்த, அவளின் தோற்றம், இவனுக்குள் சில ஹர்மோனல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு திருமணம் செய்து இல்வாழ்க்கை வாழ்ந்தவனாக இருந்தாலும், யாழினி அல்லாமல் வேறு பெண்ணை, அதுவும் தன் மனதுக்கு நெருக்கமாக்கி கொண்டிருக்கும் பெண்ணை இப்படிப் பார்க்கவும், அவனுக்கும் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட, அப்படியே அவன் நின்று கொண்டிருக்க, பக்கவாட்டில் கெளதம் நின்றுகொண்டிருப்பதால், புடவை கட்டும் ஆர்வத்தில் அவனை மிருதுளா கவனிக்கவில்லை. தன்னை மீறி அவளிடம் […]
Readmoreஅத்தியாயம் 26(1) ஒரு மாதம் கடந்திருந்தது. சந்துருவை பார்க்க நேர்ந்த நிகழ்வும், அதைத் தொடர்ந்து, தன் கடந்த காலத்தைக் கெளதமுடன் பகிர்ந்துகொண்ட அன்றைய இரவின் தாக்கத்தில் இருந்தும், மெல்ல மெல்ல தன்னை வெளிக்கொண்டு வந்திருந்தாள் மிருதுளா. அன்று பார்டியில் அவன் பேசிய வார்த்தைகளை, அவன் கேட்ட மன்னிப்பையும் அறவே மறந்திருந்தாள். அன்றொரு நாள், விடுமுறை தினம். மாலை வேளை, தேஜாவை, குளிப்பாட்டி முடித்துவிட்டு, கட்டிலில் உட்கார வைத்து, உடை போட்டு கொண்டிருந்தாள் மிருதுளா. உடையைப் போட விடாமல் […]
Readmoreஅத்தியாயம் 25(2) தன் அக்காவின் வாழ்வில் நடந்தவற்றைச் சொல்லி முடித்திருந்தாள் ஆரா. பழைய நினைவுகளின் தாக்கத்தில், அவள் கண்களில் கண்ணீர் வழிய, பக்கத்தில் அமர்ந்திருந்த ஜெய், எழுந்து அவள் அருகில் போக, கணவனின் வயிற்றில் முகம் புதைத்து அழ ஆரம்பித்துவிட்டாள். “அழாதடா அம்மு. ப்ளீஸ். நடந்து முடிஞ்சதை நினைச்சு உன்னை நீயே கஷ்டபடுத்திக்காத டா. உண்மையில அண்ணி ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க. அவங்க நல்ல மனசுக்கு இனி அவங்களுக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும் ஆரா. நீ கவலைபடாத […]
Readmoreஅத்தியாயம் 25(1) “அம்மா!!!!” என்ற மிருதுளாவின் அலறலை கேட்டதும், பதறியடித்து அவள் பக்கம் திரும்பிய சித்ரா, “என்ன மா?!! என்ன செய்யுது?!” என்று கலக்கத்துடன் கேட்க, “முடியல மா, சுருக்கு சுருக்குன்னு குத்துது. வலி தாங்கல.“ என்றவள் எங்கே வலிக்கிறது என்று காட்ட, அவருக்குப் புரிந்துவிட்டது பிரசவ வலி என்று. ஆனால் இன்னும் ஒன்றரை மாதம் இருக்கிறதே என்று நினைத்தாலும், தாயாக அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. உடனே மோகனிடம் விஷயத்தை இவர் சொல்ல, அவர் உடனே […]
Readmoreஅத்தியாயம் 24(2) பதட்டத்துடன் அறைக்குள் வந்தவர், “மாப்பிள்ளை! ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லை.” என்று கலக்கத்துடன் சந்துருவிடம் மன்றாட, அவனோ மிருதுளாவை முறைத்துவிட்டு, இவர் பக்கம் திரும்பியவன், “டெஸ்ட் ரிசல்ட் ஆமாம் சொல்லுது. இதைத் தவிர வேற என்ன சாட்சி வேணும். இதுக்கு மேல நான் பேச தயாரா இல்லை. இன்னைக்குச் சாய்ந்திரம், பஞ்சாயத்துல வந்து, நான் கட்டுன தாலியை கழட்டிகொடுத்துட்டுப் போகச் சொல்லுங்க. இந்த அளவுக்கு ஆனதுக்கு அப்புறம், இதுக்கு […]
Readmore