மனைவியின் தவறுகளை, இது நம் வாழ்வியலுக்கு ஒத்துவராது என்று அவ்வப்போது சுட்டிக் காட்டவும் அவன் தவறுவதில்லை. ஒருவாறாக, தனது கனவு நகரத்தில், தன் முதல் வாரத்தை போக்கியிருந்த சந்த்ரிகாவிற்கு, நினைத்தது போல வேலை வேட்டை அத்தனை எளிதல்ல என்று கொஞ்சம் தாமதமாகத் தான் புரிந்தது. ‘கணவன் தன் கம்பெனியில் பரிந்துரை செய்யட்டுமா? என்று கேட்கும் போதே, சரி என்று சொல்லியிருந்தால், இந்நேரத்திற்கு நானும் வேலைக்கு போயிருக்கலாம்’ என்று சந்த்ரிகா எண்ணாமலில்லை. இருந்தாலும் அதை கணவனிடம் காட்டிக் கொள்ள […]
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் – 30 தற்போதுதான் தத்தி தத்தி நடைபயின்று கொண்டிருக்கும் பதினோரு மாத மஞ்சரி கத்திக்கொண்டே இருக்க.. ‘மாறா எதாவது செய்து அழுகையை அடக்கப்பாரு..” என்று ராஜன் பரிதவிக்க.. ‘கீழ விடச்சொல்லி அழறா ராஜய்யா..” என மாறன் சலிக்க.. ‘அச்சோ கல்லு குத்திடும்.. மண்ணு சறுக்கிடும்.. கால் புண்ணாகிடும்டா ராஜாத்தி..” என்று ராஜன் விளக்க.. எதற்க்கும் அசராதவளாய் மாறனிடமிருந்து கீழே தாவ முயற்ச்சித்து முடியாதவளாய்.. ‘ஊ..ஊ..” என […]
‘நானே இப்போதான் ரொம்ப கஷ்டப்பட்டு கமலேசையும் உன் அக்காவையும் தூங்கவச்சி.. அவங்களை ஏமாத்திட்டு வந்தேன்.. கொஞ்சநேரம் ராஜய்யாவோட பேசிட்டிருந்திட்டு தூங்கறனே..” என மாறன் கெஞ்ச.. ‘திருத்தவே முடியாது உங்களை..” என்று லாவண்யா சொல்ல.. ‘யாரை திருத்தனும் லவ்ஸ்..?” என்றபடி ஜித்தேந்திரன் லாவண்யாவின் அறையிலிருந்து வெளிவர.. ‘ப்ச்.. அப்பா முன்னாடி ஒழுங்கா லாவண்யா சொல்லு..” என்று லாவண்யா முனுமுனுப்பாய் கடிய.. ‘உனக்கும் அர்ச்சணைதானா ஜித்..?” என்று மாறன் சிரிக்க.. ‘லாவண்யாவை சுருக்கித்தான் லவ்ஸ் சொல்றேன்.. அதுக்கு முறைக்கிறா..” […]
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம்— 29 சோபனாவின் குழந்தைக்கு ஐந்துமாதம் முடிந்திருக்க.. ‘மாமா அடுத்த வாரத்தில சோபனாவை அழைச்சிட்டு போலாம்னு இருக்கேன்..” என்று போனில் முரளி சொல்ல.. ‘நந்தினிக்கு அடுத்தவாரம் வளைகாப்பு பண்றாங்க தம்பி.. அது முடிந்ததும் கிளம்பிக்கலாம்.. வளைகாப்புக்கு சொல்ல வீட்டுக்கு மாறன் வருவான்.. அப்பாம்மா தங்கச்சி எல்லாரும் வந்திடுங்க..” என்றார் இராமு. —————————————————————— லாவண்யா மதுரை மெடிக்கல் காலேஜில் எம்.பி.பி.எஸ் படித்துக்கொண்டிருக்க.. ஒரு வாரம் விடுமுறை […]
‘இத்தனை வயசுக்கப்புறம் அவளை நான் கல்யாணம் செய்துகிட்டது நிறைய பேருக்கு தப்பா தெரியலாம்.. அவளை கல்யாணம் செய்யவும்தான் நந்தினி என்னை அப்பான்னு ஏத்துக்கிட்டா.. யாருக்கும் தெரியாத பிறந்த பிள்ளைங்கிறதால யாருக்கும் தெரியாமையே போகட்டும்னு என் பொண்ணை அப்படியே விட்டுட முடியுமா..?” என்று குரல் கமறி.. ‘ஒருகாலத்தில நான்தான் உலகம்னு நினைச்சிட்டிருந்தவ அமுதா.. எங்க கல்யாணத்துக்கப்புறம் எத்தனை கஷ்டப்பட்டாலும் என்னை மட்டும் பார்க்கவே கூடாதுன்னு ரொம்ப […]
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் 28 வீட்டினுள் நுழையும்போதே.. ‘வாங்க மாப்பிள்ள..” என்று தேவியின் அம்மா வரவேற்க்க.. வழக்கம்போல் ‘ம்ம்.. வாங்க..” என்று ராஜன் சோபாவில் அமர.. சற்றுநேர அமைதிக்குப் பிறகு.. ‘உங்களையெல்லாம் பார்த்தே இரண்டுமாசம் பக்கம் ஆகுது.. என் பேரப்பிள்ளைங்களையும் லீவுக்குகூட விடாம வச்சிக்கிட்டிங்க..” என ராஜனின் மாமியார் ராஜனிடம் குறைபட.. ‘அம்மா நான்தான் லாவியை போக வேணாம்னு நிறுத்தினேன்.. அவர் ஒன்னும் சொல்லல..” என்றார் தேவி. ‘ஏன் தேவி..?” என […]
ராஜன் ஆச்சர்யமாய் விழிவிரிக்க.. ‘என் கல்யாணத்தில அத்தனைபேர் முன்னாடி நீங்க அடிச்சும்.. எதுன்னாலும் இன்னொரு நாளைக்கு பேசிக்கலாம்னு.. எதுக்கு அத்தனை பவ்யமா சொன்னாங்கன்னு யோசிங்க.. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல லாவி மனோ முன்னாடி நீங்க செத்துடுவேன்னு சொன்னதும்.. குழந்தைகள் முன்னாடி என்ன பேச்சு பேசுறிங்கன்னு உங்ககிட்ட எத்தனை உரிமையா கேட்டாங்கன்னு யோசிச்சிப்பாருங்க.. உங்ககிட்ட இத்தனை கோபம் காட்றவங்க.. லாவிகிட்ட எதையும் காட்டிக்கிறதில்ல..” என்றான். ராஜன் […]
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் – 27 ‘மாமா.. சத்தம் போடாம வாங்க..” என்று மாறனிடம் கிசுகிசுத்தாள் லாவன்யா. யாரோ வருவதுபோல் தோன்றி திரும்பி பார்க்கவும்.. லாவண்யா. எதிர்பார்க்காத ராஜன்.. ஆனந்தமாய்.. ‘ஹேய் லாவிகுட்டி.. வா.. வா.. எக்சாம் முடிஞ்சது.. இனி கொண்டாட்டம்தான்..” என்றார் உற்சாகமாக. ‘ஆமாம்ப்பா..” என்று தந்தையின் கன்னத்தில் இதழ் பதித்தவள்.. ‘என்னப்பா..? சேவ்கூட பண்ணாம வந்திருக்கிங்க..? முத்தா கொடுத்தா குத்துது..” என முகம் சுழித்தாள். ‘கொஞ்சம் டையர்டா இருந்ததுடா.. அதான் பண்ணல.. […]
‘உக்காரு ராமா..” என தண்டபானியும் குரல்கொடுக்க.. பிறகுதான் இராமனும் சுமதியும் அமர்ந்தனர். நந்தினியின் பார்வை முழுதும் வீட்டை நோட்டமிட.. எங்குபார்த்தாலும் முகம்தெரியும் அளவிற்கு பளிச்சென பிரம்மாண்டமாக சர்வ அலங்காரங்களுடன் ஏதோ மன்னர் காலத்து அரண்மணையில் இருப்பது போன்ற உணர்வை கொடுக்க.. தன் அம்மா எத்தனை பெரிய வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள் என நினைத்த நந்தினிக்கு கண்ணை கரித்தது. நந்தினியை கவனித்திருந்த ராஜன்.. தன் மகளருகே வந்து ஊஞ்சலை ஆட்டிவிட்டபடி.. ‘உன் […]
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் — 26 ஒருவாரம் கழித்து.. இன்றுதான் நல்லநாள் என்று பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ராஜன் தேவியைப் பார்த்ததும் ஒருகனம் அமுதாவின் உடல் விறைப்பானது.. பிறகு மாறன் அன்று சொன்னதை நினைவில் கொண்டுவந்த அமுதா.. யாரையும் கண்டுகொள்ளாமல் தனியே போய் அமர்ந்துகொண்டார். சுமதியும் ராமனும் பூஜையில் மாறனையும் நந்தினியையும்தான் அமரச்சொன்னார்கள்.. மாறன் அதற்கு ஒத்துக்கொள்ளாமல்.. தன் தந்தையும் தாயும்தான் உக்காரவேண்டும் […]