ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் — 20 ஒருமணிநேரம் கழித்து.. டாக்டர் அலட்சிய பாவனையோடு வெளியே வரவும்.. ‘வாட் இஸ் ஹிஸ் சிட்டிவேசன்..? டெல் மீ ரைட் நௌ..” என அமுதா அழுத்தமாய் கேட்க.. ‘ஹி இஸ் பெட்டர் நௌ..” என சொன்ன டாக்டரின் முகம் தடுமாறுவதைபோல் உணர்ந்த அமுதா.. அவர் சென்றதும்.. அங்கிருந்த செக்கியுரிட்டி மறுப்பு சொல்ல சொல்ல.. எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றார். அங்கே சிரித்து பேசிக்கொண்டிருந்த மாறனையும் ராஜனையும் […]
அத்தியாயம் — 19–2 ‘ராஜய்யா.. ராஜய்யா…” என கத்த.. எந்த பதிலும் இல்லாமல் போகவும்.. தேவிக்கு அழைத்தான் மாறன். ‘என்ன மாறா..?” என்ற தேவியின் குரல் எப்பொழுதும்போல் அன்பாய் ஒலிக்க.. தன்னை ஆசுவாசப்படுத்தியவன்.. ‘ராஜய்யா இருந்தா கொடுங்க தேவிம்மா..” என்று வரவழைத்த இயல்போடு மாறன் கேட்க.. ‘காலைல லாவன்யாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனவர் இன்னும் வரல மாறா.. ஏன் எதாவது முக்கியமான விசயமா..?” என்று தேவி கேட்க.. ‘சரிங்க தேவிம்மா.. […]
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் — 19 இன்று அமுதாவை போய் பார்க்க வேண்டும் என நினைத்திருக்க.. காலை எழுந்ததிலிருந்து பலமான யோசனையில் இருந்தார் ராஜன். எப்படி அமுதா முகத்தினில் விழிப்பது..? வாழ்க்கையை மொத்தமாய் இழந்தவளிடம்.. என்ன ஆறுதல் சொல்லுவது..? இத்தனை வருடம் கழித்து வந்திருக்கிறாள்.. தம்மீது சிறு ஆர்வம்.. பார்வையில் கூட இருக்கவில்லை.. மருத்துவமணையிலும் அப்படி உக்கிரமாக பேசியவளிடம்.. ராஜனுக்கு பேசுவதற்கு கூட பயம்தான்.. எனினும் சந்தித்துதான் […]
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் — 18 ‘உள்ள வாங்க சின்னைய்யா.. வாங்கம்மா..” என இராமு வரவேற்றார். ராஜன் மாறனைப் பார்க்கவும்.. மனோ.. லாவன்யா முன் எதுவும் பேசமுடியாதனாய்.. ‘நீ ஸ்கூல் போகலயா மனோஜ்..?” என்றான். ‘இன்னைக்கு முக்கியமான சாங்கியமாம் மாமா.. எங்கக்காக்கு முறை செய்யனுமாம்.. எங்கப்பாக்கடுத்த ஆம்பிளை வாரிசு நான்தானாம்.. இந்த முறையெல்லாம் தெரிஞ்சிக்கனுமாம்.. அதனால அப்பா லீவ் போட சொல்லிட்டார்..” என மனோஜ் சொல்ல.. லாவன்யாவை […]
அத்தியாயம் — 18–2 மாறன் வீட்டில் நடந்தை தேவியிடம் கேட்டுக்கொண்டிருந்த தண்டபானி கண்ணீர் வடித்தார்.. கண்ணீர் வடிப்பதை தவிர.. தண்டபானியால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. விபச்சார வழக்கில் கைதுசெய்ய வைத்து உன் பேரை நாரடிச்சிடுவேன் என்று அமுதாவை மிரட்டியதை.. தண்டபானி தன் மகனிடம் ஒப்புக்கொண்டதிலிருந்து ராஜன் தண்டபானியிடம் பேசுவதில்லை.. ஏன்..? பார்ப்பது கூட இல்லை. இதுவரை தன் கண் அசைவிற்கு கூட மறுப்பு சொல்லாத […]
அத்தியாயம் – 17–2 காலை எழுந்து குளித்து முடித்து.. வெளியே வரும்போது.. மணி எட்டரையை காண்பிக்க.. கிச்சனில் ராமுவும் சுமதியும் இருந்தார்கள். ரொம்ப லேட்டா எழுந்திட்டோமே.. என சங்கடமாய் உணர்ந்து ஹாலிலேயே நந்தினி நிற்க.. கொலுசொலி சத்தத்தில் எட்டிப்பார்த்த இராமன்.. தன் மருமகள் நின்றிருப்பதை கண்டு.. ‘சுமதி.. உன் மகன் நம்ம மருமகளை சமாதானப் படுத்திட்டான் போல.. நான் நந்தினியை கூப்பிடுறேன்.. நீ எதையும் வெளிப்படையா என் முன்னாடியே கேட்டுறாத..?” என தன் […]
ஒரு முடிவின் துவக்கம்… அத்தியாயம் — 17 வீட்டை பூட்டி தனதறைக்கு வந்த இளமாறன்.. தன் அம்மா மீதான அப்பாவின் காதலைத்தான் நினைத்திருந்தான். இத்தனை வருடத்தில் அப்பாவின் இந்த பரிமானம் மாறனுக்கு முற்றிலும் புதிது. அதிலும் ராஜிக்காக தன் […]
ஒரு முடிவின் துவக்கம்… அத்தியாயம் — 16 இம்முறை மாறனோடு பைக்கில் வரும்போது.. இயல்பான முகத்தோடு வந்தாள் நந்தினி. ராஜியின் மீதான தன் கோபம் குறைவதற்க்காகத்தான்.. தன் அத்தை அவளின் குழந்தை பருவ வாழ்க்கையிலிருந்து அனைத்தும் தம்மிடம் பகிர்ந்திருக்கிறார்.. ராஜய்யாவால் தன் வாழ்வையும் தொலைத்து.. இனி அவராலேயே தன் மகள் வாழ்வும் என்னாகுமோ..? என்ற அமுதாவின் தாய்மையுள்ளம் மாறனுக்கும் புரிய.. மாறன் முகமும் சற்று இயல்பாகவே இருந்தது. இருவரின் […]
சுமதிக்கும்.. ராமுவிற்க்கும் சாப்பாடு எடுத்து வைத்து.. அவர்களை சாப்பிட சொன்னவள்.. ‘உங்களுக்கு தோசை ஊத்தறேன்..” என தகவல் சொல்லி அவன் பதிலை எதிர்பார்க்காமல் சமையலறை சென்றாள். எங்கப்பா கால்ல விழத்தெரியும்.. என்னை பார்க்ககூட முடியாதா இவளால..? என எரிச்சலடைந்தவன்… ‘அதென்ன..? உங்கத்தை மாமாகிட்ட மட்டும் என்ன வேணும்னு கேட்டுட்டு செய்யுற..? எனக்கு மட்டும் நீயே முடிவெடுக்குற..?” என்றான் கடுப்போடு. ‘உங்களுக்கு எதாவது வேணும்னா.. நீங்களேதான் என்கிட்ட சொல்லனும்.. இல்ல நானா ஒரு முடிவெடுத்திடுவேன்..” என […]
மாறனின் பாராமுகத்தால் கலங்கியிருந்த மனது.. திட்டுவதற்க்காகவாவது தன்னிடம் பேசினானே என சற்று நிம்மதியாகவே இருந்தது நந்தினிக்கு. தான் செய்தது தப்புன்னு மனதளவிலவாவது உணர்ந்தாளே என மாறனுக்கும் சற்றே கோபம் குறைய.. மெல்ல அவளின் முகம் பார்க்கவும்.. சாதத்தை பிசையிறேன் என்ற பெயரில் அதில் கோலமிட்டுக்கொண்டிருந்தாள். அதான்… நாம செய்தது தப்புன்னு தெரியுதில்ல..? அப்போ இவதான நம்மளை சமாதானப்படுத்தனும்…? அதைவிட்டுட்டு இப்போதான் கோலம் போட்டு பழகிட்டிருக்கா.. என அவள் மீதுள்ள […]