மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ராவிற்குச் சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தேறி இருந்தது.
தங்களது திருமணப் பேச்சின் போது தனது மனைவி கேட்டுக் கொண்டதன் படியே ஆறு மாதங்கள் அவள் தனது வீட்டிலும், அடுத்த ஆறு மாதங்கள், தான் அவளது வீட்டிலும் தங்கிக் கொள்ள முடிவெடுத்து அதை இன்றளவும் செய்து வருகிறான் மகிழம்பூவன்.
அதேபோல் அவனுக்காகத் தன்னை முழுமையாக மாற்றிக் கொள்ள நினைத்தவளிடம்,”உன்னோட ஆளுமை, அதிகாரத் தோரணை, வேலை செய்றப் பாங்கு, எல்லாமே ஒழுங்காக, நேர்த்தியாக இருக்கனும்ன்ற எதிர்பார்ப்பு இதையெல்லாம் மாத்திக்காதே அழகிம்மா! அதெல்லாம் உன்னோட அடையாளத்தை உனக்கு வாங்கிக் கொடுத்து...
அவர்கள் அனைவரும் வெளியேறியதும் தனது கையை மிருதுவாகப் பற்றியிருந்த மகிழம்பூவனைப் பார்த்து,”என் கையை இன்னும் இறுக்கமாகப் பிடிச்சுக்கோங்க பூவன்! இனிமேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் என் கையைப் பிடிச்சிருக்கிறதை மட்டும் விட்றாதீங்க!”என்றவளை ஆதூரமாகப் பார்த்தவனோ,
“நான் ஏன் உன் கையை விடப் போறேன் அழகி? நான் எப்பவும் உன்னைக் கை விடவே மாட்டேன்!”எனக் கூறித் தன்னவளது கரத்தை இன்னும் அழுத்திப் பிடித்தான் அவளவன்.
அதில் வலியை உணர்வதற்குப் பதிலாக வலிமையை உணர்ந்திருந்தாள் பெண்ணவள்.
“எனக்கு மல்லிகா அத்தை தான் அப்பாவுக்குத் தொழில் ஆரம்பிக்கிறதுக்காக அவங்களோட சொந்த நகைகளைக் கொடுத்து...
உடனே பதறிப் போய் அவளது கன்னத்தில் தட்டி,”அழகிம்மா!”என்று தன்னவளைக் கண் விழிக்க வைக்க முயற்சி செய்தான் மகிழம்பூவன்.
இதைக் கேட்டு அறைக்குள் இருந்த ரமணனும், கஸ்தூரியும் வெளியே வந்து தங்களது மகளின் நிலையைக் கண்டுப் பதறி,”சஹாவுக்கு என்னாச்சு மாப்பிள்ளை? ஏன் மயக்கம் போட்டு இருக்கிறா?”என்று அவனிடம் பதைபதைப்புடன் வினவினார்கள்.
தனக்கும், சஹஸ்ராவிற்கும் நிச்சயத்தார்த்தம் நடக்கப் போகும் தினத்திற்குச் சில நாட்களுக்கு முன்னரே மருத்துவமனையில் இருந்து குணமாகி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு விட்டிருந்தான் மகிழம்பூவன்.
அவரை வாசலில் நிற்க வைத்துப் பூசணிக்காயைச் சுற்றித் திருஷ்டி கழித்து விட்டு அவனை வீட்டிற்குள் அனுமதித்து,
அவனைச் சூழ்ந்து கொண்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்,”இனிமேல் கல்யாணம் முடியிற வரைக்கும் நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் பண்ணைகளுக்குப் போகவே கூடாது மகிழு!”என்று மகனுக்குக் கடுமையாக உத்தரவிட்டு இருந்தார் பால்ராஜ்.
அதேபோல்,”உங்க நிச்சயத்தார்த்தத்துக்கான வேலையை எல்லாம் செய்ய நாங்க...
இன்னும் சில அத்தியாயங்கள் வரும்ன்னு நினைக்கிறேன் டியர்ஸ்! அதனால் கதையை உடனே முடிக்காமல் பொறுமையாக, நிறைவாக முடிக்கலாம்னு இருக்கேன்! அதுக்கு எப்போதும் போல் உங்க ஆதரவைத் தருவீங்கன்னு நம்புறேன். தாங்க்ஸ் டியர்ஸ்
வரம் 42
அதில் இன்னும் பெரிதாகச் சிரித்தவனின் மார்பில் தனது கையை வைத்து மெல்லமாக அடி போட்டாள் பெண்ணவள்.
“ஹேய் அழகி! நானே பாவம் குத்துப்பட்டுப் படுத்துக் கிடக்கேன்! நீயும் என்னை அடிச்சா நான் எங்கே போறது? என் கஷ்டத்தை யார் கிட்டே சொல்றது?”என்று தன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அவளிடம் உரைத்தான் மகிழம்பூவன்.
நான் நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவ் எடுத்துக்கிறேன் டியர்ஸ்! ஒரு முக்கியமான வேலை இருக்கு! அதை மட்டும் முடிச்சிட்டுத் திங்கட்கிழமை வந்துடுவேன்! முடிஞ்சா ஃபைனல் யூடியோட எபிலாக்கையும் கையோட முடிச்சிட்டு வந்துட்றேன்! சாரி டியர்ஸ்
வரம் 41
“மகிழு!”என்றழைத்துக் கொண்டே பால்ராஜ்ஜூம், வண்ணமதியும் கண்களில் நீர்ப்பெருக்குடன் அவனது கட்டிலிற்கு அருகில் சென்றனர்.
அவர்களைத் தன் கண்களைச் சுருக்கிப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டதும்,”அப்பா! அக்கா!”என்று பலவீனமான குரலில் அழைத்தான் மகிழம்பூவன்.
தன்னுடைய மகனின் தலையை ஆதூரமாக வருடிக் கொடுத்துக் கொண்டே,”ரொம்ப...
அங்கே அவனுக்கானப் பரிசோதனைகள் துரிதமாக நடக்கத் தொடங்கி விடவும், இவ்வளவு நேரமாக அனைவரும் எதுவுமே உண்ணாமல், குடிக்காமல் இருக்கிறார்கள் என்றும், ஏதாவது சூடாக குடித்தால் நன்றாக இருக்கும் என்றும் எண்ணிக் கொண்டு,
“நான் எல்லாருக்கும் குடிக்க டீ வாங்கிட்டு வர்றேன்”எனத் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவாக கூறி விட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிச் சென்றான் பூபாலன்.
அங்கே தனது தந்தையும், தாயும், தனது மகனைப் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டதும், அவர்களிடம் சென்று மகிழம்பூவனுக்கு எக்ஸ்ரே எடுக்கும் விஷயத்தைப் பகிர்ந்து விட்டு,”டீ வாங்கிட்டு வர்றேன்ப்பா, ம்மா”என்று...
அதாகப்பட்டது மக்களே! கதை விரைவில் நிறைவடையப் போகிறது. நன்றி
வரம் 39
அவளது கேள்வியைக் கேட்டதும் அந்தக் களேபரத்திலும் அவளைப் பார்த்து வியந்து போயினர்.
தாங்கள் இன்னும் விஷயத்தையே கூறி இருக்கவில்லை அதற்குள்ளாகவே அவளவனுக்கு ஏதோ அனர்த்தம் நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்து கொண்டு விட்டிருக்கிறாளே? என்றெண்ணி விட்டார்கள் அனைவரும்.
“சொல்லுங்க! அவருக்கு என்னாச்சு?”என்றவளை ஆசுவாசப்படுத்தும் விதமாக,
”இங்கே பாரு அழகி! மகிழுக்கு எதுவும் ஆகலை! நீ முதல்ல நிதானமாக ஆகு. அப்போ தான் நாங்க உங்கிட்ட விஷயத்தைச் சொல்லுவோம்”என்றிருந்தார்...
அவற்றுள் ஒரு காளை மாடு மட்டும் மிகவும் அதிகமான மூர்க்கத்தனத்துடன் காணப்பட்டது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகிழம்பூவனுடன் வந்திருந்த பூபாலனுக்கே அதைப் பார்த்து விட்டுத் தொடை நடுங்க ஆரம்பித்து விட்டிருக்க,
“என்ன மாப்பிள்ளை இந்த மாடு ரொம்ப மூர்க்கமாகத் தெரியுது! ஏன் இப்படி இருக்கு? இதுக்குத் திடீர்னு என்னாச்சு?”எனக் கேட்டான்.
“அது தான் எனக்கும் தெரியலை மாமா”என்றவனோ, அந்தக் காளை மாட்டைப் பராமரித்துக் கொண்டிருக்கும் பராமரிப்பாளரை அழைத்து அதைப் பற்றி விசாரித்தான் மகிழம்பூவன்.
“யானைக்கு எல்லாம் மதம் பிடிக்கும்ல ஐயா? அந்த மாதிரி இந்த மாட்டுக்கு ஏதோ சரியில்லை போல...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.