எனக்கு மிகவும் பிடித்த கிருஷ்ணர், மஞ்சாடி, கேரளா, பசுமை,இயற்கை என எழுத்திலும்,படத்திலும் கலக்கி விட்டாய் பெண்ணே... அம்முவின் வரம் தந்த சுகத்தை விட சாபம் தந்த கனம் மிக அதிகம்... எங்கும் தொய்வில்லாத எழுத்து நடை... தெளிவான ஓட்டம்..கிருஷ்ணன் என பெயர் கொண்டு கம்சனாய் நடந்தவனை புத்தி பேதலித்து போக வைத்து இருக்கலாம்... ஜெகன் அம்முவை ஜகமாய் எண்ணி ஆண்டது அழகு என்றால், அவனை நினைந்து, அவனையே மணந்த கலியுக ஆண்டாளாய் அம்முவின் நேசம் அருமை... மிக கனமான கரு...அழுத்தமான நேசம்... அழகான முடிவு... சீதா என பெயர் வைத்தால் தீக்குளிக்க தான் வேண்டுமோ? சீதாவும் வாஞ்சியும் தொண்டை அடைக்க வைத்து விட்டார்கள்... நீலவேணி சரியான களவாணி... கேரளா பற்றி அவ்வளவு எழுதிய நீ, எனக்கு மிகவும் பிடித்த யானையை மறந்தது ஏனோ??? வாழ்க வளமுடன்