ஷாலினியோட செயல் தப்பு, பிரகாஷோட செயலும் தப்புதான், ஆனால் எனக்குத் தெரிந்தவரை இதிகாச காலத்திலிருந்து ஆண்கள் அப்படின்றவுங்க எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கல்யாணம் செய்துக்கலாம், ஆட்சிக்காக, ஆசைக்காக, நட்புக்காக இப்படி பல காரணங்களுக்காக பண்ணிக்கலாம் அது சரிதான்ற மாதிரி ஒரு நிலைப்பாடு இங்க நம்ம சமூகத்தில இருக்கு. ஆனால் ஒரு பொண்ணு ஏற்கனவே குடும்பமா இருக்குற ஆணோட தொடர்புல இருக்குறதுங்கிறது, அந்தப் பொண்ணை இந்த சமூகம் ரொம்பவே கேவலமாக பார்க்கிறதுக்கு வழிவகுக்குது. இந்த காலத்தில், அதுவும் இந்த 4ஜி டேட்டா காலத்தில் குடும்பங்கிற அமைப்பை கட்டிக்காப்பாத்த வேண்டிய கடமை யாருக்கிட்ட இருக்குதுன்னு எனக்குத் தெரியலை. நான் பார்த்தவரை நிறைய ஒழுக்கமற்ற உறவுகள் இங்க இருக்குது. வாழ்க்கைத்துணையில ஒருத்தர் மற்றவருக்கு துரோகம் செய்றதுங்கிறது எப்பவுமே சரி கிடையாது. அதை அனுபவிக்கிறவுங்களால தான் அதை சொல்லவே முடியும். விதி இப்படித்தான்னு அதை கண்டுக்காம விட்டுட்டு நம்ம குழந்தைகளை கவனிக்கிறதுதான் நம்ம தலையெழுத்தா? ஒழுக்கம் தவறுனது யாரா இருந்தாலும் அவுங்களுக்கு துணையாக இருந்தது யாரா இருந்தாலும் தப்பு தப்புதான். இவுங்களுக்கு என்ன தண்டனை? இல்லை இதுவும் கடந்து போகும்னு பாடிட்டு நம்ம வேலையை பார்க்கணுமா? தெரியலைங்கோ.