வணக்கம் மக்களே! நான் வெற்றியை ஆதரிக்க வில்லை. சரண்யாவின் கதாநாயகன் அவன் என்று தான் சொன்னேன். சமாதானம் பண்ணிக்கோவம், இந்த ரெண்டு நாளா என்னையும் சேர்த்து தான் உருட்டி விடுறீங்க... அப்புறம் என் கதை எல்லாம் நம்மை சுற்றி நடக்கும் உண்மை நிகழ்வே. அதில் என் பாணியில் கொஞ்சம் மாறுதல். நிஜ வாழ்க்கையில் எந்த வெற்றியும் திரும்பி வாரதில்லை. அவர்கள் அபியை தான் தேர்வு செய்கிறார்கள். சரண்யா நம்மில் ஒரு ஆள். அது தான் அவள் கதாப்பாத்திரம். அவளை மாதிரி பெண், வேற துணை தேடுவது கடினம். அவர்கள் இயல்பு மாறாமல், நிஜ முகத்தோடு கதை கொண்டு செல்கிறேன். அத்தோடு உருட்டி கூட இந்த கதைக்கு நல்ல வரவேற்பு. மீ ஹேப்பி . அப்புறம் ஒரு முக்கியமான விசயம் வெற்றிய நினைச்சு பிபி ஏத்தி கரிகாலனை விட்டுறாதீங்க. அவனை காப்பாத்தி விடுங்க. தொடர் ஆதரவு தாருங்கள். இந்த சோகம் போதும், எனக்கே முடியலை. நாள் முதல் கிளிகள் ஜாலி தான்.