காலையில் இருந்து பாலவுக்கு மனதில் தோன்றிய உணர்வும்,அதற்கேற்றார் போல தடுக்கி விழ போவது என பதட்டமாக இருக்க,கோவிலில் கோபாலசுவாமி பூஜைக்கு ஏற்பாடு செய்து இருப்பதை பார்த்தால், ஏதோ அசம்பாவிதம் ஏற்பட போவது அவருக்கு தெரிந்திருக்கிறது????.
டாக்டர் யார் என பார்க்காமல் பேசிய பேச்சால் அனைவரையும் அலற வைத்து,உண்மையும் வர வைத்து விட்டார்???.கோபாலின் கை நடுக்கத்தை பார்த்தால் இதை அவர் எதிர்பார்த்து இருப்பாரோ என தோன்றுது????.
சூர்யாவின் ஜாதகத்தால் பாலாவின் உயிருக்கு ஆபத்து இல்லை என அவர் கூறியதை நம்பியதாக அர்ச்சனா சொல்வதும்,அந்த நம்பிக்கையாலே பாலாவை திருமணம் செய்து கொடுத்ததாக வெற்றி சொல்ல கோபால் போட்ட நாடகம் அனைவர் முன்பும் வெட்ட வெளிச்சமாகி விட்டது????.
தன் தந்தையுடன் வெற்றியும் கூட்டு சேர்ந்துள்ளது தெரிந்து,வெற்றியை அடித்து சூர்யா தன் கோபத்தை தீரத்துக் கொண்டான்????.பாலாவின் பெற்றோர்கள் நிலை என்ன சொல்ல???
பாலா உயிரோடு இருப்பதை நினைத்து சந்தோஷப்பட முடியாமல்,சூர்யாவால் அவள் உயிருக்கு ஆபத்து,என்ன ஜாதகம்,கோளாறு என தெரியாமல் பதறும் அவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது?????.உண்மை தெரிந்து மோகனா,பாலாவை அழைத்து சென்று விடுவாரா????.