கணவன் மனைவி அமைதியாக அவரவர் பக்கம் உள்ள நியாயத்தை தெளிவுபடுத்தி கொண்டாலே இங்கு கணவன் மனைவி பிரிவு என்பது இருக்கவே இருக்காது
கரிகாலன் அவன் பக்கம் நியாயத்தை கூறிவிட்டான், நிச்சயம் குடும்பத்தை விட முடியாது தான் அதற்காக அனைவர் சுமையும் தலையில் தூக்கி சுமப்பது எல்லாம் நியாயம் இல்லை. ஒருவேளை உடன் பிறந்தவர்கள் கரிகாலன் மீது உண்மையான பாசமும் அவனது வளர்ச்சியின் மீது பொறாமை கொள்ளாதவர்களாக இருந்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் கடைசி காலம் வரை அவனால் முடிந்த உதவியை செய்து இருக்கலாம் தவறில்லை ஆனால் இவனது குடும்பத்தில் அனைவரும் மிக மிக சுயநலவாதிகளே
இனியாவது மதுவும்- கரிகாலனும் அவர்களின் வாழ்க்கையை யாருக்காகவும் விட்டுக் கொடுத்துப் போகாமல் வாழ வேண்டும்.
கரிகாலன் மது இரண்டு பேரும் அவங்க பக்க நியாயத்தை பேசி தெளிவு படுத்திட்டாங்க சுகமோ துக்கமோ இரண்டு பேரும் சேர்ந்து இருந்து பேஸ் பண்ணுங்க
கரிகாலன் உன்னோட உறவுகளை விட்டு கொடுக்க வேண்டாம் அதே சமயம் எல்லாத்துக்கும் ஒரு எல்லை வச்சிரு
உங்க அம்மா தற்கொலை நாடகம் நடத்தியே உன்னை வழிக்கு கொண்டு வராங்க அதை புரிஞ்சிக்கோ முதலில்
மது வீட்டில் கொடுக்கிற சீர் எல்லாம் உங்க பிள்ளைங்க எதிர் காலத்துக்கு சேர்த்து வச்சிடுங்க ஏன்னா கரிகாலன் சம்பாதிக்கிறது எல்லாம் அவன் குடும்பம் உரிஞ்சி எடுத்துரும்
இவங்க சேர்ந்து வாழணும் என்று முடிவு எடுத்தாச்சு இது தெரியும் போது இரண்டு குடும்பமும் என்ன கலவரம் செய்ய போகுதோ
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.