மஹாலட்சுமியின் உடல்நிலை தேற.. மருத்துவர் சொன்னது போல் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். தாயை தன் முழு பொறுப்பில் வைத்துக் கொண்ட கண்ணன் அவருக்கு தேவையானதை அவனே செய்து முடித்தான். இதற்கிடையில் வானதியிடம் பேச சென்ற சித்துவை விசாரிக்க, “ஒன்னும் இல்ல கண்ணா.. கொஞ்ச நாள்ல சரியாகிடும்.” என்பதோடு முடித்துக் கொண்டாள். இன்னும் மைக்கேலிடம் விசாரணையை தொடங்காமல் இருக்க மெல்ல தன் தாயிடம் சென்றவன் பேச்சை ஆரம்பித்தான்.”அம்மா நல்லா ரெஸ்ட் எடுங்க. இன்னைக்கு சித்துவும், ஆரதியும் உங்க கூடவே […]
Readmoreஆரதி வெகு நேரம் அசையாமல் தன் அத்தையின் அறையவே பார்த்திருந்தாள். அதை கவனித்த சரஸ்வதி, “ஆதி! அண்ணிக்கு ஒன்னும் ஆகாது. இப்படியே நிக்காத . வந்து உட்காரு..” “என் அத்தைக்கு ஒன்னும் ஆகாது. அது எனக்கே தெரியும். ஆனா அம்மா.. இப்போ அத்தை இப்படி இருக்குறதுக்கு நான்தான் காரணம்.” “இப்ப வருத்தப்பட்டு நிக்கிறது ல எந்த பலனும் இல்லை. இப்படி ஒன்னு நடக்கக்கூடாது’னு தான் உன்கிட்ட எவ்வளவோ பேசினோம்.” சரஸ்வதியின் வார்த்தையை தவிர்க்க விரும்பிய நாராயணன், “என்னம்மா […]
Readmoreசிறு தூரப் பயணங்களில் கமிஷனர் வீட்டை அடைந்தவர்கள் வீட்டின் காவலாளியிடம், கண்ணன் உத்தரவு பெற.. அவருக்கு ஏற்கனவே தெரிவித்திருக்க, உள்ளே அனுமதித்தார். கமிஷனரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்தார்கள் தனிப்பட்ட கோரிக்கையை வைக்க, வானதியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து ராபர்ட் விசாரணை யோடு அனிதாவின் விசாரணையும் ரகசியமாக நடத்தப்பட அனுமதி அளித்தார். இன்னும் 15 நாட்களுக்குள் அனிதா தொடர்பான ரகசிய விசாரணை முடிய வேண்டும் என்ற கட்டளையோடு. அதுவரை அனிதாவின் உடலை மருத்துவமனையில் பாதுகாக்கவும் உத்தரவிட்டார். இதுதொடர்பாக […]
Readmoreதன்னிலை தெளிந்த மைக்கேல் கனமாக இருந்த கண்ணிமைகளை கடினப்பட்டு பிரிக்க, அதை உணர்ந்த கண்ணன் அமைதியாக பார்த்து இருந்தான். எழுந்த மைக்கேல் இடம் தெரியாமல் முழிக்க, “மைக்கேல் சார்! நல்ல உறக்கம் போல.. இந்த மாதிரி நிம்மதியாக தூங்கி பல நாள் ஆச்சு நாங்க!” குரல் வரும் திசையில் கண்ணனைக் காண, அதிர்ச்சியில் அரக்கப் பரக்க எழுந்து அமர்ந்தான் மைக்கேல். “பொறுமையா எந்திரிங்க. என்ன அவசரம். உங்களை அலுங்காம குலுங்காம இங்க கூட்டிட்டு வந்து இருக்கோம். நீங்க […]
Readmoreசிறு தூரப் பயணங்களில் கமிஷனர் வீட்டை அடைந்தவர்கள் வீட்டின் காவலாளியிடம், கண்ணன் உத்தரவு பெற.. அவருக்கு ஏற்கனவே தெரிவித்திருக்க, உள்ளே அனுமதித்தார். கமிஷனரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்தார்கள் தனிப்பட்ட கோரிக்கையை வைக்க, வானதியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து ராபர்ட் விசாரணை யோடு அனிதாவின் விசாரணையும் ரகசியமாக நடத்தப்பட அனுமதி அளித்தார். இன்னும் 15 நாட்களுக்குள் அனிதா தொடர்பான ரகசிய விசாரணை முடிய வேண்டும் என்ற கட்டளையோடு. அதுவரை அனிதாவின் உடலை மருத்துவமனையில் பாதுகாக்கவும் உத்தரவிட்டார். இதுதொடர்பாக […]
Readmoreவீட்டில் இரவு உணவை மறுத்த வானதி எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருக்க அதை கண்ட ராசாத்திக்கு தான் கவலையாக இருந்தது. எவ்வளவு கேட்டும் அமைதியாகவே இருக்கும் மகளிடம் மேலும் கேட்டு கஷ்டப்படுத்த விரும்பாது அவரும் அமைதியாகவே இருக்க, ஆரதி தான் பல வார்த்தைகளால் அவளுக்கு நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருந்தாள். சித்துவும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தானே தவிர அவள் அருகில் செல்ல மனம் வராமல் இருந்து விட்டான். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு.. கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும், சூழ்நிலை […]
Readmore“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொல்லியிருந்த மாதிரி நாங்க பழைய வீட்டுல இருக்கும்போது என் கணவருக்கு நிறைய பேரோட பழக்கம் ஏற்பட்டுச்சி. அதுல ஒருத்தன் தான் மைக்கேல். ஆரம்பத்தில் என்னமோ நல்லா தான் பேசிட்டு இருந்தான். அடிக்கடி என் புருஷனோட சேர்ந்து குடிக்கிறதும், கஞ்சா பழக்கமும் நாளுக்கு நாள் அதிகமாச்சு. என் புருஷனுக்கு குடிக்கிற பழக்கம் மட்டும் தான் இருந்துச்சு. மைக்கேல் கூட சேர்ந்துதான் மத்த பழக்கம் வர ஆரம்பிச்சது. எனக்கு சுத்தமா பிடிக்கல. மைக்கேல் வயசுல என் […]
Readmoreவீட்டிற்குள் பெண் காவலர்கள் நுழைந்ததும் அஞ்சலி மேரிக்கு பயம் தொற்றிக் கொள்ள, விசாரணைக்கு வர மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தார். இதற்கிடையில் அக்கம்பக்கத்தினர் கூடிவிட… அவர்களிடமும் முறையிட்டு துணைக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த கண்ணன், “மேடம் விசாரணைக்கு ஒத்துழைச்சா மரியாதையா வண்டில ஏத்துங்க. இல்லையா அடிச்சு வண்டியில ஏத்துங்க. சப்போர்ட்டுக்கு யாரு வந்தாலும் அவங்களையும் பிடிச்சிட்டு வாங்க. இருக்க கேசு மொத்தத்தையும் அவங்க மேல போட்டு சிறப்பா கவனிக்கலாம்.” “என்ன சார் ஆம்பள இல்லாத வீட்டுக்கு […]
Readmoreஇறந்த பெண்ணின் உடற்கூறு ஆய்வுகள் உயிருடன் இருக்கும் மூவரையும் உயிரோடு சிதைத்து கிழித்து இருந்தது. அதுவும் ஆரதிக்கு இவை உண்மை தான என நம்புவதற்கே மனம் மறுத்தது. பத்திரிக்கை துறையை அவள் தேர்ந்தெடுத்ததற்கு காரணமே.. தன்னால் முடிந்த அளவு மட்டும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை இந்த உலகிற்கு பறைசாற்ற தான். தன் வேலையையும் இரண்டாம் பட்சமாக கருதி தனிப்பட்ட முறையில் அதற்காக அவள் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். தன் கையிலிருக்கும் ரிப்போர்ட்டை படிக்க படிக்க ஏனோ […]
Readmoreகமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைந்த கண்ணன் அங்கு இருப்பவரிடம் விசாரித்து ரிப்போர்ட்டை கையில் எடுக்க, ஏனோ அத்தனை நடுக்கம் அவன் கைகளில். அன்று அதை கையால் எடுக்கும் பொழுது ஏற்பட்ட அதே உணர்வை இன்றும் உணர்ந்தான். மெல்ல முதல் அட்டை பக்கத்தை பிரித்து படிக்க ஆரம்பிக்க, ஆரம்பத்தில் கேள்வியாக படித்தவனின் பார்வை மேலும் முன்னேற, விழிகளின் பாவை அசையாமல் அப்படியே நின்றது. அதிர்ச்சியில் பார்வை இழக்கும் அளவிற்கு அப்படி ஒரு அதிர்வு. கருவிழிகள் ஆயிரம் மடங்கு பெரிதாகி நான் […]
Readmore