Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Alaiyil Pootha Malar

Alaiyil Pootha Malar 22 1

அத்தியாயம் .. 22   அடுத்தநாள்  காலை   கமலம்  எழுந்து  வெளியே  வர..  திலகவதி    பயபக்தியோடு  ஏதோ   முக்கிய  வேண்டுதல்   போல்   சாமி  கும்பிட்டு  கொண்டிருக்க..  ஐந்து  நிமிடம்  கழித்து   கண்திறந்தவள்..    நெற்றிக்கு   குங்குமமிட்டு   வெளியே  வர..   கமலத்தை  பார்த்ததும்..   ‘எழுந்துட்டிங்களா..?  வாங்க  குளிப்பிங்க..” என்று  ஆரம்பித்தாள்  அவளின்  பணியினை. எட்டரை  மணிபோல்  சாப்பிட்டு  முடித்த  கமலம்.. ‘சாமிகிட்ட   என்ன  வேண்டிகிட்ட..?” என்றார்  ஆர்வமாக. இவள்  தயங்க..  ‘ரகசியம்னா   சொல்ல  வேணாம்..” என்று  இயல்பாய்  சொல்ல.. கமலம்  […]


Alaiyil Pootha Malar 21 1

    அத்தியாயம் .. 21   கமலம்   அழைத்ததால்   இரண்டு  நாள்  கழித்து  ஜெயா  வந்திருக்க..   தன்  அக்காவை  பார்த்தே   மூன்று  மாதத்திற்க்கு  மேலாகியிருக்க  இன்று   ஞாயிற்று  கிழமையாதலால்   பாலாஜியும்  வந்திருந்தான். ஹாலிலிருந்து  கமலம்  திலகாவை  அழைக்க..   தன்  அம்மாவின்  பேச்சரவத்தில்  அச்சோ   அம்மாகிட்ட  எதாவது   சொல்லியிருப்பாங்களா..?  நம்மளை  கொன்னே  போட்டுடுமே  என   பயமெடுக்க..   ‘இதோ  வரனே;த்தை..” என்றவள்  பத்து  நிமிடத்திற்க்கு  மேலாகியும்   வெளியே  போகவில்லை. அரை  மணிநேரமாக  ‡போன்  பேசிக்கொண்டிருந்த  சூர்யாவிற்கு  தன்  மாமியார்  […]


Alaiyil Pootha Malar 21 2

  சூர்யாவின்  பார்வை  உணர்ந்த  பாலா.. ‘மாமா..  அக்காக்கு   இந்த  சாக்லேட்  ரொம்ப   பிடிக்கும்..    எனக்கு   முட்டை  சாதம்  பிடிக்கும்..    அக்கா  எக்ஸ்போர்ட்  கம்பெனிக்கு  வேலைக்கு  போகும்போது   சம்பளம்  வாங்கியதும்   இந்த  சாக்லேட்டும்..  நிறைய  முட்டையும்    வாங்கி  வரும்..   இவ்ளோ  காசுபோட்டு  இந்த  ஒத்த  சாக்லேட்டை  திண்ணே  ஆகனுமான்னு   மத்துக்கட்டையை  எடுத்துகிட்டு   எங்கம்மா  அடிக்கவரும்..  அம்மா  கைக்கு  சிக்கவே     மாட்டோம்.. ரெண்டுபேரும்   வீட்டைவிட்டு   ஓடிடுவோம்..      இரண்டு  தெருவுக்கு  மேல  எங்கம்மாவாலயும்  எங்களை  துரத்த  முடியாது..   வயசுபுள்ள  இப்படி  […]


Alaiyil Pooththa Malar 20 2

தான்  பேசிய  வார்த்தையின்  வீரியம்  தற்போதுதான்  புரிய.. ‘தெரியாம  பேசிட்டேன்..” என்றாள்  இறங்கிய  குரலில். மேற்கொண்டு   பிரசாத்தை  பற்றி  திலகவதியிடம்  பேச  விரும்பாதவனாய்..   கண்மூடி  தன்னை  சமன்செய்தவன்..  ‘நீ  போய் சாப்பிடு..  எனக்கு  பசியில்ல..” என்றான்  கடுப்பாக. திலகவதி   நின்றே  இருக்க..    சூர்யா  அவளை முறைக்க..  அவனிற்க்கு  பயந்து  தலைகுனிந்தாலும்   அவ்விடம் விட்டு   நகராமல்  நின்றிருக்க..  ‘என்ன..?  எனக்கும்  பசியில்லன்னு  பொய் சொல்லப்போறியா..?” என்றான் கடுப்பாக. சூர்யா  தன்னை  தவறாக  நடத்தமாட்டான்  என்ற  நம்பிக்கை  வலுப்பெற்றிருக்க..  ‘ம்கூம்   […]


Alaiyil Pooththa Malar 20 1

    அத்தியாயம்– 20   திலகவதி  ஆர்வமாக  சூர்யாவின்  மொபைலையே  பார்த்திருக்க.. ‘காட்றேன்..  ஒரு  காபி  குடிச்சிட்டு   காட்றேன்..”  என்றான். ‘இல்ல..  நான்  காபி  எடுத்திட்ட  வரதுக்குள்ள   நீங்க  அதை  எதாவது  செய்திடுவிங்க..” என்று  நம்பாதவளாய்   சொல்ல… ‘சரி..  நான்  போய்  எடுத்திட்டு  வரேன்..” என்று  மொபைலை   அவளிடமே  கொடுத்து   வெளியே  வந்தவன்..   ஹாலில்   அமர..  முத்து   எட்டிப்பார்க்க.. ‘இரண்டு  காபி  போடுங்க..” என்றவன்   முகம்   சோர்ந்திருக்க..   கொஞ்சம்  முன்னதான   சந்தோசமா   உள்ள  போனாங்க..  என்று  […]


Alaiyil Pootha Malar 19 1

  அத்தியாயம் –19   அடுத்தநாள்   காலை  சூர்யா  குளிக்கச்  சென்றதும்..  வெளியே  வந்தவள்தான்..      எத்தனை  முறை   சூர்யா  அழைத்தும்    திலகவதி  உள்ளே  செல்லவில்லை.    கமலத்திற்க்கு   டிபன்  பரிமாறிக்கொண்டு    அவர்களோடே  நின்றுகொண்டாள். ‘அவன்தான்   கூப்பிடறானில்ல..?  போய்  என்னன்னு  கேட்டுட்டு  வா..” என்று  கமலம்  அதட்ட.. வேறு  வழியின்றி  ரூமருகே  வந்தவள்..  தலையை  மட்டும்  உள்ளே நீட்டி.. ‘நான்  அத்தைக்கு  டிபன்  போட்டுட்டிருக்கேன்..” என்று  சொல்லி   மீண்டும்  கமலத்திடமே  வந்து   நின்றுகொண்டாள். இவன்  ரெடியாகி  வெளியே  வர..   அப்பாடி   […]


Alaiyil Pootha Malar 19 2

நாலரை  மணிபோல்  சூர்யா  வீட்டிற்க்கு  வரவும்..  மகனின்  முகம்  பார்த்தே  இன்னும்  சாப்பிடாமல்  இருக்கிறான்  எனப்புரிந்த  கமலம்  முறைக்க.. ‘என்  செல்ல  அம்மால்ல.?    நான்  சாப்பிட்டதும்  திட்டுவிங்களாம்..” என்று  கமலத்தின்  தாடையைப்  பிடித்து  கொஞ்ச..   ‘குளிக்க  ஓடிடாத..   முகம்  கை  மட்டும்  கழுவிட்டு  வந்து   சாப்பிடு முதல்ல..” என்று  கமலம்  கடுப்பாக  சொல்ல.. சூர்யாவின்  பேச்சரவத்தில்   டெய்லரிங்  அறையிலிருந்து  வெளியே  வந்த  திலகா..   பதட்டத்தோடு   நின்றிருக்கும்   முத்துவைப்  பார்த்து  அவரருகில்   போனவள்.. ‘என்னாச்சி  அண்ணா..?” என  கேட்க.. […]


Alaiyil Pootha Malar 18 1

அத்தியாயம் — 18   முத்துவின்   மனைவிக்கு   உடல்  நிலை  சரியில்லாமல்  போகவும்..   திலகவதிதான்    கமலம்  குளிக்க  உதவி   செய்துகொண்டிருக்கிறாள்.  ம்ம்..  நாட்கள்  நிற்காமல்  ஓட..  இதோ  முடிந்துவிட்டது   மேலும்  ஒரு மாதம். என்ன இயல்பாக  பேசினாலும்  கமலத்திடம்  இன்னும்  பயம்தான்  திலகாவிற்க்கு..  மாலையிலும்  தன்னை  சுத்தப்படுத்தி   சாமிக்கு  பூ  தொடுத்து  வைப்பது..   சிறிதேனும்   தானும்  வைத்துக்கொள்வதென  இருக்க.. சூர்யாவிற்க்கும்  திலகவதியின் மீது   கோபம்  வருவதில்லை. எல்லாவற்றிற்க்கும்  மேலாக   சூர்யாவின்  நற்குணங்கள்  தெரிந்ததிலிருந்து..    இத்தனை   நல்லவனின்  சந்தோசம்   […]


Alaiyil Pootha Malar 18 2

    அரைமணி  நேர  மௌனத்திற்க்கு  பிறகு..   தன்  கோபம்  குறைத்து.. ‘திலகா..” என்றழைக்க.. அச்சோ  ஆரம்பிச்சிட்டானே..  இனி  கோபம்  குறையறதுக்குள்ள  என்னென்ன  சொல்வானோ  என   பதறியவள்..  பதிலில்லையென்றால்   அதுக்கும் எதாவது  செய்வானே  என  பயந்து..  ‘ம்ம்..” என்றாள்  தலைநிமிராமல். ‘எனக்கு  கா‡பி  வேணும்..” என்றான் பிடிவாதக்குரலில். அவள்  எழவும்..  ‘உன்  அழுமூஞ்சை   கழுவிட்டு  போ..” என்றான்  கடுப்பாக. முகம்  கழுவி அதைனை  துடைக்காமல்  கூட  வெளியே  போனவள்   சற்று  நேரத்தில்  கா‡பியோடு  வரவும்..  வாங்கி  குடித்துக்கொண்டே.. […]


Alaiyil Pootha Malar 17 2

இரவு ஒன்பது மணியாகவே..   படுக்கப்  போகும்  போது  திலகவதியை  சாப்பிட  சொல்லத்தான்  நினைத்தார் கமலம்.  ஆனாலும்   சாப்பிட்டு  சூர்யா வருவதற்க்குள்   தூங்கிவிட்டால்  என்ன  செய்வதென்றும்..  மகன்  வரும்வரை  காத்திருந்தால்தான்   அவனுக்கும்   வீட்டில  பொண்டாட்டின்னு  ஒருத்தி  சாப்பிடாம  இருப்பாங்கிற  நினைப்பு  வரும்..  என நினைத்து   எதுவும்  சொல்லாமல்   அமைதியானார். இரவு  பத்தரை  மணிபோல்  சூர்யா  வர..  திலகவதியை  அதிசயமாய்   பார்த்தபடி  உள்ளே  போனான்.   கால்மணி  நேரமாகியும்   சூர்யா  வராமல்  போகவே..  முகம்  கழுவ  இத்தனை  நேரமா  என  யோசித்திருந்தாள். […]