Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Unnil Uruvaana Aasaigal

உன்னில் உருவான ஆசைகள் – 9 (2)

“எல்லாம் முடிஞ்சது. அங்கை இப்பத்தான் கிளம்பறோம்ன்னு போன் பண்ணினா. அதுக்குள்ள உங்க தம்பிக்கு போன் போட்டு கிளம்பி வர சொல்லுங்க. கசகசன்னு இருக்கு நானும் குளிச்சுட்டு புது புடவை கட்டிட்டு வரேன்…” கடகடவென ஒப்பித்துவிட்டு உள்ளே ஓடியவர் ஓடிய வேகத்தில் மீண்டும் வந்தார். “மணி என்ன?…” என வந்தவர், “வாசல்ல நில்லுங்க. இன்னும் கொஞ்சம் நேரத்துல நொங்கு, பதநீர் கொண்டுவருவான். நேத்தே சொல்லிட்டேன். வாங்கி வைங்க. வரவங்களுக்கு குடிக்க குடுக்கலாம். குளுகுளுன்னு இருக்கும் வெயிலுக்கு…” பூங்காவனத்திடம் அதையும் […]


உன்னில் உருவான ஆசைகள் – 9 (1)

ஆசைகள்  – 9         மறுநாள் காலை எழுந்ததில் இருந்து அத்தனை வேலைகள். சீதாவை வைத்துக்கொண்டு பரபரப்பாக செய்தார் யமுனா. தங்கள் வீட்டு பக்கத்தில் இருந்து சொந்தங்கள் யாரவது வேண்டுமே. பெண் வீட்டார் வரும் நேரம். அங்கை இருந்தாலும் நெருங்கிய உறவு வேண்டுமாதலால் முதல் நாளே மாலை பூங்காவனமும், யமுனாவும் சென்று பூங்காவனத்தின் தம்பியை குடும்பத்துடன் வருமாறு அழைத்து வந்திருந்தார்கள். யமுனாவின் அண்ணன் வெளியூரில் இருப்பதால் உடனே சென்னை வரமுடியாத சூழ்நிலை. முதலில் முடிவு செய்ததை போல […]


உன்னில் உருவான ஆசைகள் – 8 (2)

“எனக்கென்ன கோவம்? நான் எதுக்கு கோவப்படனும்?…” என விட்டேற்றியாக பேசினார் பூங்காவனம். “சொல்ல கூடாதுன்னு இல்லை. எனக்கு ஒரே பயமா போச்சு, இதுவும் நின்னுடுமோன்னு…” என்றவர் முதல் நாள் இரவு கதிர் வந்து பேசியதை பற்றி சொல்ல, “இதை ஏன் நீ நைட்டே சொல்லலை?…” என்றார் பூங்காவனம். “நீங்க அப்பத்தான் போய் படுத்தீங்க. எழுப்பி சொல்ல மனசில்லை. காலையில ரெண்டுபேரும் கிளம்பட்டும்ன்னு இருந்தேன். அதுக்குள்ளே சம்பந்தியும் இப்படின்னு சொல்லவும் வேற எதையும் யோசிக்க முடியலை…” என்றார். “ஏன் […]


உன்னில் உருவான ஆசைகள் – 8 (1)

ஆசைகள் – 8 யமுனா சரளாவிடம் பேசிவிட்டு கொஞ்சமும் தாமதிக்கவில்லை. உடனே அவரையும், அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வரும்படி அங்கையிடம் சொல்லியவர் தானும் உடனே கிளம்பினார். “யமுனா என்ன திடீர்னு வெளில கிளம்பிட்ட?…” என்று கேட்க, “சம்பந்திய பார்க்க போறேன். கூட வரீங்களா?…” என்றார் யமுனா. கேட்கும் கேள்வியே மிரட்டலாக இருக்க அதன்பின்னும் வர பூங்காவனத்திற்கு மனது வரவில்லை. “ஒன்னும் வேணாம், நீயே போய் பார்த்துட்டு வா…” என்றவர், “ஆமா இப்ப எதுக்கு?…” “பொம்பளைங்க எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். […]


உன்னில் உருவான ஆசைகள் – 7

ஆசைகள் – 7          கதிரின் இடம் வந்ததும் வாசலில் தனது வண்டியை பார்க் செய்தவள் அன்றைய நாள் போல இன்றும் முன்னால் அமர்ந்திருப்பானோ என கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு செல்ல அங்கே அமர்ந்திருந்தது தீபக். “வாங்க மேடம்…” என வழக்கமாக கஸ்டமரை வரவேற்கும் விதமாகவே அவன் அழைக்க தலையசைப்புடன் பார்த்தவள், “மிஸ்டர் செங்கதிரவன் இல்லையா?…” என்றாள். எடுத்த எடுப்பிலேயே கதிரை பற்றி அவள் கேட்டதும் தீபக்கிற்கு ஆச்சர்யமாக இருக்க ‘மனுஷனுக்கு கேர்ள் ப்ரென்ட் எல்லாம் இருக்கா? […]


உன்னில் உருவான ஆசைகள் – 6

ஆசைகள் – 6 தந்தையின் பார்வையில், கேள்வியில் எழுந்து நின்ற தாமரை அவரிடமே திரும்பினாள். “என்கிட்டையே கேளுங்க. எப்போ பார்த்தாலும் அம்மாவையே பிடிச்சு படுத்தறீங்க?…” என்றாள். “இவ்வளோ நேரமும் உன்னை வச்சு தானே கேட்டேன்? அப்போ காதுல விழுந்திருக்கும் தானே?…” என அவரும் சொல்ல சரளா அவரின் கையை பிடித்தார். “பொறுமையா பேசுங்க. அவளே ஏதோ குழப்பத்துல இருக்கற மாதிரி இருக்கா…” என்றார் மகளின் முகத்தை பார்த்து. “அப்படியா இருக்கு?…” என கேட்டபடி தாமரை கண்ணாடியின் பக்கம் […]


உன்னில் உருவான ஆசைகள் – 5

ஆசைகள் – 5 கதிரின் அதட்டலில் தர்ஷன் வாயை மூடிக்கொள்ள அனைவரும் வந்து நின்ற தாமரையின் பக்கம் கவனம் வைத்தனர். “வாம்மா, வந்து வணக்கம் சொல்லிட்டு உட்காரு…” என அங்கை சொல்லவும் தலையசைத்தவள் பொதுவான வணக்கத்தை சமர்ப்பித்தவளாக எதிரே இருந்த தனி இருக்கையில் அமர்ந்துகொண்டாள். பின் அவள் என்ன படித்திருக்கிறாள் என்ன வேலை என்பதை எல்லாம் கேட்டு தெரிந்த பின்னர் ஏன் தர்ஷன் அதிர்ச்சியாக அப்படி சொன்னான் என்பது புரிந்தது. பேச்சின் ஊடே ட்ராவல்ஸ் பற்றிய பேச்சும், […]


உன்னில் உருவான ஆசைகள் – 4

ஆசைகள் – 4 செங்கதிரவன் வீட்டில் இருந்து ஞாயிறு அன்று பெண் பார்க்க வருவதாக தகவல் வந்துவிட்டாலும் அதை தாமரையிடம் வீட்டினர் சொல்லவே இல்லை. நிவேதாவிடம் கூட. “உன் பொண்ணுக்கிட்ட வாயை திறந்த பார்த்துக்கோ. என்னை மனுஷனா பார்க்கமாட்ட….” என சோமநாதன் சரளாவை மிரட்டி இருந்தார். “அவளுக்கு சொல்லாம எப்படிங்க?…” “என்ன எப்படிங்க? சொன்னா அதுக்கும் முட்டுக்கட்டை போட்டுட்டு இருப்பா. எங்கையாவது கிளம்பறேன், நீங்க பாருங்க பேசுங்கன்னு…” “அதுக்காக விவரத்தை சொல்லாம அப்பன்னு பார்த்து சொல்லும் போது […]


உன்னில் உருவான ஆசைகள் – 3

ஆசைகள் – 3         அன்று இரவு வீடு திரும்பிய கதிர் சாப்பிட்டு முடிக்கும் வரை யமுனா ஒன்றும் பேசவில்லை. பூங்காவனம் மனைவி எப்போது இதை ஆரம்பிப்பார் என காத்திருக்க அவன் சாப்பிட்டு முடித்து கையை கழுவி எழுந்ததும், “ஒரு நிமிஷம் நில்லு கதிர்…” என்று யமுனா சொல்ல, “என்னம்மா?…” என்றான். “ஒரு வரன் வந்திருக்குது. அதை பத்தி சொல்லத்தான் வெய்ட் பண்ணேன்…” “சரி சொல்லுங்க…” என அமர்ந்துகொண்டான். “இன்னைக்கு தான் அங்கை பொண்ணோட போட்டோ கொண்டு […]


உன்னில் உருவான ஆசைகள் – 2 (2)

அதில் முக்கியமான விஷயத்தை மறைத்துவிட்டார் அவரும். பெண்ணிற்கு இந்த திருமணத்தில் விருப்பமா இல்லையா என்பதை சொல்லாமலே குடும்பத்தை கொண்டே பேசி முடித்துவிட்டார். யமுனாவுமே பெண்ணிற்கு தெரியாமல் போட்டோ வாங்கி வந்தேன் என்று அங்கை சொல்லியதை மறந்துவிட்டிருந்தார் அடுத்தடுத்த பேச்சுக்களில். யமுனாவும் தலையை ஆட்டிவிட்டு பூங்காவனத்தை சத்தமாய் அழைத்தார்.அவர் வெளியே வரும் நேரம் தர்ஷன் காபியுடன் வர தந்தைக்கும் ஒரு கப்பை நீட்டினான் அவன். கொடுத்ததை வாங்கவும் முடியாமல் வேண்டாம் என்றும் சொல்லமுடியாமல் திணறிய பூங்காவனம், “என்னடா இந்நேரம் […]