உங்களுக்கு counter comment கொடுக்கவே நான் தினமும் ஒரு படி பால் குடிச்சு தெம்பேத்திக்கணும் போலிருக்கே
சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். இன்னும் 2.5 to 6 updates நான் படிக்கலை. So அந்த பகுதிகளில் என் POV-க்கு எதிர்ப்பதமா உண்மையை சொல்லக்கூடிய ஏதாவது நிகழ்வுகள் இருந்தா சொல்லுங்க படிச்சுட்டு வந்து என் கருத்தை மாத்திக்கறேன்.
இன்னைக்கும் குடும்பத்துக்காக வீட்டுல செய்யற வேலைகளுக்கு பணத்தால எதிர் மரியாதை செய்யப் படறதில்லை. நான் அதை சம்பளம் என்று குறிப்பிடாததற்கு காரணம் அந்த வேலைகளோட மேன்மை.
அதே மாதிரி இன்னொரு கசக்கும் உண்மை, உழைப்பு பணமா உருமாறி ஒருத்தருக்கு உதவும் போது, அந்த உழைப்பை செய்தவங்க நன்றிக்குரியவங்களா பார்க்க படறாங்க. இந்த வேற்றுமையை தப்புன்னு ஒத்த வார்த்தையில் விளக்கிக் கடக்கக்கூடாது. அது ஒரு பெரிய பாதகம் -ஏன் துரோகச்செயல் என்று கூட சொல்லலாம். அதுதான் சரண்யாக்கு அவங்க பிறந்த வீட்டு ஆளுங்க செய்தது. So நான் அவளோட உடன்பிறப்புகளை எந்த விதத்திலும் பரவாயில்லை என்னும் ரகத்தில் கூட சேர்க்கைலை -சேர்க்கவும் மாட்டேன்.
Contradiction in my Pov with yours is only about Vetri's siblings.
வெற்றிக்கு அவங்க இருவரும் நன்றி உடையவங்களா இருக்காங்களா -எந்த விதத்தில்?
வெற்றி வந்து தனக்கு பிள்ளைகள் இருக்குன்னு தானே தெரிஞ்சுக்கிட்டு, அவங்களுக்காக பேசிய பின், இனி நம்ம அண்ணன் தெளிஞ்சுட்டான் அவன் அண்ணியோடவும் குடும்பத்தோடவும் தான் இருக்கப்போறான் என்று தெரிந்த பின் வந்த சந்தர்ப்பவாத பாசம் தான் இது.
சரண்யாக்கு அண்ணின்னு மரியாதை தரா விட்டாலும் தன் அண்ணனோட குழந்தைகளின் மேல பாசம் வராத தங்கையும் தம்பியும் எந்த வகையில் வெற்றிக்கு நன்றி செலுத்திட்டாங்க சொல்லுங்க.
அட நன்றி கூட வேண்டாம். சகோதர அன்பு- அது இருந்துததா அவங்களுக்கு இவன் மேல. அபிராமி தான் அண்ணன் காதலி என்று தெரிஞ்சப்போ தங்களோட அப்பாகிட்டயோ இல்லை அவமானப்படுத்திய மாமாகிட்டயோ அண்ணனுக்காக பேசினாங்களா?
அதெல்லாம் விடுங்க, கல்யாணம் ஆனாஉடனே ஒன்னும் வெற்றி சரண்யா மேல பாய்ஞ்சு உறவாடலியே. அது இவங்களுக்கெல்லாம் தெரியாதா? அப்ப அண்ணனோட நிலையை அண்ணிக்கு புரிய வைக்க ஏன் தோணலை மாயாக்கு. Atleast பிரியா செஞ்ச கலகத்துக்கு பின்னாடியாவது அபிராமி பத்தி சொல்லி "நீ எங்கண்ணனை விட்டுட்டு போன்னு"- கூட சொல்லி இருக்கலாமே (அவங்க அப்பாவை எதிர்த்து ) செஞ்சாளா? என்ன காரணம் என்றே தெரியாமல் தன்னை சுற்றி உள்ளவங்களோட வெறுப்பை தானே சரண்யா அனுபவிச்சா. கேட்டா அவங்க அவங்களோட அண்ணனுக்கு நல்லது நினைச்சதா சொல்லுவாங்க - அது சரியா?
இல்லை அபிராமியை "உன் குடும்பத்தை விட்டு வான்னு"-கூப்பிட வேண்டியது தானே தன் அண்ணனுக்காக. Atleast தனக்கு குழந்தை வந்த பின்னாவது சக்தி தன் அண்ணன் குழந்தைகளின் நிலை பற்றி யோசிச்சானா. தகவலாவது சொன்னானா அண்ணனுக்கு. இல்லை தானே. அப்புறம் எங்க இருந்துங்க அவங்க ரெண்டு பேரும் அவனுக்கு நன்றியோட இருக்காங்கன்னு சொல்லறீங்க.
அன்றாடம் மாயா குடும்பத்தை தாங்க வெற்றி துணை வேண்டாம் தான். ஆனால் சீர் செய்ய சக்தி போதாது தங்கைக்கு. பெரிய அண்ணன் வேணும். So இப்ப நிலைமைக்கு அண்ணன் மதிக்கற அண்ணியின் கவனிப்பும் வேணும். அதற்கு தக்க நடந்து கொள்ளும் புத்திசாலி தான் மாயா.
சக்தி அண்ணனை புரிந்து கொள்ளாமல் தனத்துக்கு support செஞ்சா பெத்தவங்க பொறுப்பெல்லாம் அவன் தலையில தான் விழும். இப்ப அப்படி இல்லை. என்றைக்கும் போல அண்ணனே செய்வான்.. இவரு ஒத்து ஊதி, ஒத்துமையா நின்ன பெருமையை வாங்கிக்கிட்டாலே போதும்.
கொஞ்சம் இப்படி கற்பனை செய்வோம். தன்னை அவமானப்படுத்திய புருஷன் வீட்டு உறவுகளோடு சரண்யா ஒட்டாமல் இருந்து, வெற்றியையும் ஒன்னும் செய்யக்கூடாதுன்னு சொல்லறான்னு வைப்போம், அப்பவும் இவங்க இது வரைக்கும் தங்களுக்காக எல்லாம் செய்த வெற்றிக்காக அண்ணியோட அவமதிப்பை தாண்டி அண்ணனோட சுமுகமான உறவு வெச்சுப்பாங்களா என்ன?
சரண்யா இயல்பாகவே தன் புருஷனை காதலிச்சா இப்பவும் காதலிக்கறா. அவளோட தன்மானம் அவளை புருஷன்கிட்ட இருந்து தள்ளி நிக்க வெச்சுருக்கு. அவ்வளவு தான். அதனால அவனுக்காக எல்லாத்தையும் அனுசரிச்சு அரவணைத்துப் போறா. அதோட பலன் தான் இவங்க மூணு பேரும் ஒத்துமையா நிக்கறது. தனத்தோட வளர்ப்புக்கு அந்த credits போய் சேராது. அது தான் என்னோட POV towards வெற்றியின் உடன்பிறப்புக்கள்.
Another instance for your remembrance - வெற்றி சரண்யாவோட சேர்ந்து வாழ ஆரம்பித்த பின்னும், கல்யாணத்துல அவ குழந்தையை கொடுக்கலைன்னு தன்னோட அம்மாகிட்ட complaint செஞ்சவதானே இந்த மாயா? அவளுக்கு எந்த விதத்தில் அண்ணன் கிட்ட சுயநலமற்ற பிணைப்பு இருக்கு சொல்லுங்க.
அப்ப, சுரேந்திரனுக்கு அந்த நியாயம் பொருந்தாதா? அவனும் நடு இரவுல வீட்டுக்கு வந்த தங்கைக்காக நியாயம் கேட்க தானே போனான். போன இடத்துல அவனை மோசமாக அடிக்கபோய் தானே அவங்களுக்கு சரண்யா குடும்பத்து மேல. வெறுப்பு.
வெற்றியிடம் தாலியை கழட்டிக் கொடுத்த சரண்யாவும் அவளோட பெத்தவங்க பேச்சை கேட்டு குழந்தைகளை abort பண்ணி இருந்தா, அவங்களும் அவளுக்கு நல்ல முறையில் மறு கல்யாணம் செஞ்சு வெச்சுருப்பாங்களோ என்னவோ.
I mean though they badly treated her while shouldering herself and her children's responsibility, might be that they would have got her married once again to a good guy thereby happily transferring her responsibility once again -to someone.
நான் இப்படி சொல்லறதுனால நான் அவங்க செயலை Support பண்ணுவதா நினைக்காதீங்க. நான் சொல்லுவது சரண்யா வெற்றி மேல வெச்ச பாசத்தை-காதலை அவளால வேற ஒருத்தர் மேல வைக்க முடியாதென்பத்தை உணரும் அளவுக்கு அவளுக்காக யோசிக்கறவங்க இல்லை அவளோட siblings and parents . தான் சொல்லுவதை செஞ்சா அவங்க அவளை தாங்காட்டியும் இப்படி மோசமா அவமதிச்சுருக்க மாட்டாங்க.
அதே மாதிரி தான் அண்ணனுக்காக அவனோட நல்வாழ்வுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிபோடாத
சக்தியும் -மாயாவும் எந்த விதத்திலும் சரண்யா siblings -ஐ விட better கிடையாது.
எப்பவுமே யார் அதிகமா வீட்டுக்கு வந்து போறாங்களோ அவங்களோட தான் தொடர்பும் அதிகம் இருக்கும். அதுக்கு அவங்க நல்லவங்களா இருக்கணும்ன்னு அவசியமில்லை.
வெற்றி சொல்லாத வரை சரண்யா அவளோட உறவுகளை தன் வீட்டிற்கு அழைக்கவே இல்லை. அது அவளோட சுபாவம். தன் பிறந்த வீட்டு மனிதர்கள் செய்த துரோகங்களை அவளால சட்டென்று மன்னிக்க முடியலை. ஆனால் வெற்றி அப்படி இல்லை. ஏன்னா வெற்றிக்கு இழப்பு மட்டும் தான், சரண்யாவிற்கு தான் இழப்பை தாண்டி எல்லா தரப்பிலும் அவமானமும் கிடைத்தது. அதனால அவளோட வலி அவளை அப்படி நடக்க வைக்குது. அவ்வளவு தான்.