இந்த கேள்வியெல்லாம் குருமூர்த்தியை கேட்கணும் sis நீங்க.. அவருக்கே வழமை தெரியல... ஏன் போகணும் னு கேட்கறார்... பாவம் ஆர்யன் என்ன பண்ணுவான்... ? அதுலயும் அவன் ரொம்ப பிஸி... ? அதெல்லாம் பின்னாடி ஏன் மருமகன் போல உண்டான்னு சொல்ல வைப்பான் பாருங்க... ?பொண்ணுக்காகவே வாழற அப்பா நரசிம்மன் பேச்சு ஒவ்வொன்னும் நச்சுன்னு இருந்தது. இதைக் கேட்டதுக்கு அப்பறம் அடுத்தவிக மனநிலை பிரவுனுக்கு புரிஞ்சா சரி. நதி கலங்காதே. சிம்மாக்கு ஒன்னும் ஆகாது.???????. தமயந்திக்கு இத்தனை டார்கெட்டையும் சமாளிக்கிறதுன்னா கொஞ்சம் கஷ்டந்தான்.
ஏன்டா ப்பா தலைக் கனம் புடிச்சவனே சம்பந்தக்காரங்களை உடம்பு சரியில்லைன்னா போயி எட்டிப் பாக்கறது இல்லையா? வழமை தெரியாம இருக்கியே ஆர்யா. அவார்டு வாங்கிட்டேனு அலப்பறையை கூட்டுனா மட்டும் பத்தாது. மனுசங்களை அனுசரிக்கத் தெரியோனும். அதுவும் எதிர்காலத்துல மாமனாராகூட மாற வாய்ப்பிருக்கறவரை பாக்கறதுக்கு??????. வேற வேலை இல்லையானு கேக்கறே. எதுக்கும் தொலைநோக்குப் பார்வையை தெரிஞ்சு அறிஞ்சுவச்சுக்கோ.