இங்கு பல பெற்றோர்கள், ஏன்? என் பெற்றோர்கள் உட்பட தன் பெண் பிள்ளைகளின் மனதில் விதைக்கும் ஆசைதான் இது. ஐந்து வயதில் “நீ என்ன ஆகப் போகிறாய்?”என்று கேட்டு, அதற்கான பதிலையும் அவர்களே குழந்தைகளின் மனதில் விதைத்து விடுவார்கள். ஆனால் 25 வயதில் உன் கனவு என்னவென்று கேட்க மாட்டார்கள். அது நிறைவேறியதா என்றும் பார்க்க மாட்டார்கள். அப்பொழுது அவர்களுக்கு அவர்களுடைய கனவு பெரிதாக தெரியும். திருமணம் என்னும் கனவு. நீ திருமணத்திற்கு பின்பு என்ன வேண்டுமானாலும் […]
Readmoreநம்மில் பலர் கேட்டிருப்போம் இந்த வாசகத்தை “வெள்ளிக்கிழமை அதுவுமா பொம்பள புள்ள” நான் பார்த்து வியந்த பெண்மணிகளில் ஒருவர் இவர். ஒரு மருமகளையே சமாளிக்க முடியாத காலத்தில் மூன்று மருமகள்களை நேர்த்தியாக வாழ வைப்பவர். மருமகள்களை கண்டிப்பார் ஆனால் யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டார். பேரப்பிள்ளைகளை அன்னை தந்தையை விட அதிக அக்கறையுடன் கவனித்துக் கொள்வார். சில சமயம் எனக்கு அவரைப் பார்த்தால் வியப்பாக இருக்கும் இப்படியும் ஒரு பெண்மணியா? இவ்வளவு கஷ்டங்களை தாண்டியும், மகன்கள் பேசும் […]
Readmoreஅத்தியாயம் 4 “அண்ணா எனக்கு ஒரு வேலை வேணும்… என்ன வேலைன்னாலும் பரவாயில்லை… எதாவது பார்த்து கொடுங்கன்னா” காலையிலும் சாப்பிடாததால் மதியமாவது சாப்பிடுவோம் என, எண்ணி தன் அறையில் இருந்து வந்த மகிழினியின் காதில் விழுந்தது இந்த வார்த்தைகள். ‘இப்போ போய் நம்ம எதாவது சொன்னோம் நம்மல மறுபடியும் வச்சு செஞ்சிருவாங்க. சைலன்ட்டா சாப்பிட்டு ஓடிடவேண்டியதுதான். அவங்க சாப்பிட்டாங்களான்னு தெரியலையே…’ என்று எண்ணியபடி சமையல் அறைக்குள் நுழைந்தாள். அங்கு ஏதாவது இருந்தால் தானே சாப்பிடுவதற்கு மித்ரன் தான் […]
Readmoreஅத்தியாயம் 3 “என்னடி இது?” என்றபடி தன் காலை கடன்களை முடித்து, தன் அறையில் இருந்து வெளிவந்த மகிழினியின் முன், கையில் ஒரு கோப்புடன் வந்து நின்றான் மித்ரன். அவனை சட்டை செய்யாமல் சமையல் அறையை நோக்கி நடந்தவள்… “ஃபைல்… பாத்தா தெரியலையா?” என்றாள், தனக்கான தேனீரை கோப்பையில் ஊற்றிய வாறே. “ஃபைலுக்குள்ள என்ன?” என்றபடி அவனும் அவள் பின்னால் வந்தான் “ஓபன் பண்ணி பாருங்க தெரியும்” “பாத்துட்டு தான் கேட்குறேன்… என்னோட சர்டிபிகேட்ஸ் இருக்கு… எப்படி? […]
Readmoreஅத்தியாயம் – 2 சமையல் என்பது எப்பொழுதுமே மித்ரனுக்கு விருப்பமான ஒன்று. அவன் எந்த அளவுக்கு ரசித்து உண்பானோ அதே அளவுக்கு ரசித்து சமைப்பான். அன்றைய காலை உணவை தயாரித்து வந்து அவன் சாப்பாட்டு மேஜையில் அமரும் போது வீட்டு வாசலில் வந்து நின்றது மகிழினியின் மகிழ்வுந்து. அவள் மகிழ்வுந்தை அதற்கான நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் மித்ரா. “அதுக்குள்ள சமையல் முடிச்சாச்சா?” என்றபடி அவளும் அவனுடன் உணவு மேஜையில் வந்து அமர்ந்தாள். அவன் எதுவும் […]
Readmoreஅத்தியாயம் 1 கோடைகாலத்தின் தொடக்கமான மார்ச் மாதத்தின் எட்டாம் நாள், உலக மகளிர் தினம். காணொளிகளின் ஆதிக்கத்தால் வானொலிகளின் பயன்பாடு சற்று குறைந்திருந்தாலும், கண்கள் மற்றொரு வேலையில் ஈடுபட்டிருக்கும் சிற்சில இடங்களில் இன்றும் காணொளிகள் அதன் ஆதிக்கத்தை செலுத்தி கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு காணொளி நிகழ்ச்சிக்காக மகளிர் தினமான அன்று சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தாள் நம் நாயகி,மகிழினி. மகிழினி… மித்ரா என்ற புனைப்பெயரில், 15 வயது முதலே தன்னுடைய எழுத்துப் பயணத்தை தொடங்கியவள். பத்து வருட எழுத்துப் […]
Readmoreயார் குற்றம்? கதிரவன் தன்னுடைய கதிர்களை மெல்ல சுருக்கிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரம்………. நான் என்னுடைய கல்லூரி வகுப்புகளை முடித்துக்கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். பொதுவாகவே பேருந்துகளில் பயணம் செய்வது என் விருப்பத்திற்குரிய ஒன்று. அதுவும் பேருந்து நிறுத்தத்தில் நின்று……. ஒரு பேருந்துக்காக காத்திருந்து ஏறுவதை விட……. பேருந்து நிலையத்தில் நமக்காக காத்திருக்கும் பல பேருந்துகளில்…….. பிடித்தமான ஒரு பேருந்தை தேர்ந்தெடுத்து…….. அதில் இருக்கும் பல இருக்கைகளில் பிடித்தமான ஜன்னலோர இருக்கையை தேர்ந்தெடுத்து […]
Readmoreநிறைவு பதிவு சென்னை மெட்ரோ ரயில் நிலையம் வழக்கமான தனது பரபரப்பை இழந்து காணப்பட்டது. ரயில் பெட்டிகள் தேங்கி நிற்க…….. மக்கள் கூட்டம் அலைமோதும் அந்த ரயில் நிலையத்தில் ஒருவர் இருவருக்குமே பஞ்சம் ஆகிவிட்டது. மேலும் மக்கள் கூடும் பல பிரம்மாண்டமான மால்கள் திரையரங்குகள் போன்றவை வெறிச்சோடிப் போயின. சுவாசிக்கும் காற்றையும் நச்சுத் தன்மை உடையதாய் மாற்றிய தொழிற்சாலைகள் மூடப்பட்டன. காற்று சுத்தமானது ஆனால் மனிதன் சுதந்திரமாக சுவாசிப்பதற்கு ஏற்றவாறு அல்ல. பறவைகளும் விலங்குகளும் சுதந்திரமாய் சுவாசிப்பதற்கு […]
Readmoreஅத்தியாயம் -10 மறுநாள் காலையில் இளம்பருதி ரகுவுடன் எப்போதும் அமர்ந்திருக்கும் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தான். ஏதோ நினைவு வந்தவனாய் தன்னுடைய கைப்பேசியை எடுத்தவன் அவனுடைய அத்தைக்கு அழைத்தவன் “ஹலோ அத்தை ரீச் ஆகிட்டீங்களா?” என்றான் “ஆமா சின்னு இப்போ தான் ரீச் ஆனோம்” என்று அவர் கூற… “அத்தை நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல பாத்து கவனமா இருங்க” என்று கூறி கைபேசியை அணைத்து விட்டான். அங்குள்ள சீதோஷண நிலையை பற்றி மட்டுமே கவலைப்பட்ட அவன் […]
Readmoreஅத்தியாயம் – 9 நளினியுடன் பேசி முடித்த இளம்பரிதி நேரே சென்றது அவனுடைய அத்தை தங்கியிருந்த அறைக்கு தான். ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் அவருடைய அரை வாசலிலேயே நின்றவன் மெல்ல அவர் அறை கதவை தட்டினான். தாமரை தான் கதவை தட்டுகிறார் என நினைத்த மீனாட்சி அங்கு இளம்பருதியை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதனை அவர் கண்களில் தெரிந்த அதிர்ச்சியே காட்டியது. அவனை வாசலில் கண்டதும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றவர் “சின்னு…” என எப்பொழுதும் அவனை அழைக்க […]
Readmore