அத்தியாயம்-27 ராஜசேகர் மற்றும் மரகதம் இருவரின் தந்தையரான தனபால் மற்றும் ராஜகோபால் இருவரும், தங்களுக்கு இருந்த சொற்ப நிலத்தில் விவசாயம் பார்த்து, தம் குடும்பத்தை நடத்தி வந்தார்கள்..கூட்டு குடும்பம்..எனவே, வருமானம் முதல் செலவு வரை பொது.. அவர்கள் நிலத்தில், நடவு, கதிர் அறுப்பு போன்ற சமயத்தில், கூலி வேலைக்கு ஆட்கள் வருவார்கள்.. சேகர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, அந்த ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் தான் செங்கோடன்,செந்தாமரை தம்பதியர்..அவர்களின் ஒரே புதல்வி பாரிஜாதம்.. அவர்கள் ஊரில் […]
Readmoreஅத்தியாயம்-26 ஊர் எல்லைக்குள் கார் நுழைந்ததும், அகலுக்கு அழைத்தான் பாண்டி.. “அகலு..” “சொல்லு மாமா..” “அத்தை கிட்ட சொல்லிட்டியா??” “சொல்லிட்டேன் மாமா..” “என்ன சொல்லுச்சு..??” “ஒண்ணுமே சொல்லல..அறைக்குள்ள நேத்து போனது..இன்னும் வெளிய வரல..” “நீ போய் பார்த்தியா??” “ஹ்ம்ம்..போனேன்..அனல் பார்வை பார்க்குது..” “இப்போ என்ன பண்ணுறது??” “நீங்க வாங்க..பார்த்துக்குவோம்.. வேற வழி இல்லை.. அவுகளை வாசல்ல நிறுத்தி வை.. ஆரத்தி எடுத்து கூப்பிட்டுக்குறேன்..” “சரி அகல்..” திரும்பி ராஜாவின் முகம் பார்த்தான்.. அவனும் இவனை தான் பார்த்துக் […]
Readmoreஇனி இறங்கவே கூடாது என்னும் முடிவோடு, சீக்கிரம் யார் கண்ணிலும் படாமல் போய் சேர வேண்டும் என்னும் எண்ணமும் சேர்ந்து கொள்ள, உணவுக்கு கூட இறங்காமல், ராஜாவின் இல்லத்தை வந்து அடைந்தாள்..சீக்கிரம் ஏதாவது காரணம் சொல்லி விட்டு, கிளம்பி விட வேண்டும் என்னும் எண்ணத்தோடு வந்தவளை, அவள் மன்னவனின் புகைப்படம், பிடித்து வைத்து கொண்டது.. அவன் உதாசீனங்கள், அலட்சியங்கள், கோபங்கள், ஏன் என புரியாமல் திணறி, குழம்பி, வருந்தி, கடைசியில் உண்மை தெரிந்து, மதுவுக்கு செய்து கொடுத்த […]
Readmoreஅத்தியாயம்-25 இரவு உணவை முடித்தவுடன், அவர்கள் பயணம் ஆரம்பித்தது..பாண்டி காரை ஓட்ட, ராஜா அருகில் அமர்ந்து கொண்டான்.. பின் இருக்கையில், மதியும் மீனாவும் அமர்ந்திருந்தார்கள்.. கண்ணாடியின் வழியே, மீனாவை அவ்வப்போது பார்த்துக் கொண்டே ஓட்டினான் பாண்டி.. அதை உணர்ந்து, சில பல முறைப்புகளை கொடுத்த படி இருந்தாள் மீனா.. அதை தட்டி விட்ட படி, அவளை பார்வையிட்டு கொண்டே வந்தான்.. காதல் பாடல்களை காரில் ஓட விட்ட படி, கவுண்டமணியை விட சூப்பராக ரொமான்டிக் லுக் கொடுத்த […]
Readmoreஅத்தியாயம்-24 பெங்களூரின் மிக பெரிய மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவர் அறையின் முன்னே, காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்திருந்தாள் மதி.. மீனாவுக்கு ஒரு அவசர பிரசவ கேஸ் ஒன்று பார்க்க வேண்டி இருந்ததால், அவள் அங்கு இருந்தாள்.. அந்த மருத்துவமனை வாயிலுக்கு வந்தது ராஜாவின் கார்.. பெங்களுரில் ஒரு வேலை என்று கூறிவிட்டு ராஜா,பாண்டி, இருவரும் கிளம்பி வந்திருந்தார்கள்.. பாண்டியிடம் ராஜா, “பாண்டி, உள்ள போய் அந்த பொண்ணை பத்தி விசாரி..நான் பார்க் பண்ணிட்டு வரேன்..” “சரி மாப்பு..” அவன் […]
Readmoreஅத்தியாயம்-23 ராஜாவின் தந்தை அருள்மொழியின் அக்கா சாவித்திரியின் மகன் தான் மிதுன்..சாவித்ரிக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும்.. இரண்டு பெண்களுக்கும் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்.. ஒரு பெண் வெளிநாட்டிலும், இன்னொரு பெண் கல்கத்தாவிலும் வசிக்கிறார்கள்.. மிதுன் கடைக்குட்டி..சாவித்திரி குடும்பத்தோடு சென்னையில் இருக்கிறார்.. மிதுன் மருத்துவனாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணி புரிகிறான்.. சாவித்திரியின் கணவன் வழி சொந்தத்தில் ஒரு கல்யாணம்..அதற்கு, அவரும் அவர் கணவரும் வர முடியாத சூழல், எனவே […]
Readmoreஅத்தியாயம்-22 கண்ணில் நெருப்பு பொறி பறக்க நின்ற மீனாவின் முன், கண்ணீர் வழிய நின்றாள் மதி..“சொல்லு..எங்க போன இத்தனை மாசமா??” “…” “நான் மெடிக்கல் கேம்ப்க்கு போன ஒரு மாசம் இடைவெளிலே, அப்பா,அம்மா கிட்ட, சர்வீஸ் ஹெல்ப்ன்னு ஏதேதோ கதை விட்டுட்டு, எங்க போய்ட்டு வர.. அது யாருடி?? எனக்கு தெரியாம உனக்கு உயிர் தோழி..??அவளுக்கு உதவ, நீ போனியா..?? இதுக்கு தான், பெங்களுர்ல வேலை பார்க்க போறேன்னு கிளம்பி வந்தியா??எத்தனை போன் பண்ணேன்..பெங்களுர்ல இருக்குற மாதிரியே […]
Readmoreஅத்தியாயம்-21 மேடையில் மணமக்களை பார்த்தபடி வேகமாய் விரைந்தான் ராஜா..அவன் மேடையை நெருங்குவதற்கும், ஐயர் “கெட்டிமேளம்,கெட்டிமேளம்” என்று சொல்லுவதற்கும் சரியாக இருந்தது.. மணமகன் மதுவின் கழுத்தில் தாலியை கட்டினான்.. நிறுத்துங்க என்று கூறி, கடைசி நொடியில், மண்டப சத்தத்தில் நிறுத்த, இது சினிமா இல்லாத காரணத்தால், திருமணம் நடந்தேறியது.. அதுவும் தாலி கட்டும் வேலையை விட்டுவிட்டு, யார் நிறுத்த சொல்வார்கள், தாலியை கழுத்து அருகே கொண்டு சென்ற பின், வேடிக்கை பார்ப்போம் என்று மணமகனும் நினைக்காத காரணத்தால், யாரும் […]
Readmoreஅத்தியாயம்-20 ராஜா ஊருக்கு சென்று ஒரு வாரம் கடந்திருந்தது.. மது இங்கு சோர்வாகவே காணப்பட்டாள்.. அன்று தான் அகல் வந்திருந்தாள்..மரகதம் வர சொல்லி தொலைபேசியில் கூறியிருந்தார்.. அவளிடம், “உன்ற அண்ணி சாப்பிடவே மாட்டேங்குறா.. அவளை சாப்பிட வை.. நான் சொன்னா சாப்பிடுறேன்னு சொல்லிட்டு, அப்புறம் இப்படியே பண்ணுறா..” அகல் புன்னகைத்து கொண்டாள்.. ‘தலைவனை பிரிந்த ஏக்கத்தில், தலைவிக்கு உணவு உள்ளே சொல்லவில்லையா??’ அவளுக்கு ஜூஸ் கொண்டு சென்றாள் அகல்.. கூடத்தில் அமர்ந்திருந்தாள் மது.. “அண்ணி..” ஏதோ சிந்தனையில் […]
Readmoreஅத்தியாயம்-19 மதுவின் செய்கையில் திகைத்து அதிர்ந்து திரும்பினான் ராஜா..அவள் கைகளை விலக்கி, அவள் முகம் பார்த்தான்..அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்தவள்..அவன் மார்பில் முகம் புதைத்து, அணைத்துக் கொண்டாள்.. “மதி..” “…” “என்னம்மா??தனியா இருக்க பயமா இருக்கா??” “….” “பேச்சியை வேணா, உன் அறையிலே கீழ படுக்க சொல்லு..” “…” “என்ன மதி..??ஒண்ணும் பேசமாட்டேங்குற..” “நான், இன்னிக்கு இங்க தான் தூங்க போறேன்..” மெல்லிய குரலில், ஆனால் உறுதியோடு கூறினாள் மது.. “மதி..??” “ஏன், நான் இங்க தூங்குனா […]
Readmore