அத்தியாயம் 30: திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே முக்கியமான சொந்தபந்தங்கள் அனைவரும் பண்ணையாரின் வீட்டிற்கு வர வீடே ஜேஜே என இருந்தது. மல்லியும் உமாவும் வேலைக்கு வராததினாலும் சொந்நபந்தங்களின் வருகையாலும் வேலைகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிய சாந்தியை பார்த்த ஜெயா அவர்களிடம், “சாந்தி திருமணம் முடியறவரை வேலை அதிகமாக இருக்கும் துணைக்கு ரெண்டு ஆளுங்கள் வச்சுக்கோ, யாருக்கும் எந்தக் குறையும் இல்லாம பார்த்துக்கோங்க. […]
Readmoreஅத்தியாயம் 29: தம்பி தங்கைக்குத் தாயவளாய் தரணியில் சிறக்க அவரைச் சேய்களதுவாய் கண்ணின் இமை போலக் காத்திடுவாள் இருவர் தமக்கு இன்முகமாய் திருமணம் தந்தும் நல் வரவாய் கருணையின் வடிவாய் நடை பயிலும் தியாகத்தின் சுடராய் எழுந்தருளும் அன்புத் தமக்கை ஆழிய நலமும் சூடிய வளமும் சுந்தரமாய் வாழ்க வாழ்க ்்் (கவியருவி) *****//////******//////*******//////******/////****// மல்லி மற்றும் சிறியவர்களுடன் காங்கேயம் சென்ற உமா வெற்றியின் […]
Readmoreஅத்தியாயம் 28: தான் வேலை செய்த கம்பெனியில் அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு வெளிநாட்டிலிருந்து நித்தியன் தன் மனைவி மற்றும் மகனுடன் தாயகம் திரும்ப விமானத்தில் முதல் ஆளாக ஏறி அமர்ந்தவனின் மனதோ அத்தனை நிறைவாகவும் நிம்மதியாகவும் இருந்தது. அதே நிம்மதியான மனநிலையில் மகன் மற்றும் மனைவிக்கு தேவையான உதவிகளை செய்து அமரவைத்தவன் கண்மூடி அமர்ந்துகொண்டான். இனி இங்க […]
Readmoreஅத்தியாயம் 27: அடுத்த நாள் காலையில் எழுந்ததும் மல்லி வீட்டு வேலையை பார்த்துகொண்டு இருந்தவள், எப்பொழுதும் விடியலிலேயே எழுந்துவிடும் சுந்தரம் மணி ஆறு ஆகியும் எழாததால் திட்டிக்கொண்டே சுந்தரத்தை எழுப்பினாள். “என்ன ஆச்சி இவருக்கு?, இன்னும் எழுந்திரிக்கவில்லை, அளவுக்கதிகமா வேலையை இழுத்துபோட்டு செய்யாதீங்கனு சொன்னா கேட்டாதானா, சக்திக்கு மீறி வேலை செய்துவிட்டு, உடம்பு வலியியால் படுத்துக்கிறது…. தேவையில்லாம டாக்டருக்கு தெண்ட […]
Readmoreஅத்தியாயம் 26: வெளியே சென்று வந்ததிலிருந்து வெற்றியின் முகம் சரியில்லாததை பார்த்த குடும்பத்தினர் ஏதோ சரியில்லை என நினைத்துக்கொண்டவர்கள்… அவனிடம் பேசுவதற்காக மொத்த குடும்பமும் வெற்றியின் அறைக்கு சென்றார்கள். அவனோ இவர்கள் அறைக்குள் வந்ததுகூட அறியாமல் கண்களை மூடிக்கொண்டு கட்டிலில் படுத்திருந்தான்… அவனின் விழியசைவே சொன்னது அவன் தூங்கவில்லை என்று. நாச்சியார், “வெற்றி… என்னடா ஒரு மாதிரியா இருக்க?… ஏதாவது பிரச்சனையா?” என்றவரிடம்… “பெருசா எதுவும் இல்லை பாட்டி”. “அப்போ ஏதோ இருக்குனு அர்த்தம்… சரி சொல்லு […]
Readmoreஅத்தியாயம் 25: அல்லியூரில் இருந்து வந்ததும் நவ்யா கவிதாவிடம் வெற்றியின் குடும்பத்தினர் புகார் வாபஸ் வாங்க மறுத்துவிட்டதாக கூறியவள். “இதெல்லாம் சரிபட்டு வராது கவிதா… நம்ம லாயர் கிட்ட சொல்லி அடுத்து என்ன பண்ணலாம்னு கேட்கலாம்… இப்பவே மும்பை போனா தான் சரியா இருக்கும் கவிதா… உன்னுடைய துணிகளை எல்லாம் எடுத்துவை… அடுத்த பிளைட்க்கு நாம கிளம்பனும்”. “நான் பாண்டிச்சேரி போகனும் நவ்யா… […]
Readmoreஅத்தியாயம் 24: “நம்பியை கைது செய்த செய்தி மும்பையில் உள்ள கவிதாவிற்கும் நவ்யாவிற்கும் நம்பியின் முக்கியமான ஆட்கள் மூலமாக தெரியவே மூன்று நாட்கள் ஆகிவிட்டது”… அங்கு இருந்து அவர்கள் இருவரும் காங்கேயம் வருவதற்குள் அனைத்தும் முடிந்து விட்டது. “நம்பியின் மேல் இ்ரட்டைக்கொலை, மரகதலிங்கத்தை கடத்த முன்றது மற்றும் கொலை முயற்சி என மூன்று பிரிவுகளில் புகார் பதிவுசெய்தது மட்டுமல்லாமல் அவர் செய்த அத்தனை குற்றங்களையும் அவர்வாயாலே சொன்ன வீடியோவை […]
Readmoreஅத்தியாயம் 23: நம்பியை தாக்கிய விஷ்ணுவை தடுத்த தர்மர் மகன்கள் மூவரையும் பார்த்து, “நீங்க மூனுபேரும் என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது… இந்த நம்பி அவனுடைய இறுதிகாலம் வரை ஜெயிலைவிட்டு வெளியே வரவேகூடாது” எனக்கூறி அன்னைகளுக்கு ஆறுதலாக அவர்கள் கைகளை பற்றி காலுக்கருகே அமர்ந்து கொண்டார் அந்த தனையன்… சகுந்தலா மற்றும் காயத்திரி இருவருக்கும் நம்பியின் இந்த முகம் முற்றிலும் அதிர்ச்சியாக இருந்தது… […]
Readmoreஅத்தியாயம் 22: மஞ்சள் நீராடும் நாள் காலையில் எழுந்ததும் வழக்கம் போல் மல்லியும் உமாவும் வேலைக்கு சென்றுவிட்டனர். “ஏனெனில் இன்று மதியம் உணவானது பண்ணையார் வீட்டினர் சார்பாக கோயிலில் வைத்து ஊர் மக்கள் அனைவருக்கும் உணவினை வழங்குவார்கள்… இந்த விருந்தானது காலம்காலமாக திருவிழாமுடிந்த அடுத்த நாள் அதாவது மஞ்சள் நீராடும் அன்று நடைபெறும் வழக்கம்”. “ஆண்கள் அனைவரும் காலையிலேயே திருவிழா வரவு-செலவு […]
Readmoreஅத்தியாயம் 21.2: காலையில் எழுந்ததும் கம்பத்திறகு நீர் ஊற்றிவிட்டு தான் வேலைக்கு செல்வாள் உமா. “பதினைந்து நாட்களும் காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேலையிலும் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள்… தினமும் இரவு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் சலங்கை ஆட்டம் என அமோகமாகவே சென்றது”. “பண்ணையாரின் குடும்பத்தினருக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே சென்றது”. அதிலும் வேலம்மை குடும்பம், […]
Readmore