Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உறவு ராகமிதுவோ – 2 (2)

“அவக்கிட்ட பேச முடியுமா? ஒரு ஆதங்கம். சொன்னேன். சரி, மறக்காம கல்யாணத்துக்கு வந்திருங்க சின்னம்மா…” என்று பேசி வைத்துவிட்டார் குமரன். பேசி முடித்ததும் நிலாவிடமிருந்தும் அழைப்பு வந்துவிட்டது அவருக்கு. குமரனிடம் பேசியதாக ஆரம்பிக்கத்தான் செய்தார் சாவித்ரி. “என்ன, வழக்கம் போல ப்ளா, ப்ளா. ப்ளாவா? சியரப் சாவி. ஓகே, இந்த நந்தா எனக்கும் சேரி எடுத்திருக்காளாம். அதை ரூம்லயே வச்சிட்டா போல. சொல்ல சொன்னா. பார்த்துக்கோ சாவி. பை…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள் வெண்ணிலா. குமரனிடம் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 2 (1)

ராகம் – 2            காலிங் பெல் சத்தத்தில் கண் விழித்தவருக்கு இந்த நேரத்தில் யார் என்னும் யோசனை. அதனுடனே வந்து கதவை திறக்கவும் அவர்களை பார்த்ததும் திகைத்து போனார் சாவித்ரி. “குட்மார்னிங் சாவி…” என அவரின் கன்னம் தட்டிவிட்டு அந்த நள்ளிரவிலும் கூட உற்சாகத்துடன் வரும் பேத்தியை கண்டு தலையசைத்தவர், “என்ன நந்தா?…” என்றார் நிலாவுடன் பின்னோடு வந்த சுனந்தாவிடம். “அட போங்க பாட்டி, நீங்களே அவக்கிட்ட கேட்டுக்கோங்க…” என்று கோபமாகவும், அலுப்புடனும் சொல்லிவிட்டு உறக்கம் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 1 (3)

“அண்ணே, கௌரவ் அண்ணே வராங்க…” என்று உதவியாளர் கூற, “எங்க?…” என்றார் ஓட்டுனர். அவர்கள் பேருந்து நின்ற எதிர் திசையில் கௌரவ்வின் செரோகி வந்து நின்றது. அவர்கள் இருவரின் சம்பாஷணையில் கோபமாய் நின்ற இரு பெண்களும் யார் அது என்று எட்டி பார்த்தனர். அந்த காரில் இருந்து இறங்கியவன் பார்வை இருபக்க சாலையிலும் கவனமாய்  பதிய, பேரிகாட் வரை வந்தவன் அதில் ஒற்றை கையை ஊன்றி சட்டென எம்பி குதித்து பேரிகாடை தாண்டிவிட்டான். “காட்…” என சுனந்தா […]

Readmore

உறவு ராகமிதுவோ – 1 (2)

சட்டென்று கோபம் மூண்டாலும் எங்கே தான் எதுவும் வார்த்தையை விட்டு, அதற்கும் மூத்தமகன் பேசுவானோ என அடக்கி வாசிக்கவேண்டிய கட்டாயம். “அதுதான் இன்னும் ஒருவாரம் இருக்கே…” என்று பேச்சை மாற்ற, அவரை ஒருபார்வை பார்த்தவன், “விக்ரம், நீ ரைஸ்மில் போகவேண்டாம். என்னோட ட்ராவல்ஸ் டிப்போவுக்கு வா…” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டான். “ஏன்? ஏன்? அங்க அவனுக்கு என்ன தெரியும்?…” என்றார் வேகமாய். “தெரிஞ்சுப்பான்…” என்று சொல்லிவிட்டு விக்ரமை பார்க்க, “வர்றேண்ணா…” என விக்ரமும் உண்டுமுடித்துவிட்டான். பிள்ளைகள் இருவரும் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 1 (1)

ராகம் – 1        கதிரவனின் தாக்கம் கடும் கோபத்துடன் தான் தகித்திருந்தது அந்த காலை வேளையிலும். இத்தனைதூரம் அவ்வளவு காட்டம் என்பதனை போல ஆறு மணி என்றாலும் குளுமை குறைந்து, சூரியன் வெம்மையுடன் உதித்துவிட்டான். உடலை இறுக்கிப்பிடித்த கையில்லா பனியனோடு த்ரெட்மில்லில் கௌரவ் தனது பயிற்சியில் இருந்தான். ஆடை தழுவா புஜங்களில் வியர்வை ஆறாய் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. முன்நெற்றியில் அவனின் ஓட்டத்திற்கேற்ப சதிராடிக்கொண்டிருந்த சிகையின் நுனியில் நீர் திவலைகள் ஒற்றை புள்ளியாய் நிற்பதும், விழுவதுமாய் இருக்க […]

Readmore

தேயாத மஞ்சள் நிலா – 27 (4)

“இது இது…” என்றவள் மீண்டும் மீண்டும் குடித்து கண்மூடி, “இது கரும்பு ஜூஸ். ஆனா கரும்பே இல்லாம. மாமா, எப்படி?…” என்று ஆச்சர்யம் பொங்க கேட்டாள். “பிடிச்சிருக்கா?…” “ஹைய்யோ, ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா எப்படி?…” என்று மீண்டும் அவன் மிக்ஸியில் சேர்த்தவற்றை யோசித்து பார்த்தாள். நான்கைந்து புதினா இலைகள். கொஞ்சம் தட்டி எடுத்த வெல்லம். ஒரு துளி உப்புக்கல். சிறிய அரை எலுமிச்சை பழசாறு. முதலில் ஒரு அடி அடித்து, பின் ஐஸ் துண்டுகள் இரண்டு சேர்த்து […]

Readmore

தேயாத மஞ்சள் நிலா – 27 (3)

“ஊரு உலகத்துல இல்லாத ஒருத்திய தேடி புடிச்சு கொண்டாதுட்டு அவ ஆடற அரம்பத்த நான் எங்கன்னு போய் சொல்ல?…” என்று ராகம் போட்டு பாட ஆரம்பிக்க, “இப்ப என்னவாம்? பெரிய உலக அழகி தேடவேண்டியதுதான உம்மை மாதிரி பொண்ணை உம்பேரனுக்கு…” விருஷ்திகா வேண்டுமென்றே பேச, “அவ்வா அவ்வா அவ்வா…” என்று அழகு அடித்துக்கொண்டார். “எம்புட்டு பேச்சுடி பேசற?ஆமா இப்பைக்கும் நான் அழகிதான்டி. எம்மொவ அழகுக்கு இந்த சீமையில ஒருத்தியும் கெடையாது. எங்க காட்டிப்போடு…” என்று கேட்க, “நான் […]

Readmore

தேயாத மஞ்சள் நிலா – 27 (2)

“என்னமோ, நீ சொன்னா சரியாத்தேன் இருக்கும். பாப்பம். ஆனா இன்னொருவாட்டி யாரையும் கேக்காம, கொள்ளாமா எந்த பேச்சும் வேணா. இப்பிடி ஒரு அப்பனுக்கும், தம்பிக்கும் நடுவுல இம்புட்டு நல்ல புள்ளை….” என்றும் சுடர்மணி ஆதங்கம் பொங்க கூற, “இன்னும் அந்த விசாலு பயல வீட்டுல தான வச்சு பாக்குதாங்க…” என குறைபட்டார் ஞானசேகரன். “வேற என்ன செய்யனும்ன்னு நெனைக்குதீங்க?…” என்ற அழகர், “வாகனமும் ஸ்டேஷன்ல. அரவிந்தும் இங்க இல்லை. அப்போ அவனை யார் பார்க்க? அதான் நர்ஸ் […]

Readmore

தேயாத மஞ்சள் நிலா – 27 (1)

நிலா – 27            சொந்தங்கள் மத்தியில் அவமானப்பட்டு நிற்பது ஒருரகம் என்றால், ஏமாளியாய், அடிமுட்டாளாய் நிற்பது இன்னொரு ரகமாகிற்றே. கதிர்வேலன் வந்துகொண்டிருந்தார் மனதிற்குள்ளேயே. இத்தனை தூரம் தன் நிலை கீழிறங்கும் என்று துளியும் நினைத்ததில்லை அவர். இத்தனை நாட்கள் அழகரின் செயலால், மகள் செய்த காரியம் என்று அவர்களை அவர் தண்டிப்பதாக ஒதுங்கி இருந்தார். அதற்கு பலனாய் வார்த்தைகளையும் விட்டு அத்தனை அவமானம் செய்து பேசிவிட்டார் மருமகனையே. இப்போது எல்லாவற்றையம் ஒன்றுமில்லாமல் செய்ததோடு தன் முகத்தில் […]

Readmore

தேயாத மஞ்சள் நிலா – 26 (3)

“செத்த பொணம். அந்தாளை தொட்டு நீங்க கஷ்டப்படாதீங்க….” என்று கூறியவன், கதிர்வேலனை பார்வையால் துளைத்தான். அவனின் பார்வை உணர்ந்தும் அவருக்கு நிமிர்ந்து பார்க்கமுடியவில்லை. எத்தனை பேசிவிட்டோம் என்று தலைகுனிந்து நின்றவருக்கு தன் அண்ணனை கேள்வி கேட்கவேண்டும் என்று கூட தோன்றவில்லை. ஏமாளித்தனம் தன்னுடையது. தன்னை பயன்படுத்திக்கொண்ட அவரை சொல்லி நோகமுடியுமா? முட்டாள் முட்டாள் என்று தன்னை எத்தனை கூறினாலும் தகும் என்றே தோன்றியது. அதிலும் மனைவியை இழந்து இரு பிள்ளைகளை வைத்து தத்தளித்தவருக்கு, இந்த சமயத்தில் தான் […]

Readmore