அத்தியாயம் — 17 காலையில் எழும்போதே சூர்யா அருகிலில்லை. மணி பார்க்க.. ஆறுதான ஆகுது..? என நினைத்தவளுக்கு மீண்டும் தூக்கம் கண்ணை கட்டியது. இரவு சூர்யா தன் கையை பிடித்ததும் இதோடு விடுவானா..? இல்லை வேறு எதாவது.. என்ற பயத்தில் இருந்தவளுக்கு நள்ளிரவு வரை உறக்கம் வராமல் போகவே தற்போது மீண்டும் கண்மூடினாள். இன்று அதிகாலை ஐந்துமணிக்கெல்லாம் ஹாஸ்பிட்டலில் இருந்து அவசர அழைப்பு வரவும்.. ஐந்தரை மணிக்கெல்லாம் கிளம்பியிருந்தான் சூர்யா. திலகவதி எழுந்து குளித்து […]
இவள் கிச்சனுக்குள் செல்ல.. ‘முதல்ல போய் முகம் கை கால் கழுவிட்டு வா.. எங்கையாவது வெளில போய்ட்டு வந்தா முதல்ல இதைத்தான் செய்யனும்.. நேரா கிச்சனுக்கு போகக்கூடாது..” என்று சற்று உயர்த்திய குரலில் சொல்ல.. திலகவதி தனதறைக்குள் போக.. ‘நீ இரு சூர்யா..” என்று மனைவியின் பின்னோடு போனவனை தடுத்த கமலம்.. ‘என்ன பிரச்சனை சூர்யா..? உன் முகமே சரில்லையே..?” என்று கவலையோடு கேட்க.. தன் முகத்தை வைத்தே அம்மா கண்டுகொள்வார்கள்.. தனது மாமியார் அருகிலிருக்கவும்தான் […]
. அத்தியாயம் 16 இரவு எட்டு மணியாகியிருக்க.. பெரியவர்கள் சாப்பிடும் நேரம் நெருங்கவே.. இல்ல நிர்வாகி.. ‘டாக்டர் தம்பி.. இவங்க சாப்பிடும் நேரம் ஆய்ட்டு…” என்று கொஞ்சம் அவஸ்தையோடு சொல்ல.. ‘ஓ..” என்று டைம் பார்த்தவன்.. ‘குழந்தைங்களுக்கு பரிமாறியாச்சுங்களா ஆன்ட்டி..?” என்றான் அக்கறையோடு. ‘ம்ம்.. சாப்டுட்டிருக்காங்க..” என்று நிர்வாகி சொல்ல.. ‘சரிங்க ஆன்ட்டி.. நான் கிளம்பறேன்..” என்று எழவும்.. திலகாவும் அங்கிருந்த பெரியவர்களுக்கு வணக்கம் சொல்லி சூர்யா பின்னோடு வந்தாள். காரில் […]
அத்தியாயம் — 15 பிரசாத் திலகவதியின் முன்னாள் கணவன் என்பது மறந்து.. இருவரும் சேர்ந்து கொண்டாடிய பிறந்த நாள் கொண்டாட்டம்.. நெஞ்சில் பச்சைக் குத்தியதுபோல் பதிந்திருக்கும் நாட்கள் வலம் வந்தது. பிரசாத்தின் பத்தாவது பிறந்த நாளன்று இருபத்திஐந்து பைசா ஆரஞ்சு சாக்லட்டை இரண்டு ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு ஆசையோடு சூர்யா சென்றான் பிரசாத்தின் வீட்டிற்க்கு.. ‘இன்னைக்கு என் பிறந்த நாள்ன்னு உனக்கு நியாபகம் இருக்கா..?” என்று அதிசயமாக கேட்டவன்.. ‘ஏய் உனக்கேது டா இரண்டு […]
அத்தியாயம் — 14 அடுத்து வந்த நாட்களில் இருந்து.. திலகவதி காலையில் சீக்கிரம் எழுந்துவிடுவாள். கமலத்தை கவனிப்பதுதான் அவளின் தலையாய பணிபோல் அவர்களை கவனிப்பாள். பிறகு பத்து மணிக்கெல்லாம் டெய்லரிங் சொல்லிக்கொடுக்க ஒரு பெண் வந்துவிடவே அதில் கவனத்தை செலுத்துவாள். இப்பொழுதெல்லாம் சூர்யாவிற்க்கு தாம் என்ன செய்தால் கோபம் வரும் எனப்புரிந்திருந்தாள். எனவே அவன் கோபப்படும்படி எதுவும் செய்வதில்லை. சூர்யாவைப் பொறுத்தவரை தினமும் திலகவதி அவனிடம் பேசியே ஆகவேண்டும்.. எழுந்திரு சூர்;யா.. காபிகுடி சூர்யா.. என […]
கார்டனில் கமலம் டீ குடித்துக்கொண்டிருக்க.. அன்னை அருகே போய் கீழே அமர்ந்தான். எப்பொழுதாவது டியூட்டியில் இருந்து சீக்கிரம் வந்துவிட்டால் தன் அன்னையோடு இப்படி அமர்ந்து கதையளப்பது சூர்யாவிற்க்கு மிகவும் பிடித்த ஒன்று.. இரண்டு வருடங்களுக்கு பின்னர்.. இப்படி ரிலாக்சாக அமரும் மகனை வாஞ்சையோடு பார்த்தார் கமலம். ‘என்னம்மா இப்படி பார்க்கிறிங்க..?” என்றான் சிரிப்போடு. ‘ம்ம்.. என் மகனுக்கு அம்மா நியாபகம் வந்திடுச்சி அதான்..” என்றார் சூர்யாவின் தலைகோதி தானும் சிரித்தவாறு. சூர்யா தன் அம்மாவை செல்லமாய் முறைக்க.. […]
அத்தியாயம் .. 13 ஒரு வாரம் வீட்டில் இருப்பேன் என்றவன்.. இரண்டு நாள்தான் இருந்தான்.. ஆனால் திலகவதிக்கு அவனோடு இரண்டுமாதம் பசைபோட்டு ஒட்டிக்கொண்டு திரிந்ததை போன்ற உணர்வு.. எழுந்திரி சூர்யா என்றால்தான் எழுவான்.. குளிச்சிட்டு வாங்க சூர்யா.. சாப்பிடுங்க சூர்யா.. என திலகவதி சொன்னால் மட்டுமே செய்வான்.. உடை கூட அவள் எடுத்து கொடுப்பதைதான் அணிந்தான். இல்லை எத்தனை நேரமானாலும் டவலோடுதான் நிற்ப்பது.. அதுவும் திலகவதி உடை எடுத்துக்கொடுக்க சிறு தாமதமானாலும் கொஞ்சம் கொஞ்சமாக […]
அத்தியாயம் — 12 அடுத்து இரண்டு வாரங்களுக்கு பிறகு.. ஆதவன் கிளம்பிக்கொண்டிருந்தான். ‘அக்கா.. இப்ப ஊருக்கு போனா எப்ப வருவிங்க..?” என்று திலகவதி தவித்தாள். காரணம் திருமணம் முடிந்ததிலிருந்து.. இப்பொழுது இரண்டு நாளாகத்தான் கீர்த்தியிடம் மட்டும் கொஞ்சம் பேச ஆரம்பித்தாள். பகலில் சாப்பிட மட்டுமே வெளியே வருவது.. அப்பொழுதும் குழந்தைகளை மட்டுமே பார்த்திருப்பாள். இனி இவர்களும் சென்றுவிட்டால் தாம் எப்படி இங்கே இருப்பது என்ற பெரும் கவலை மனதில் எழுந்தது. ‘குறைஞ்சது ஆறுமாசமாவது […]
அலையில் பூத்த மலர்.. அத்தியாயம்.. 11 ‘அத்தை மாமால்லாம் எங்கண்ணி இன்னும் காணோம்..?” என சூர்யா கேட்க.. ‘அவங்க வர ஐடியால இல்லன்னு நினைக்கிறேன் சூர்யா..” என்றவள் தன் கொழுந்தனை தனியே அழைத்து வந்து.. ‘என் சித்தப்பா பொண்ணை உனக்கு பேசலாம்னு இருந்தாங்கள்ல..? இப்போ நீ திடீர்ன்னு திலகாவை கல்யாணம் செய்ததுல அப்பாக்கு கொஞ்சம் மன வருத்தம்.. அப்பாவை மீறி அம்மா எதுவும் செய்யமாட்டாங்க.. காலைல கூட உங்கப்பா கூட்டிட்டு வரமாதிரி தெரியல கீர்த்தின்னு அம்மா […]
இப்பொழுது இரண்டு வருடம் முன்பாக தன் மகன்.. மகள் இருவரும் சொத்துப் பிரச்சனையில் பேசிக்கொள்ளாதிருப்பதை நினைத்து பெரும் வேதனையில் இருந்தார். இதற்கும் கோடிக்கணக்கான சொத்து சேர்த்து வைத்தும் அங்கே சொத்து பிரச்சனை பெரும் பூதாகரமாக மாறவும்.. அதில் மனம் நொந்தவர்.. இந்த இடம் தனதென்று தெரிய வந்தாலும் இங்கிருக்கும் மொத்த பேரையும் காலிசெய்யக் கூட தயங்கமாட்டார்கள் தம்மக்கள் என நினைத்து.. எவ்வளவோ பணம் சேர்த்தாகிவிட்டது.. இதாவது இல்லத்திற்க்கென்று கொடுத்திடலாமே என்று தான செட்டில்மென்ட் செய்துவைத்தார். இதற்கும் சூர்யா […]