Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Engiruntho Vanthaal

எங்கிருந்தோ வந்தாள் 26.2

    அதுவரை எழுதி கொண்டிருந்த மாதுரியின் கை, அந்த நொடி தன் ஓட்டத்தை நிறுத்தி இருந்தது. நிமிர்ந்து அறையைப் பார்த்தாள். சுற்றி இருந்த அனைவரின் கண்களும் கலங்கி இருந்தது. ராஜேஸ்வரியோ, மகளையே பார்த்தப்படி அழுது கொண்டிருந்தார். வெகு நேரம் தாயையே பார்த்திருந்தவள், சித்தார்த்தையும், அவரையும் கொஞ்சம் வெளியே அழைத்துச் செல்லும்படி சுதர்ஷனிடம் சைகை செய்தாள். அடுத்து வரவிருக்கும் விஷயத்தை அவர் இதயம் தாங்காது என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். சுதர்ஷனோ திரும்பி சித்தார்த்தை பார்த்தான். அதே […]


எங்கிருந்தோ வந்தாள் 26.1

    அத்தியாயம் 26   கலக்டர் அலுவகம். தன் அறையில் அமர்ந்திருந்தான் நந்தா. அப்பொழுது அமைச்சரிடம் இருந்து ஃபோன் வந்தது. வேலை சம்பந்தமாகப் பேசியவர் அது சம்பந்தமான பேப்பர்களுடன் உடனே தன்னை வந்து சந்திக்கும்படி கூற, அது கான்ஃபிடென்ஷியல் ஃபைல் என்பதால், அலுவகத்தில் வைக்காலம், தன் வீட்டில் உள்ள அலுவக அறையில் வைத்திருந்தான் நந்தா. “ஹால்ஃப் அன் ஹவர்ல வரேன் சர்.” சொல்லிவிட்டு வைத்தவன், பியுனை அழைத்துத் தகவல் சொலிவிட்டு, “என்னைப் பார்க்க யாராவது வந்தா, […]


எங்கிருந்தோ வந்தாள் 25.2

    கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க, காவல்துறையைக் கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார் முதல்வர். “என்ன ******** ப்ரொடெக்க்ஷன் கொடுக்கிறாணுங்க இந்தப் போலீஸ்காரனுங்க! தண்டத்துக்கு இருக்கானுங்க. ஒரு நிமிஷம் குலை நடுங்கி போச்சு……” காரை அமைதியாக ஓட்டிக் கொண்டிருந்தான் டிரைவர். முதல்வர் அமைதியாகும் வரை காத்திருந்தான். சிறிது தூரம் சென்றதும் முதல்வர் அமைதியாகிட, அந்த விஷயத்தைச் சொன்னான் டிரைவர். “ஐயா! உங்க ஃபோனை விட்டுட்டு வந்துடீங்கன்னு கலக்டர் சர் உங்க ஃபோனை கொண்டு வந்து கொடுத்தாருங்க […]


எங்கிருந்தோ வந்தாள் 25.1

  அத்தியாயம் 25   நரசிம்மனின் வீடு. எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் நரசிம்மனும் நந்தாவும். மிகுந்த கோபத்தில் இருந்தார் நரசிம்மன். “என்னையே மிரட்டுறான் அந்தப் பரதேசி பய!” கோபத்தில் கர்ஜித்தார். “என்ன ஆச்சு மாமா?!” “எல்லாம் அந்தச் சி.எம் நாயால தான்.” பதில் சொன்னவர் அன்று காலை நடந்ததைக் கூறினார்.   தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறை. முதலமைச்சர் அழைத்ததின் பெயரில் அவரின் எதிரில் அமர்ந்திருந்தார் நரசிம்மன். “என்னையா? எனக்குத் தெரியாமே என்னனமோ காரியம் செய்றியாமே? […]


எங்கிருந்தோ வந்தாள் 24

  அத்தியாயம் 24   ஜி.எச் மருத்துவமனை. காரை விட்டு இறங்கிய சுதர்ஷன், உடன் அழைத்து வந்திருந்த கான்ஸ்டபிள் இருவருடன், வேகமாகப் படிகளில் ஏறி மாதுரி இருந்த தளத்திற்கு வந்தான். வாசலிலியே காத்திருந்தான் சித்தார்த். “சாரி என்ன பண்றதுன்னு தெரியாம உங்களுக்கு ஃபோன் போட்டுட்டேன்.” குற்ற உனர்வுடன் கூறினான். “பரவால சித்தார்த்த. நீங்க செஞ்சது தான் சரி. இப்போ உங்க சிஸ்டர் என்ன பண்றாங்க?” “சாதனா வருகைக்குத் தான் காத்திட்டு இருக்கா.” “சரி. நான் போய்ச் சீஃப் […]


எங்கிருந்தோ வந்தாள் 23.2

  இதயத்துடிப்பை ஒரு நொடி நின்றுபோக வைக்கும் அச்சத்தம் கேட்ட அடுத்த நொடி, “சொல்லிடறேன்! எல்லா உண்மையையும் சொல்லிடறேன். நந்தகுமார் சர் தான் இவங்களைக் கொல்ல சொல்லி எங்களை அனுப்பினார்.” நரம்பு புடைக்க, உடல் நடுங்க, கண்களை மூடியபடி கத்தினான் பக்கத்தில் இருந்தவன். சில நொடிகள் பிறகு கண்களைத் திறந்தான். சுதர்ஷன் அவனையே பார்க்கவும், திரும்பி பக்கத்தில் இருந்தவனைப் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் ஆகி இருக்கவில்லை. ஆனால் பயத்தில் மயங்கி இருந்தான். “மிதுன், உங்க கேமராவை எடுத்துட்டு […]


எங்கிருந்தோ வந்தாள் 23.1

  அத்தியாயம் 23   பைக்கை சுதர்ஷன் ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்தான் மிதுன். சஞ்சனாவைத் தனியே விட்டு வந்திருப்பதால், ஏனோ தெரியவில்லை ஒருவித சஞ்சலம் இருவருக்குள்ளும் இருந்தது. சாலை வேறு வெறிச்சோடி இருக்க, சுதர்ஷனின் கையில் பைக் பறந்தது. வழக்கமாக ஆகும் நேரத்தை விடப் பாதி நேரத்திலேயே வீட்டை நெருங்கி இருந்தனர். இதோ இன்னும் சில நொடிகளில் அபார்ட்மெண்ட்டுக்குள் நுழையவிருக்கும் நேரம், மிதுனின் மொபைல் ஃபோன் அடித்தது. வேகமாக எடுத்துப் பார்த்தான். சஞ்சனா அழைத்திருந்தாள். உடனே ஆன் […]


எங்கிருந்தோ வந்தாள் 22.2

  கிழிந்த இடத்தில், பேப்பர் இரண்டு அடுக்காகத் தெரிந்தது. அதன் நுனியை பிடித்து உருட்டிப் பார்த்தாள், நிச்சயம் இரண்டு காகிதங்கள் ஒன்றாகத் தான் இருக்கும். முடிவுக்கு வந்தவள், நுனியை பிடித்து மெதுவாகப் பிரித்தாள். பள்ளி நோட்களில் ஓட்டும் லேபில் போல, காகிதம் இரண்டாகப் பிரிந்தது. சஞ்சனா செய்ததை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் சுதர்ஷனும், மிதுனும். முழுவதுமாகப் பிரித்த பின்பு, இப்பொழுது எழுத்துக்கள் தெளிவாக இருந்தது. அதன்பின்பே புரிந்தது, லேபில் போல இரண்டு அடுக்குக் கொண்ட காகிதத்தின் உள் […]


எங்கிருந்தோ வந்தாள் 22.1

  அத்தியாயம் 22 ஆட்டோவை அனுப்பிவிட்டு கௌஷிக் கார் சென்ற தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான் சுதர்ஷன். “நல்ல நேரதில் கழுத்தறுத்துட்டான்.” எரிச்சலோடு சொல்லியபடி, நடந்து வந்தவன், கௌஷிக்கின் கார் எந்த வீட்டிலாவது நிற்கிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தான். சிறிது தூரம் நடந்து இருப்பான். யாரோ திபுதிபுவென ஓடி வரும் காலடி சத்தம் கேட்டது. கூர்ந்து கவனித்தான். தூரத்தில் இரண்டு பேர் ஓடி வருவது, நிழல் உருவமாகத் தெரிந்தது. அவர்களைத் தாண்டி வெகு தூரத்தில், ஏதோ காரின் […]


எங்கிருந்தோ வந்தாள் 21.2

  அங்கே நந்தாவின் பங்களா வாசலில், மறைந்து நின்றிருந்த மிதுன், தன்னைக் கடந்து சென்ற இரண்டாவது காரை புகைப்படம் எடுத்து, அதை ஜூம் செய்து பார்க்க, அதிர்ந்து போனான். அந்தக் காரில் ஓட்டுனருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார் தற்போதைய தமிழக முதலமைச்சர், நரசிம்மன். “என்ன டா இது? சி.எம் போய் இந்த நேரத்தில?!!” புகைப்படத்தைப் பார்த்தவாறு கேட்டாள் சஞ்சனா. ஆனால் மிதுனிடம் இருந்து பதில் இல்லை. அவனால் இந்த நொடி வரை தான் பார்த்த புகைப்படத்தையும், அதில் இருந்த […]