21 அன்று சூர்யாவிடம் சண்டையிட்டு நிறைய யோசித்த விக்னேஷ், நேரே டாக்டரிடம் அழைத்து வந்திருந்தான். மனைவியை வெளியே காத்திருக்கச் சொல்லி தன்முன் அமர்ந்திருந்தவனை, சில நிமிடங்கள் எதுவும் கேட்காமல் பார்த்திருந்த சக்தி, அவன் வாய் திறப்பதுபோல் தெரியவில்லை என்றதும், “என்ன விக்னேஷ் ஏதோ பேசணும்னு நினைக்கிறீங்க. பேச வந்த பின்னே என்ன யோசனை?” “டாக்டர் என் ஒய்ஃப்கிட்ட இப்பவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதுக்குன்னு ட்ரீட்மெண்ட் வர்றது ஒரு மாதிரியிருக்கு.” “உங்க நிலை […]
“மச்சான் எப்ப வர்றீங்க? கிளம்பிட்டீங்களா இல்லையா?” “கிஃப்ட் வாங்கிட்டிருக்கேன்மா. அரைமணி நேரத்துல வந்திருவேன்.” “நாங்க கிளம்பி ரெடியாகியிருக்கோம் மச்சான். இன்னும் நீங்க வந்து ரெடியாகி… ஹ்ம்… போனை கட் செய்து கன்னத்தில் கைவைத்தபடி, “சொன்ன நேரத்துக்கு வர்றதில்லை எவ்வளவு முக்கியமான விசேஷம். அசால்ட்தனம் ஜாஸ்தியாகிருச்சிடி உன் அப்பாவுக்கு” என்று மகளிடம் புகாரளிக்க… “அம்மா.. அப்பா” என்றாள் சபரியின் வரவைக் கண்டு. “அதான் வர்றதுக்கு நேரமாகும்னு சொல்லிட்டாங்களே.” “ஆனாலும் வந்துட்டாங்களே” என்று குதித்ததில் சட்டென்று நிமிர்ந்தவள் வாசல் பார்க்க […]
20 சூர்யோதயாவின் சடங்கின்போது இசக்கியுடன் சபரி ட்ராவல் செய்ய… வேண்டாமென்று மறுத்தபோதும் சரளா அவனின் செயினை எடுத்துக் கழுத்தில் போட்டுவிட்டு, “புதுமாப்பிள்ளை தோரணை வேண்டாமா” என்றிருந்தார். பஸ்ஸில் வரும்பொழுது வியர்வையில் கழத்துப் பகுதி எரிய, “அத்தை இந்தச் செயினை நீங்க வச்சிக்கோங்க. கழுத்தெல்லாம் ஒரே எரிச்சல்” என்று கொடுக்க… “கையில எப்படிடா வச்சிட்டிருக்கிறது? பர்ஸ்ல எதாவது எடுக்குறேன்னு தவறவிட்டுத் தொலைச்சிட்டேன்னா?” என்று “பரவாயில்லை. போட்டுக்கோங்க.” “ஏற்கனவே தாலிச்செயினோட இன்னொரு செயினும் நெக்லசும் இருக்கு. இதை நீ […]
சபரிக்குமே பூவரசி பற்றி இசக்கி சொல்லி நிறையவே தெரியும். செல்லமாக வளர்ந்த பெண்ணின் கல்யாண வாழ்வு கொடுத்த வலிகள் வேதனைகள், அதைத் தாண்டி பிள்ளைகளுக்கென்றே வாழ்ந்த பெண்மணி. “அத்தையை யாராலும் குறை சொல்ல முடியாதுமா. அவங்களை சிங்கப்பெண் என்று சொன்னால் சரியாயிருக்கும். அவ்வளவு கொடுமையும் பொறுத்துத் தனியா பிள்ளைங்களை வளர்க்கவே எவ்வளவு தைரியமும் வைராக்கியமும் இருக்கணும். கடைசி காலத்துல உனக்கு ஒரு குடும்பம் இருக்கணும்னு நினைச்சாங்க. அதை உயிரைக் கொடுத்து நடத்தியும் வச்சிட்டாங்க. தெய்வமா இருந்து நம்மை […]
19 திருமணம் முடிந்து பூவரசியை நல்லபடியாக அனுப்பி வைத்து வீட்டில் ஏற்பட்ட சிற்சில சலசலப்புகளையும் அடக்கி, இராமேஸ்வரம் செல்லாது நேராக திருவனந்தபுரம் வந்தார்கள் மணமக்கள். முதல்முறை போலில்லாது தங்கை வாழப்போகும் வீட்டையும், அவளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ராமன் தன் மனைவியுடன் வந்திருந்தான். பரத்தின் படிப்பு திருவனந்தபுரம் காலேஜில் என்பதால், அவனைத் தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்வதாக சூர்யா சொல்ல… அதை எதிர்த்தவர்களிடம் ‘என் அம்மாவோட கடைசி ஆசை’ என்று முடித்துவிட்டாள். சபரியின் தங்கை […]
அவள் கண்களில் தோன்றிய நொடி நேர பளிச்சிடலைக் கண்டு புன்னகைத்தவன், “அதைவிட மனசுல எதையும் போட்டுக் குழப்பாம வாழ்க்கையை யதார்த்தமா எடுத்துக்கோ. ஃப்ரீயா இரு. உன்னைக் கண்ட்ரோல் பண்ண ஆள் கிடையாதுன்னு சொல்லமாட்டேன். நீ தப்பு செய்தா நல்ல கணவனா கண்டிப்பா கண்டிப்பேன். வேற எதாவது கேட்க மறந்திருந்தா கேட்டுக்கலாம்” என்று அமைதியாக நின்றான். “வேற எதுவுமில்லையா மச்சான்?” “நீ என் மனைவியா கிடைக்குறியே வெள்ளச்சி. அதைவிட எனக்கு வேறென்ன வேணும்?” “அப்ப நாம கல்யாணம் பண்ணிக்க […]
18 கடைக்குள் நுழைகையில் அன்று வந்த அதே பெண் வேகமாக வந்து வரவேற்று, இன்னொரு பெண்ணிடம் கூல்ட்ரிங்ஸ் கொண்டு வரச்சொன்னாள். ‘கொஞ்சம் அதிகக் கவனிப்பாயிருக்கே’ என தோன்றினாலும் சிறு புன்னகையுடன், “நோ தேங்க்ஸ். சும்மா நியூ கலக்ஷன்ஸ் பார்க்க வந்தேன்” என்றாள். “தாராளமா மேம். வாங்க கூட்டிட்டுப் போறேன்.” “அச்சோ பரவாயில்லங்க நானே பார்த்துக்கறேன்” என்று நகர்ந்தாள். பின்னாலேயே சென்று, “மேம் நீங்க எப்ப வந்தாலும் உங்க கூடவே இருக்கணும்னு […]
“இதுவரை பேசாமலா அத்தை இருந்தீங்க? விடுங்க அத்தை எதாவது யோசிக்கலாம்.” “இல்ல சபரி. கடைசியா ஒருமுறை பேசிடுறேன். ஒத்துக்க வைக்க முடியலைன்னா இனிமேல் பேசவேமாட்டேன்.” அவரின் உள் எண்ணம் புரியாமல், “சாயங்காலம் எழுந்திருவா. நைட் நிதானமா பேசிப்பாருங்க. நான் போயி ரவியை வரச்சொல்றேன்” என்றவன் செல்லும் முன், “உதயா சடங்கப்ப அவளைத் தூக்கிருவோமா கேட்டியே இசக்கி. அப்பவே அதைச் செய்திருக்கலாம்” என்றான். “ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டடா மருமகனே. அன்னைக்கு மட்டும் ம்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா […]
17 “ஹாய் சபரி! ஹவ் ஆர் யூ?” “பைன் அர்ச்சனா. நீங்க எப்படி?” “டாக்டர் சாரை தற்செயலா பார்த்தேன். அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். உங்க ஒய்ஃப் சூப்பர் போங்க.” “என் அக்கா எப்பவும் சூப்பர்தான்ங்க” என்று பரத் இடையிட… “அவளைப் பார்த்தீங்களா?” “பார்த்தீங்களாவா? மயங்கிட்டேன்னா பாருங்க சபரி. தன் மகளுக்கான பாதுகாப்பை இப்பவே மைண்ட்ல ஏத்துறாங்க” என்று பார்த்ததைச் சொல்ல… அவளின் நிலை உணர்ந்து மனம் கசந்தது விவரம் தெரிந்தவர்களுக்கு. “அம்மா […]
அறை வாயிலில் நின்றிருந்த சூர்யா பதறிப்போய் “அண்ணா உள்ள வரவா?” எனக்கேட்க… வேகமாக அவர்களை பக்கத்து அறைக்கு அழைத்து வந்தவன், “பீவர் அதிகமாயிருக்குடா. பாப்பாவை இங்கயே படுக்க வை. நான் டாக்டரை வரவச்சிப் பார்க்கிறேன்” என்று ஏசியை ஆன் செய்து போனை எடுத்து டாக்டரை அழைத்தபடி சபரியிடம் விரைந்தான். தூங்கும் குழந்தையின் அருகிலிருந்து தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது. அவன் முகம் காண ‘அவனிடம் போ’ என்று மனம் அடித்துக்கொண்டது. குழந்தை ஆழ்ந்த உறக்கத்திற்குச் […]