Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kollai Nila

கொள்ளை நிலா – 23 (2)

“கேட்டதுக்கு இதுதான் பதில். போதுமா? இல்லை இன்னும் சொல்லனுமா?…” என அவள் சிரிக்க, “போதும், போதும். எடுத்து வச்சிட்டு தூங்கு. காலையில காலேஜ் போகனும்…” என்றவன் எழுந்து சென்று மொபைலில் அலாரம் வைத்துவிட்டு வர, “நீங்க தான் அலார்ம் அடிக்காமலே எழுந்துக்கற ஆளாச்சே. இப்ப என்ன புதுசா?…” என்று கேட்டபடி வாட்ரோபினுள் கட்டிலில் இருந்ததை எல்லாம் இடம் மாற்ற, “வைக்கனும்னு தோணுச்சு. ஒருவேளை அசந்து தூங்கிட்டா?…” “இன்னைக்கு மாதிரியா?…” என பாலா விஷமத்துடன் பேசி சிரிக்க, “தொலைச்சிடுவேன். […]


கொள்ளை நிலா – 23 (1)

நிலா – 23 அறைக்குள் தாங்கள் இருவரும் வந்து சில நிமிடங்கள் ஆகிவிட்டதை உணர்ந்த சூர்யா, “ஓகே, பாலா. முகத்தை இப்படி வச்சுக்காத. எதுவா இருந்தாலும் சேர்ந்தே சமாளிப்போம். ஓகே…” என்று தனது இரு கைகளை கொண்டு அவளின் முகம் தாங்கி கேட்க, “ஹ்ம்ம்…” என்றாள் அரைமனதாக. “நல்லாத்தான் சொல்லேன். மூஞ்சிய பாரு. உம்முன்னு. அப்படியே கடிச்சு வச்சிடுவேன்…” என மூக்கை பிடித்து நிமிண்டியவன் நெற்றியில் முத்தமிட்டு, “போ, வெளில தேடுவாங்க…” என்று கன்னம் தட்டி அனுப்ப […]


கொள்ளை நிலா – 22 (2)

பேசி முடித்தவான் லேப்டாப்புடன் ஹாலில் மெத்தையை எடுத்துபோட்டு அமர்ந்துவிட அங்கேயே பாலாவும் படுத்து தூங்கிவிட்டாள். மதிய உணவை வெற்றி கொடுத்தனுப்பியிருக்க சாதம் மட்டுமே வைத்திருந்தாள் பாலா. அதை சாப்பிட்டுவிட்டு இன்னும் இருந்ததை எல்லாம் வேறு சிறிய பாத்திரத்தில் மாற்றிவிட்டு அனைத்தையும் கழுவிவிட்டு வந்தவளுக்கு அதன் பின் பொழுது போகாமல் இருந்தாள். சூர்யா இன்னொரு அறையில் ஒரு மேஜை முழுவதுமாக இருந்த வரைபடம் போலிருந்து பேப்பரில் எதையோ எழுதிக்கொண்டு இருந்தான். பாலா வந்து எட்டி பார்ப்பதும், பின் நடப்பதுமாக […]


கொள்ளை நிலா – 22 (1)

நிலா – 22 வெகுநேரமாக மொபைல் சிணுங்கிக்கொண்டே இருக்க கண்ணை திறக்கமுடியாமல் சோம்பல் முறித்தபடி மெதுவாய் திரும்பி கட்டிலின் அருகே இருந்த டேபிளின் மீது வைத்திருந்த தனது மொபைலை எடுத்து பார்த்தான். வெற்றி தான் அழைத்துக்கொண்டு இருந்தது. மீண்டும் கண்ணை கசக்கிவிட்டு நன்றாக பார்த்தவன் அட்டன் செய்யும் முன் அழைப்பு நின்றுவிட கலையாத உறக்கத்துடன் அவனுக்கு அழைப்பதா என்ற யோசனையுடன் இருந்தான் சூர்யா. வெற்றியே மீண்டும் கூப்பிட்டுவிட்டான். “ஹ்ம்ம், என்னடா?…” என்று கண்களை மூடியபடி மெதுவாய் கேட்க, […]


கொள்ளை நிலா – 21 (3)

“அது, நான் அழுகையை ரொம்ப கன்ட்ரோல் பண்ணினா ஒரு மாதிரி ஆகும். தலை பாரமாகிடும். அப்போலாம் இப்படித்தான் செய்யும் எனக்கு. தண்ணி சூடா குடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்…” என்றவளை கூர்ந்து பார்த்தவன், “உன்னோட அழுகையை எதுக்காக கட்டி வைக்கிற பாலா? நான்…” என்றவனை பேசவிடாமல் ஒருவிரலை நீட்டி நிறுத்தியவள், “எனக்கு அழ வேண்டாம். எதையும் நினைக்க வேண்டாம். கல்யாணம் ஆகிடுச்சு. வாழறதை பார்ப்போம். வேற எதுவும் தெரியவேண்டாம். தெரிஞ்சதே போதும். அதையே தாங்கிக்கற சக்தி இல்லை. […]


கொள்ளை நிலா – 21 (2)

“அதனால தான் அங்கிள் இத்தனை ரிஸ்க் எடுத்து இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். அக்காவுக்கு இன்னும் அந்த பையர் ஆக்ஸிடென்ட் இன்சிடன்ட்ல பாலாவும் இருந்தான்னு தெரியாது. வீட்டுக்கு தெரியாம நான் எடுத்த முதல் முடிவு…” என்றவன் குரல் தழுதழுக்க, “அதுவும் சூர்யாவுக்காக. அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும் அங்கிள். முடிஞ்சா பாலாவுக்கு இப்போ எப்படி இருக்குதுன்னு பார்த்து சொல்லுங்க. எனக்கு இன்னும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்…” என சொல்ல, “இப்ப எதுக்கு இத்தனை பதட்டம் வெற்றி?…” என […]


கொள்ளை நிலா – 21 (1)

நிலா – 21 “பாலா நீ…” என்று அவன் அதிர்வுடன் கேட்டதும் அர்ச்சனா தான் பதில் சொல்ல ஆரம்பித்தார். “நீ வரதுக்கு கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான் வந்தா சூர்யா. உன்னையும் பார்த்ததும் நீ சொல்லி வந்தான்னு நினைச்சேன்…” “நான் வரதை பத்தி யார்ட்டையுமே சொல்லலையே…” என்றவன், “வா…” என கை நீட்டி அழைக்க அவள் அசையவே இல்லை. கேட்ட விஷயங்கள் ஒவ்வொன்றும் தலையில் இடியாக விழுந்திருக்க அதை இன்னும் முழுமையாக நம்பமுடியாமல் விக்கித்து நின்றிருந்தாள். “வா […]


கொள்ளை நிலா – 20 (3)

“பாலாவுக்கு என்ன?…” என்றார் சற்று மிதப்பாய். “பாலாவுக்கு என்னவா? பாலா யார்?…” என்றான் நேராக. “பாலா பாலாதான்…” “இந்த வீட்டுக்கு பாலா யார்ப்பா?..” “இதென்ன கேள்வி? பாலா உன்னோட வொய்ப்…” “அப்போ பாலா இன்னும் இந்த வீட்டு மருமகளா அவ உங்களுக்கு இப்போ வரைக்கும் தெரியலை. பாலான்றீங்க. என் பொண்டாட்டின்றீங்க. உங்க மகனோட உயிருக்கு கவசமா தான் அவளை நினைக்கறீங்க. அவ்வளவு தான். இல்லை…” “எனக்கு என் பையன் உயிர் முக்கியமா பட்டுச்சு. அதை தாண்டி தான் […]


கொள்ளை நிலா – 20 (2)

“வெற்றிண்ணா…” என அவனை பார்த்ததுமே சத்தமிட்டுக்கொண்டே வர அவளின் பின்னே அர்ச்சனா, உமா வந்திருந்தனர். “வாம்மா அஸ்வினி…” என அவன் முழு பெயரை சொல்லி அழைக்கவும் அஸ்வினியின் முகம் சுருங்கிவிட்ட, “அஸ்வி சொல்லுங்கண்ணா. நீங்க கூப்பிடறதே இல்லை அப்படி…” என்று அவள் பேசிக்கொண்டிருக்க, “வெற்றி பாலா எங்க?…” என வந்தார் அர்ச்சனா. இவர்களை பார்த்துவிட்டு பாலாவும் வந்துவிட அதன்பின் அவளை கையை, தலையை, முதுகை என தடவி தடவி பார்த்து கண் கலங்கினார் அர்ச்சனா. “என்ன ஆன்ட்டி […]


கொள்ளை நிலா – 20 (1)

நிலா – 20 பாலாவை கேட்டு போன் மேல் போன் வெற்றிக்கும், சூர்யாவுக்கும் வந்தவண்ணமாக இருந்தது சூர்யாவின் வீட்டில் இருந்து. மோகனாவும், சந்திரனும் அவர்கள் ஊருக்கு சென்றுவிட்டதனால் இவை எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஏற்கனவே வெற்றியிடம் அன்று உமாவுடன் மாலுக்கு செல்லவிருப்பதாக பாலா சொல்லியிருக்க அவனுக்கு தெரிந்திருந்தது. பாலாவை கை தாங்கலாக கூட்டிக்கொண்டு சாலைக்கு வந்த சூர்யா தனது காரை நோக்கி சென்றான். சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்க நின்ற வாகனங்களை எல்லாம் அப்புறப்படுத்திக்கொண்டு இருந்தனர் காவல்துறையினர். காரை […]