அத்தியாயம் -15 ‘ஆத்தங்கர மரமே அரச மர இலையே’ என்ற பாடல் எங்கோ ரேடியோவில் ஒலிக்க லதாவும் கோபியிடம் அப்படியே காத்தார நடந்து சென்றனர். “என்னங்க இந்த ஊர் எப்படி இருக்கு” “ஊர் இல்லை லதா,இது சொர்க்கம்” என்றான் கோபி. “அப்படியா அப்படி என்ன அதிசயம் கண்டிங்க “ “நிம்மதி,அமைதி ……” என்று ஈஈஈ என்று பல்லை காண்பித்தான். “அடேங்கப்பா அவ்ளோ பிரியமா இருக்கா “ “ஆமா லதா..எவ்ளோ ஹேப்பியா இருக்கேன் தெரியுமா “என்றான் கோபி. “அது […]
Readmoreஅத்தியாயம் -14 கனகாவும் கார்த்தியும் குடும்பத்தோடு வந்து சேரும் நாள் அது. வாசலில் ஆரத்தி எடுக்க காத்திருந்தாள் மீனாட்சி. ஆட்டோவில் இருவரும் வந்து இறங்கினர். “ஊர் கண்ணு உறவு கண்ணு எல்லா கண்ணும் போகட்டும்”. என்று சுற்றி ஆரத்தி எடுத்தாள் மீனாட்சி. கல்யாணம் ஆகி இதான் முதல் நாள் மாமியார் வீட்டு படி ஏறுவது. “உங்களுக்கு இந்த வீடு ஒன்னும் புதுசு இல்லையே ஏற்கனவே வந்துருக்கீங்களே கேஷுவலா இருங்க” என்றாள் லதா. “ம்ம் ஆனாலும் ஒரு மாதிரி […]
Readmoreஅத்தியாயம் -13 முதல் நாள் வேலையை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்த லதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. “என்ன தைரியம் இருந்தா உனக்கு. வீட்டுக்கு இவளை நீ கூட்டிட்டு வந்துருப்ப. திடுதிடுப்புனு இப்படி கூட்டிட்டு வந்தா ஊர் உலகம் என்னடா நினைக்கும் ” என்று கார்த்திக்கை வசைப்பாடிக் கொண்டிருந்தாள் தன் மகன் கார்த்திக்கை. “ஐயோ அத்தை , தோளுக்கு மேல் வளர்ந்த புள்ளைய இப்ப எதுக்கு இப்படி திட்டிட்டு இருக்கீங்க ” என்று பதறியபடி […]
Readmoreஅத்தியாயம் -12 வீட்டுக்கு சென்ற பின்பும் வருண் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தாள் லதா. . “ஆமால கரெக்ட்டு தான் நாம் ஏன் வேலைக்கு போக கூடாது வருண் சொன்ன மாதிரி ” என்று தோன்றியது லதாவுக்கு. உடனே வருண் சொன்ன அலுவலகத்திற்கு வந்தாள். உள்ளே நுழையும் போதே ரிசப்ஷனிஸ்ட் “மேடம் உங்களுக்கு என்ன வேணும் யாரை பாக்கனும் ” என்க அதற்கு லதாவோ தயங்கியபடி “நான் மிஸ்டர் வருண் பார்க்கனும்” என்று […]
Readmoreஅத்தியாயம் -11 நாட்கள் மெல்ல நகர்ந்து போனது. தற்போது கதாநாயகன் கோபி சிங்கப்பூரில் இருக்கிறான். அழகான கண்ணாடி கட்டிடங்கள்,புது மனிதர்கள்,புது வித வேலைகள் என்று அவனுடைய வாழ்க்கை சற்று மாறி இருந்தது. அவ்வப்போது தன் மனைவி லதாவுடன் போனில் உரையாடுவான். அன்று அப்படிதான். “என்ன லதா போனே எடுக்கலை நான் உனக்கு கால் பண்ணிட்டே இருந்தேன்” என்றான் கோபி. வெளிநாட்டில் இருப்பதால் சில மணி நேரங்கள் இந்தியாவுக்கும் அவன் வசிக்கும் இடத்திற்கும் வித்தியாசம் […]
Readmoreஅத்தியாயம் -10 கண்ணாடி முன்பு நின்றுக்கொண்டு தன் வயிற்றை தடவிப்பார்த்துக்கொண்டிருந்தாள் யுவராணி. ‘நாமளும் இன்னும் கொஞ்ச நாள்ல கன்சிவ் ஆயிட்டா எவ்ளோ நல்லாருக்கும் ‘ என்று நினைத்துக் கொண்டிருந்தாள். பின்னாடியிலிருந்தபடி அவளை கட்டிக்கொண்டான் கௌதம். “என்ன யுவி கண்ணாடி முன்னாடி நின்னு என்ன பண்ற” என்றபடி அவள் வலது தோளில் முத்தமிட்டான். “அது வந்து சும்மா கண்ணாடி முன்னாடி நின்னு கற்பனை பண்ணிட்டு இருந்தேன். லைக் எப்படினா நான் கன்சிவ் ஆனா எப்படி இருக்கும்னு “என்று சொல்லி […]
Readmoreஅத்தியாயம் -9 “இப்போ தான் உனக்கு இந்த அண்ணி ஞாபகமே வருதுல ” என்றாள் லதா எதிரில் நிற்கும் மைத்துனனை பார்த்து. “அப்படி இல்லை அண்ணி , இந்த விஷயம் யார்கிட்ட சொல்றது தெரியலை. வீட்ல சொல்ல பயமா இருக்கு ஆனால் இதை எப்படியாச்சும் சொல்லியே ஆகனும் அதான் உங்க மூலமா சொல்றேன்” என்றான் கார்த்திக். “சரி விடு நீ எதுக்கும் கவலைப்படாத நான் பாத்துக்கிறேன் ” என்று அவனை அனுப்பிவிட்டு வீட்டினுள் […]
Readmoreஅத்தியாயம் -8 திருமண வாழ்க்கையில் கனவுகள் பல கொண்ட பெண்களின் வாழ்வில்,ஒரு பக்கம் குடும்பம்,இன்னொரு பக்கம் மறக்க முடியாத நினைவுகள் இதற்கிடையில் அவர்களுக்கென்ற தேடல் என்று கடைசி வரை போராட்டம் தான். அந்த போராட்டத்தை வென்று அவர்கள் ஒவ்வொரு நாள் துவக்கத்தில் சிரிப்புடனும்,ஒவ்வொரு நாள் முடிவில் ஏக்கங்களுடனும் கடந்து வருகின்றனர். ‘கௌதம் பற்றி சொல்லலாம்னு நினைக்கிறப்ப அவரு தடுத்துட்டாரு இப்போ இவர் கிட்ட ஷேர் பண்ணலாமா வேணாமா?’ என்று யோசனையுடன் இருந்தாள் லதா. சரி […]
Readmoreஅத்தியாயம் -7 அறையை விட்டு வெளியே வந்ததும் அங்கு கூச்சல் சத்தம் இன்னும் அதிகமாக கேட்டது கூட்டத்துக்கு நடுவே ஒரு பெண்ணின் குரல் அதுவும் இளம் பெண்ணின் குரல்.. “ஐயோ என்னை விடுங்க…ஆமா நான் தான் பண்ணேன் அப்படி, இப்போ என்ன அதுக்கு!. எல்லாம் என் லவ்வரை இங்க வரவழைக்க தான் அப்படி பண்ணேன்”என்று குரல் கொடுத்தப்படி இருக்க , அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு கோபியும் அவனது நண்பனும் நோட்டமிட்டனர். அங்கு […]
Readmoreஅத்தியாயம் -6 ‘ஐயோ இவ வேற கேள்வி கேட்டுட்டு தூங்கிட்டாளே கிராதகி,இப்ப நான் என்ன பண்ணுவேன் ‘ என்று யோசித்தவன்,சரி கொஞ்ச நேரம் டிவியை பார்ப்போம் என்று வால்யூம் கம்மியாக வைத்து நியூஸ் சேனலை பார்த்துக்கொண்டு இருந்தான். “வணக்கம். முக்கியச் செய்திகள் கோவாவில் தங்கியிருந்த இளம்பெண் ரித்விகா, மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார், இதன் தொடர்பாக விசாரணை நடந்துக்கொண்டு இருக்கிறது. போனவாரம் இவருடன் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது” என்று […]
Readmore